வெள்ளி, 17 ஜூன், 2016

பால் பால்யம்

இப்போது பால் என்பதற்கும் பால்யம் என்பதற்கும் உள்ள தொடர்பினைச் சற்று சிந்திப்போம்.

பால் என்பது பாகம் அல்லது ஒன்றன் பகுதி என்று பொருள்படுகிறது. எனவேதான்  திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் அல்லது காமத்துப்பால் என்ற பகுப்புகள் உள்ளன. இவை நூல் பகுப்புகள்.  நூலின்   உள்ளமைப்புகளுக்கு அத்தியாயம் என்ற பெயரும் உள்ளது.  ஓர் அத்தியாயம் முடிந்து, இன்னோர் அத்தியாயம் தொடங்குகிறது.  இதை உணர்ந்துகொண்ட பாணப் புலவனாகிய பாணினி ஓர் அத்தியாயம் அற்று இனொனோர் அத்தியாயம் இயைகிறது என்று அறிந்துகொண்டான்,  அறியவே அற்று > அத்து,  இயை  : இன்னொன்று தொடங்குபடி  ஆயம் :  ஆயது,  ஆனது என்று மூன்று சிறு சொற்களை இணைத்து அத்தியாயம் என்ற சொல்லைப் படைத்தான். இது ஓர் அழகிய சொல். ஆக இச்சொல்லின் அமைப்பிலிருந்தும் தமிழே மூல மொழி என்பது அறிந்துகொள்ளலாம், வேலை போய்விடுமே என்று பயந்து சில பேராசிரியர்கள் இதைச் சொல்லமாட்டார்கள்.  பாண்>  பாணன்;  பாண்> பாணினி, இவன் பாணர் பரம்பரையினன், அறிஞன்.

நூலின் பகுதி பால் என்றோம்,  அதுபோலவே  ஆன் என்னும் பசுவின்
உடலூற்றின் பகுதியே  பால் என்பதும் ஆகும்.  பால் ஆனின்  உடலினின்று பிரிந்து வருவது அன்றோ?

சொல்லமைப்புப்  பொருள் :  பகுதி = பால். பகு + அல் = பால்;  முதனிலை நீண்டு  குகரம் கெட்டது .   பகுதி = பாதி  என்பதிலும் முதனிலை  நீண்டது;   குகரம்  மறைந்தது.    திகரம்  இயல்பாய்  நின்றது.

பகு + அ  =  ப அ  >  பா .
ப அ = ப் அ அ =  ப் ஆ = பா ,  .Got  it  ?   This is quite  basic.

( We have to explain for those who do not comprehend at once.  Pl bear with us ).

பால் பெரும்பாலும் குழந்தைகட்கு உணவாகிறது,  குடித்த பால் கொடும்பில் இருக்கிறது என்பார்கள். பால் குடிக்கும் வயது என்பார்கள்.\\இக்கருத்திலிருந்தே பால்யம் என்ற சொல் அமைந்தது. பால்  இ  அம்  > பாலியம் >  பால்ய .   பாலன், பாலா என்பவெல்லாம் இதிலிருந்தே பெறப்பட்டவை.

 உறு என்ற சொல்லினின்று உறவு வந்ததுபோலுமே  பெறு என்ற சொல்லிலிருந்து  பெறவு என்ற ஒரு சொல்லை அமைத்தோமானால் பாலன் பாலா என்பன போன்றவற்றை நாம் பெறவுகள் என்று குறிக்கலாம்.

Author's edit  note:
Error (typo) :   உடலின்று   corrected to -   உடலினின்று.
Problem detected on the computer we are using now . Cursor jumps to unintended  locations. Types in unwanted places in the draft.  This is being looked into.

வெள்ளைப் பெண்ணால் வந்த வேதனை

இன்று சங்ககாலப் புலவர் சத்திநாதனாரின் சிந்தனையூட்டும் ஒரு சிறு பாடலைக் குறுந்தொகை என்னும் நூலிலிருந்து பாடி இன்புறலாமே!

இந்தப் பாடல் கூறுவது ஆண்மை மிக்க ஓர் இளைஞனைப் பற்றியது. இவனொரு வெள்ளை நிறமுள்ள அழகிய பெண்ணைக் கண்டான். இவள் உயர்ந்த குடிப்பிறப்பு உடையவள் என்பது பாடலிலிருந்து போதருகின்றது.
அழகான இதழ்கள்; இளம்பிறை போலும் எயிறுகள். மயக்கும் இளமுறுவல்.
இத்தனையும் இன்னும் பல் கவின்களும் உடையாள் இவள்.

இவளை எதிர்கொண்டு நட்புற்று அணுக்கமானபின் இந்த இளைஞன் முன்போல் தெளிவாக இல்லை.  ஏதோ இவனைப் பற்றிக்கொண்டது போல‌
அதனால் இவன் தடுமாறித் திரிந்துகொண்டிருந்தான். இதைக் கவனித்து இவனைக் கேட்க, இவன் கூறினான்:  ஓரு வெள்ளைக் குட்டிப் பாம்பு என்னைக் கடித்துவிட்டது; அதனால் துன்பத்தில் வீழ்ந்துவிட்டேன் என்று,
பெண்ணைக் குட்டிப் பாம்பு என்று இவன் கூறியதனால்  இவள் ஒரு பதின்ம அகவைப் பெண் என்பது பெறப்படுகிறது.

இனிப் பாடலுக்கு வருவோம்.

தொடரும்

வெள்ளைப் பெண்ணால்  வந்த வேதனை   will continue

வியாழன், 16 ஜூன், 2016

திருலோக சந்தர் மறைவு .

திருலோக சந்தரவர் மறைந்து   விட்டார்
திரைகளிலே பெயர்கண்டு தெரிந்தோர் பல்லோர்
பரலோகம் படர்தலுக்கும் வயதும் உண்டோ
பார்ப்போருள் நான்நீஎன் றியார்க்கும் நன்றே
இருலோகம் கால்வைத்தும் இருக்கும் தன்மை
இதுபிழையா தென்பதுவே உளது காண்பீர்
தரவேணும் மரிநாள்மேல் தாவும் காறும்
தமிழுக்கோர் நலம்தன்னைச் செய்தார் என்பர்

காணொளியில் யாமறிந்தார் கருதும் காலை
கல்விகலை நலம்செய்தார் கணக்கில் நண்பர்
மாணுறவே ஆள்கண்டோர் உளரோ இல்லை
மடிக்கணினி தாளிகைக்குள் மண்டி நிற்பார்
வீணுறவே பூண்காலம் கழிந்தி டாமல்
விளைத்திட்டார் கலை யின்பம்  இன்னோர்  எல்லாம்;
சாணளவே பயனெனினும்  முழமாய்க் கொள்வோம்
சாவினையே மேவுறினோ வீழ்புன் கண்ணீர்.


மாணுறவே ஆள்கண்டோர் உளரோ -அதாவது  என் வட்டாரத்தில் இவரை நேராகக் கண்டோர் யாருமில்லை.
பூண்காலம்:  பூணும் காலம் . நாம் பொருந்தி வாழும் இக்காலம் .
அதாவது   நாம் காலத்தின் வாயில்  அகப்பட்டது   -  அகவை;   நாம் வயப்பட்ட  அல்லது  நமக்கு வைக்கப்பட்ட காலம் வயது.  அதன்பின் நாம் சென்றுவிடுவோம்.  காலம் நம்மை இப்போது அணிந்துகொண்டிருக்கிறது,  பூணுதல் -  அணிதல்.  அல்லது நாம் காலத்தை அணிந்துகொண்டிருக்கிறோம் . அதனால் நாம் வயது குறித்துக்கொள்கிறோம்.  இந்த   இரு கருத்தும் பொருந்துவது  "பூண் காலம் "  என்னும் தொடர்.

புன்கண்ணீர்  -  துன்பக் கண்ணீர் .

தலைப்பு: திருலோக சந்தர் மறைவு