ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

Tamils in Sumeria : Researcher no more.

சுமேரியாவில் தமிழர்கள்  இருந்தனர்  என்பதை பெரும்பேராசிரியர் மறைமலையடிகள்  கூறிச்சென்றார். தமிழர் வணிகத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், பல நாடுகட்கும் சென்று தம் வணிகததை வளர்த்து நிலைபெற்றிருந்தனர் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றுக் கருத்தாகும்.

இவர்கள் தமிழகத்திலிருந்தோ  குமரி நாட்டிலிருந்தோ அங்கு (சுமேரியா)   சென்றனர் என்பதே  முன் நாம் அறிந்த வரலாறு.

மலேசியா பினாங்கு அறிஞர்  முனைவர் லோக நாதன் என்பார், சுமேரியாவேதமிழர் பிறந்தகம் என்பார். தமிழர் அங்கிருந்து தமிழகம்
சென்றேறினர் என்பார்.

சுமேரிய மொழியிலும் தமிழிலும் காணப்பட்ட சொல்லொற்றுமைகளை அவர்  அடித்தளமாகக் கொண்டு,  அவர் தம் தெரிவியலை (theory)   மெய்ப்பிக்க முனைந்தார்.

இத் தமிழறிஞர் ஏறத்தாழ மூன்று நாட்களுக்கு முன் மறைந்துவிட்டார்  (Age more than 70). நமது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தெரிவியல்கள் யாவும் நன்கு ஆய்தற்குரியனவே.

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

சமஸ்கிருதம் வாங்கியுள்ள கடன்களை............

கீழ் குறித்த ஆய்வாளர்  இந்தி, மற்றும் உருது மொழிகளின் செயற்கையான பிரித்துணர்வைப் பற்றி நூல் எழுதியுள்ளார். ஆஸ்திரிக்  மற்றும் முண்டா மொழிகளிலிருந்து சமஸ்கிருதம் வாங்கியுள்ள கடன்களை விவரித்துள்ளார்.

படித்துப் பயன் பெறலாம்.

நூற்பெயர்:

Urdu/Hindi: An Artificial Divide: African Heritage, Mesopotamian Roots ...

 By Abdul Jamil Khan



1928-ல்  ஒரு கூட்டத்தில் உரையாற்றுகையில்  டாக்டர்  எஸ்.கே. சாட்டர்ஜீ ( மொழி ஆய்வறிஞர்)  கூறியதையும் இவர் நினைவு கூர்ந்துள்ளார்.  ஆஸ்திரிய மொழிகளிலிருந்து பல சொற்களைச் சமஸ்கிருதம் கடன்கொண்டது.  பின்பு  இது பேசிய மக்கள் .  இந்துக்களாகவும்  முகமதியர்களாகவும் மாறி   ஆரிய மொழிகளைப் பேசும் மக்களாய்  சாதிப்  பிரிவுகளோடு அமைந்துவிட்டனர்  என்று அவர் கூறியது குறிப்பிடப்படுகிறது.



சிந்து நதியின் பெயரில் உள்ள  " ஸ்",  அப்பால் பாரசீகப் பகுதிகட்குள் நுழையுமானால்," ஹ்" என்று  மாறிவிடுமென்பதும்  இங்ஙனமே  சிந்து என்பது ஹிந்து ஆனது என்பதும்,  மேலும் க என்ற ஒலியும் ஹ என்றே மாறும் என்பதும்  சொல்லப்பட்டுள்ளது, இது நேயர்கள்  அறிந்ததே.  ( இந்த சிந்துச் சொல்,  சமஸ்கிருதமன்று, ஒரு மெல்லிய துணிவகையின் பெயர் என்பார்  பி டி சீனிவாச ஐயங்கர்.) , 

சில் என்ற அடிச்சொல் சிறுமை குறிக்கும் தமிழ்ச் சொல்.


சில் > சின் >  சிந்து.  ஒ,நோ:-    


பல் >  பன் > பந்து> பந்தம்.  ( பற்றும் உறவு என்று பொருள்.)


மற்றும்  மன் + திரம்  = மந்திரம்.        ( ன் + து  > ந்து ;   ன்  + தி  = ந்தி   )



கங்கை ஆறு குறிக்கும் கங்கா என்ற சொல்லும்ம் ஆஸ்திரிய மொழியினுடையது என்றும் அது  பலவேறு வடிவங்களில் ஏனைத்  தென் கிழக்காசிய-  கிழக்காசிய மொழிகளிலும் ஊடுருவியது என்றும் விளக்கப்படுகிறது.  இந்த ஆஸ்திரியச் சொல் "ஆறு" என்று மட்டும் பொருள் படுவது.  அதுபின் கங்கை  ஆற்றின் இடுபெயராய் ஆகிவிட்டது என்றும் விளக்கம் அளிக்கிறது   இந் நூல் . சமஸ்கிருதம் இந்த அடைவினைப் பின்பற்றியது. 


(உருசிய மொழியில் ஆற்றுப் பெயர்கள், தமிழினுடன் ஒப்பீடு செய்து நான் முன் எழுதியதை இங்கு  ஒப்பிடுக.)  பொதுப் பெயர்ச் சொல்லாய்   இருந்து பின் இடுபெயராய் வடிவு கொண்டமை அறிக.

  எழுத்து மாற்றங்கள் (பின் திருத்தப்படும்)





புதன், 15 ஏப்ரல், 2015

THE SIGNIFICANCE OF SEVEN

ஏழில்  தொடர்பெழுகை( 7: significance)

இந்தச் சொல்லின் அமைப்பைக் கவனிப்போம்.

ஸப்த =   ஏழு.   (எண்ணுப்பெயர்).   சந்தியில்  இது ஸாப்த என்று நீண்டது.

பாதம் =  அடி.   இதன் அடிச்சொல் பதி என்பதே.   பதிதல் - தமிழ்ச்சொல்.  பதி+அம் = பாதம்.  முதனிலை திரிந்து விகுதி பெற்ற தொழிற்பெயர்.  இது பதம் என்று முதலெழுத்து நீளாமலும் அமையும்.

"பதிபதம் பணிவது நமது கடன்" என்ற வாக்கியத்தை நோக்கவும்.


ஸப்த + பத + இன் + அ
ஸாப்த + பதீ + இன் + அ
ஸாப்தபதீன (ம்).

சந்தியில் பதி  இன்  அ  என்பது பதீன  என்றாயிற்று.

ஸப்த என்பது சமஸ்கிருதச்சொல்.
பத(ம்)  என்பது தமிழ்.   அங்கு சென்ற சொல்.
(காரணம்  பதிதல் தமிழ் வினைச்சொல் .)
இன் என்பது உடைமை குறிக்கும் தமிழ் இடைச்சொல்.
அ என்பதும் உரியது என்று பொருள்தரும் தமிழ் இடைச்சொல்.

ம்(அம்) என்பது வருவிக்கப்பட்டது.

ஆகவே,  "ஸாப்த பதீன(ம்)" தமிழ் கலந்த வடசொல் ஆயிற்று.

முடிவு:  ( தமிழ்ச் சொற் கலப்பு  இருப்பினும்  )  இது வடசொல்.

ஏழு என்னும் எண்ணுப்பெயர், எழுதல் என்னும் வினையடித் தோன்றியிருத்தல் பொருத்தமே.    தொடர்புகள் ஏழில் எழுமென்று தமிழ் எண்ணுப்பெயரின் தோற்றம் கொண்டு  ஊகித்துக்கொண்டு,
 இச்சொல்லுக்கான கருத்தை உருவாக்கியுள்ளனர்.

ஏழில்  தொடர்பெழுகை