துறை: செந்தறைப் பாடாண்பாட்டு
செந்தூக்கு.continued from previous post (click)
http://sivamaalaa.blogspot.com/2014/07/blog-post_39.html
உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும்
பிறர்க்கு நீ வாயின் அல்லது நினக்குப்
பிறருவமம் ஆகா ஒருபெரு வேந்தே!(மூன்று வரிகள் விடப்பட்டுள்ளன,
ஓர் அடி சிதைவு)
'''''''''''''''''''''
மருதம் சான்ற மலர்தலை விளைவயல்
செய்யுள் நாரை ஒய்யும் மகளிர்
இரவும் பகலும் பாசிழை களையார்
குறும்பல் யாணர்க் குரவை அயரும்
காவிரி மண்டிய சேய்விரி வனப்பின்
புகார்ச் செல்வ! பூழியர் மெய்ம்மறை!
கழைவிரிந்து எழுதரு மழைதவழ் நெடுங்கோட்டுக்
கொல்லிப் பொரு ந! கொடித்தேர்ப் பொறைய, நின்
வளனும் ஆண்மையும் கைவண்மையும்
மாந்தர் அளவு இறந்தன எனப் பல் நாள்
யான்சென் றுரைப்பவும் தேறார்; பிறவும்
சான்றோர் உரைப்பத் தெளிகுவர் கொல்? என
ஆங்கும் மதி மருளக் காண்குவல்;
யாங்கு உரைப்பேன் என வருந்துவல் யானே!
அரும்பொருள் : முன் எழுதிய விளக்கத்துடன் இணைத்துப் படிக்கவும் )
உரவோர் = வலிமை பொருந்திய உள நிலையும் சிந்தனையும் உள்ள மேலோர்.
மடவோர் = பெண்டிர் ;
வாயின் அல்லது - தேடி வரும் இடமல்லது '
\
மருதம் - உழவு நிலப் பகுதி ;
மலர் தலை = அழகிய இடம்
விளைவயல் = விளையும் வயல்
செய் = ஈர நிலம் ; உள் = (நிலத்து) உள்.
ஒய்யும் - ஒலி செய்து விரட்டும்
பாசிழை - அணிகலன்கள்;
குறும்பல் = சிறு பற்கள் (புன்னகை)
யாணர் = அழகு; -குரவை : ஒரு கூத்து.
புன்னகை அழகுடன் ஆடும் குரவைக் கூத்து; அயரும் = முயன்று ஆடும்.
காவிரி = (ஆறு.) மண்டிய - நிறைந்த;
சேய் = செம்மை ; விரி - விரிந்து காண்கின்ற.\\வனப்பு - அழகு;
புகா அர்ச் செல்வ -- புகார் நகருடைய செல்வனே
பூழியர் = சேரர் மெய்ம் மறை = இது நாள் வரை மறைவாய் இருந்து இப்போது தன்னைக் காட்டிக்கொண்டவனே ! (விஸ்வ ரூபனே ) உண்மை மறைபொருளே
கழை - மூங்கில் எழுதரு மழை - எழும் மழை முகில்கள்.
நெடுங்கோடு = நெடு மலை(த் தொடர்)
கை வண்மை - கொடை தாராளம் ஆனது;
மாந்தர் அளவு இறந்தன - மனிதர்கள் அளவு அல்லது வரைகோட்டினைக் கடந்துவிட்டன '
தேறார் = தெளிய மாட்டார்.
தெளிகுவர் கொல் = புரிந்து கொள்வரோ?
அடுத்த இடுகையில் தொடர்கிறது.
Previous:
http://sivamaalaa.blogspot.com/2014/07/blog-post_39.html