வெள்ளி, 22 ஏப்ரல், 2016

poetry topic: DEATH OF WIFE.

வண்ணான்  ஆடை  துவைத்தல்  தப்புதல்  என்றும் சொல்லப்படும். ஆகவே வண்ணான் தப்பிப் பிழைக்கிறான் எனில் அதன் பொருள் தெளியக்கூடியதே.1

குற்றவாளி தப்பிவிட்டான்  என்று காவலர் கூறுவதுண்டு.  இதற்கு  "escaped" -- நேரான ஆங்கிலச்  சொல் .

பயனற்றுப் போவது,  பிறழ்வது,  காணாமற் போதல், விலகுவது ,   பிழை செய்வது,  தவறுவது,  விட்டுப்போவது,   இடர்  நீங்குதல் ,  இறப்பது  எனவும் பொருள் தரும் "தப்புதல் "  பலபொருள் ஒருசொல். இப்பொருள்கள் வரும் வாக்கியங்களைக்  குறிப்பில் வைத்துக்கொள்ளுங்கள்.

தப்புதல் (இறத்தல்)  என்பது,  தபுதல் என்று இடைக்குறையும்  2.  இதில் ஒரு பகர ஒற்று ஒழிந்தது.   என்னில் > எனில்;  இல்லாது > இலாது  என்றெல்லாம் வருவன போலவே.

தாரம் என்பவள் கணவனுக்குத்  துணை தருபவள்;  பிள்ளைகள் தந்து குடும்பம் போற்றுபவள்.  தாரம்  : முதனிலை  திரி  தொழிற்பெயர்.

தபுதாரம் -   தாரம்  இறத்தல்.   இது குறித்த பாடல்.

இது தொல்காப்பியத்தில்  தபுதார நிலை எனப்பட்டது.

தபுதாரம் -  வினைத்தொகை.   தாரம் த(ப் )புதல்.

இது குறித்த பாடல் ; அதில் வரும் வரணனை .


1.  தமிழ்க் களஞ்சியம்  -   அறிஞர்  க. ப. மகிழ்நன்  .  
       ( "மகிழ்நன் பேசினார்;  அவரே சங்க இலக்கியம்; சங்க இலக்கியமே அவர்"  என்று  திரு வி க  அவர்களால் புகழப்பட்டவர்.    ) 
2   மறைமலையடிகள்.

இது  பிற அறிஞரால் விளக்கப்பட்டது.  அதனால் அவர்கள் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளேன்.

will edit,

Ind: விருந்தா வனமும் தேர்தல் களமும்

விருந்தா வனத்துப் பச்சையும் பூக்களும் விருந்தா  வனதேன்  ஈக்கண்களில்
அருந்தா மனத்தோ டங்குமிங்  காகவே பறந்தன பறந்தன தேடலிலே

பொருந்தும் ஒருபூ பூத்தவை தம்மிலே எந்தப் பூவதோ சொந்தமுற.

இருந்தது அங்குசென் றிணைந்ததும் ஒழிந்தது வருந்துதல் தேனீ அருந்தியதே.



தேர்தல் களமென்ன விருந்தா வனமோ
வேட்பா ளர்களும் பூக்க  ளாமோ
ஊர் வாழ் மக்களும் தேனீக்கள் தாமோ  
ஆர்தேன் பெறாவிடில்   நீர்விழியோ

கடல் குடித்த மாமுனிவர்!


http://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_21.html

தொடர்வோம்:

பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடு யாவும்
கடல் கொண்டது.    கடல்கோள் நிகழ்ந்ததாகவே தமிழ் நூல்களும் சங்கத நூல்களும் குறிப்பிடுகின்றன. அண்மையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயமொன்று தென்கடலில் கண்டுபிடிக்கப்பட்டது. நாம் குறிப்பிடுவது, ஏறத்தாழ் 5000 ஆண்டுகட்குமுன் நடந்த கடல்கோள். பின்னும் நிலத்தை விழுங்கிய கடல்கோள்கள் நிகழ்ந்தன என்பதையே பின்னாள் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன.

இரண்டாம் சங்கமும் தமிழ் நூல்களும் அழிந்தபின், தொல்காப்பியர்
தம் இலக்கண நூலை இயற்றினார். தொன்மையைக் காக்க இயற்றினதால் அது தொல்+ காப்பு+  இயம்  = தொல்காப்பியம் என்று பெயரிடப்பெற்றது.
அப்போது அகத்திய முனி எங்கிருந்தார் என்பதற்குத்   தொல்காப்பியத்தில் ஆதாரமில்லை. அதாவது ,பாயிரமோ எந்த நூற்பாவுமோ  அகத்தியரைக் குறிப்பிடவில்லை. இருந்தாலும்
அகத்தியர் தொல்காப்பியரின் ஆசிரியர் என்றும் அவர் அப்போது அங்கிருந்தார் என்றும் வைத்துக்கொள்வோம்.  தமிழ் என்ற சொல்லும் அமிழ் என்ற சொல்லினின்று அமைந்தது என்றும் வைத்துக்கொள்வோம். தொல்காப்பியம் இயற்றப்பட்டபின் வெகுகாலத்துக்குக்  குறிப்பிடத் தக்க  கடல்கோள் யாதுமில்லை.

 அப்போது மீண்டும் கடல் பொங்கும் என்று எதிர்பார்த்திருந்த தமிழ் மக்கள், அது பொங்கவில்லை என்று கண்டனர்     பொங்காதது ஏன்
என்று வியந்திருக்கலாம்.  அகத்தியர் கடலைக் குடித்துவிட்டதால்
பொங்கவில்லை என்று எண்ணி, அவருக்குக் கடல் குடித்த மாமுனி
என்று பெயரிட்டிருக்கலாம் என்று  சொன்னால்  அது நம்பிக்கையினால் சொன்னதென்று விடல் தகும். நாளடைவில் இதைச்சுற்றித் தொன்மக் கதைகள் புனைவுற்றிருக்கலாம்.

அங்ஙனமாயின் கடல்குடித்தமைக்கு ஒரு காரணம் கிட்டுகிறது.
ஆனால் முன் இடுகைக் கருத்துக்களுக்கு அது இசைவாகுமா என்பதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்.