செவ்வாய், 27 மே, 2014

தைரியம்

தையல் என்பது அடிப்படையில் ஒன்றில் மற்றொன்றைப் பிணைத்தல், இணைத்தல் என்றெல்லாம்  பொருள்படும்.  துணிகளை இணைத்து ஆடைகளை உருவாக்கும் கலையை இது   இன்று குறிக்கிறது. தையலூசி. தையற்பொறி, தையல் இயந்திரம் என்பன அக்கலைக்குரிய துணைக்கருவிகள்.

ஒன்றில் மற்றொன்று இணையும்போது, அவை ஒன்றாகி மேலும் திடம்பெறுவன ஆகின்றன.

சிவனுடன் இனைந்து ஒன்றாகிப்   பேராற்றல் ஆகிவிட்ட நாயகி, தையல் நாயகி ஆகின்றாள். உறையூற்றித் திடமாகிவிட்ட  காய்ச்சிய பால் "தயிர்" ஆகிறது.

தை > தய் > தயிர்.

இது: பை > பய் >பயிர் என்ற  அமைப்பினைப் பின் பற்றியது.
      பை > பய் > பயல்.  (அல் விகுதி).
      மை > மய் > மயல்.  (அல்)  மை > மையல் எனினுமாம்.

பை -  இளமை . பை > பயல்.  பை < பையன்.

மனத்தில் உறுதி வந்தினைந்தால்,  தை > இரு+ இயம் = தைரியம் ஆகும்.
இகரம் கெட்டு "ரி" ஆனது.   :இரு+ இயம் > இரியம்>  ரியம்..


இதைத் தைரியம்  (dhairiyam)   என்று எடுத்தொலிக்க   வேண் டாம்.

தைரியம் :  திட இணைப்பு என்று பொருள்படும்.

திங்கள், 26 மே, 2014

மோடி நாடிடும் அனைத்தும் நலமோடுயர்க!

மோடி பதவி ஏற்பு

(வஞ்சிப்பா)

பதவி நிற்புறுதி
படிக்கையிலே சொற்பிழ்ச்சி
பதட்டமோ ஏதுமின்றி
பண்புடனே விண்பயந்த‌
நக்கத் திரத்தினைப்போல்
ஒக்க நிற்பார் கையொலியை
உடன்பெற்ற மோடியுமே
நடமுற்றார் நம் மனத்தில்.
நல்லாட்சி வருமெனற்குப்
பல்லாற்றானும் குறிப்பே!
பிறமதத்துத் தேயங்களில்
பிறங்கிடும் தலைவர்கள்,   தம்
திறங்காணும் விதமாக‌
மதப்பித்தம் சிதல்படவே
மாட்சியுடன் மேற்செலுத்தும்
காட்சியும் புகழரிதே!

என்றிவற்றால்

கூடி வருமோர் கோடுயர் புகழுச்சி
மோடியும் மக்கள் முன்னே
நாடிடும் அனைத்தும் நலமோ டுயர்கவே.

பதவி நிற்புறுதி == பதவிப் பிரமாணம் .  விண் பயந்த -  வானம் தந்த
நக்கத்திரம் -  நட்சத்திரம்   பல்லாற்றானும் - பல வழிகளிலும் .
தேயம் -  நாடு. சிதல் - அழிவு.
என்றிவற்றால் ,   தனிச்சொல் .  பழம் பாடல்களில் எனவாங்கு என்று வரும்.
கோடுயர் -  மலை  உயர்ந்த .




ஞாயிறு, 25 மே, 2014

As long as Rajapakse is there......

நடுவண்நல் அரசின்பால் தமிழர் வேண்டும்
நல்லபல கோரிக்கை அவற்றுள் ஒன்று
கெடுவண்ணன் இராசபக்சே மோடி யோடு
கேணமையுறச் சந்தித்தல் கூடா தென்பர்!
மடுவுள்ளில் வீழாமல் இது நாள் காறும்
மதியுடனே தப்பிவிட்ட இராச பக்சே
இடுமன்றில் குற்றவாளி யாக நிற்பான்
என்றெவரும் திட்டமுறக் கூறற் கில்லை.

இத்தகைய சூழலிலே மோடி பேச்சை
எடுக்காமல் ஒதுங்குவதால் என்ன நேரும்?
ஒத்திருவர் பேசியுள்ள மாறு பாட்டை
ஒடுக்கத்தில் கொண்டுவரல் பயனுண் டென்பர்.
வித்திடுதல் இலையாயின் விளைவோ இல்லை.
வேறுபட்டு நிற்பதனால் சீர்பட் டங்கே
ஒத்துழைப்பும்  ஒருதீர்வும் இல்லா தாகும்.
ஓய்ந்தாய்ந்து பார்த்திடுதல் கடமை அன்றோ?

As long as Rajapakse is president, anything you want in Sri Lanka would have to be handled by him. Sad but true. It is the fact of  politics and diplomacy between states. Is there a way for Modi to circumvent this?