சனி, 9 ஏப்ரல், 2016

CONDOLENCES:FOR DEAD IN PUTTINGAL DEVI TEMPLE FIRE KERALA

கொல்லம் புத்திங்ஙல்  தேவி  ஆலயத்துப் பட்டாசுத்  தீயில் 90 பேர் கொல்லப்பட்டனர். (by 1015 hrs)  பலர் காயமடைந்தனர்   இப்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இறந்தோருக்கு நம் இரங்கல் .

காயமடைந்தோர் விரைவில் நலம் பெற இறைவனை  இறைஞ்சுவோம்..  




தேவி திருவிழவில் தீமாண்டோர் ஆவியுமே
மேவுக நல்லமைதி மிக்கு .

தேவியின் சோதனை தாங்கொணாத வேதனை 
கோவம் தணிகவென்று தொடர்கபற்றுச்  சாதனை. 

விழவு = விழா.


EDITED.

சீக்கிரம் என்ற சொல்

இப்போது சீக்கிரம் என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.  இது தமிழன்று என்று சொல்லப்படினும் இதன் அடிச்சொற்கள் தமிழாக உள்ளன.

சீ என்பது சீர் என்ற தமிழ்ச்சொல்லின் கடைக்குறை, ரகர ஒற்று இறுதியில் நின்றால் அது பேச்சு வழக்கில் மறைந்துபோவது பெருவழக்காதலின் அதை இப்போது விரிக்கவில்லை.

கிறங்குதல் என்பது அசைதல் என்ற பொருள் உடையது, இதன் அடிச்சொல் கிறு என்பது. கிற்புறுதல் கிற்றல் என்பனவும்   கில் > கிறு என்ற அடியில் தோன்றியனவே ஆகும். கில் >  கிரு  எனினுமாம் .

கிறு+  அம் =  கிறம் ஆகிறது. இதன் றுகரம் ருகரமானால் கிறு> கிரு+ அம் = கிரம் ஆகும்.

சீ  + கிரம் =  சீக்கிரம் ஆகும்>

இது சீராக அசைதல், எதிர்பார்ப்புக்கு ஏற்ப அசைதல் இயங்குதல் என்று பொருள்பெறுகிறது.

உண்மையில் இது சீர்க்கிறம் பின்னர் திரிந்து சீக்கிரம் என்று இதன் அடிச்சொற்கள் யாவை என்று அறியாத நிலையில் வாத்தியார்களால் எழுதப்பட்டுத் தமிழன்று என்று கருதப்பட்டுள்ளது. பின் பிறமொழிகட்குப் பரவியிருக்கின்றது,

இப்போது இது விரைவு குறிக்கிறது.  எதிர்பார்க்கும் வேகக் கூடுதலே சீக்கிரம்


கல்லாடனார் குறிக்கும் மரங்கள்

இதைத்  தொடர்வோம்:

http://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_8.html


வழையம லடுக்கத்து     
கன்றில் ஓர் ஆ விலங்கிய
புன்றாள் ஓமைய சுரனிறந்  தோரே.=----  கல்லாடனார் 

அவர்தம் குறுந்தொகைப் பாடலில் ஓமை மரம்பற்றிக் குறிப்பிடுகிறார். இதன் குச்சியைப் பல்துலக்க பயன்படுத்தலாம் என்பதால் இதை பல்குச்சி மரம் (tooth brush tree )  என்றும் சொல்வர்.  சல்வடோரா பெர்ஸிகா  1   என்ற
தாவரவியற் பெயரையும் உடையதாகும் இது. கீதா மணவாளன் முதலிய இந்திய அறிவியல் ஆய்வாளர்கள் இதில் மருத்துவக் குணங்கள் அடங்கியுள்ளன என்பதாகவும் குறிப்பிடுவர். நபி நாதர் இதனைப் பலதுலக்க பயன்படுத்துமாறு பரிந்துரை செய்துள்ளார் என்று அறிகிறோம்.  மேல்விவரங்களுக்கு விக்கிபீடியாவைப் பார்க்கவும்.
ஓமை என்பது மாமரத்தையும் குறிப்பதாகக் கூறப்பட்டாலும்  கல்லாடனார் பாலையைக் குறித்திருப்பதால், இந்தப் பாடலில் மாமரம் பற்றியதொன்றுமில் லை என்று கருதவேண்டும்.

வழை :  gamboge

வழை என்னும் மரத்திலிருந்து காவி நிறப் பிசின் எடுக்கப்பட்டு, துறவிகளில் உடைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரத்தையும் புலவர் குறிக்கிறார்.

இவற்றைப் பாடலுடன் அடுத்துக் காண்போம்.

தொடர்ந்து வாசிக்க:

தொண்டைமான்களின் அரசின் சிறப்பு

http://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_91.html

-------------------------------------------------------------------------------------

1  Salvadora persica (ArakGalenia asiaticaMeswakPeeluPīlu,Salvadora indica, or toothbrush treemustard treemustard bush)