வியாழன், 10 ஏப்ரல், 2014

அத்தியாயம்.

முன் இடுகையில்  நாம் "அத்தியாயம் " என்ற சொல்லினைக் கண்டோம். இதற்குமுன் இதைப்பற்றிய ஒரு விளக்கம் எழுதியிருந்தேன்.  எங்கென்று தேடவேண்டும். இந்த இடுகையில்  இச்சொல் குறிக்கப்பட்டுள்ளது    .http://sivamaalaa.blogspot.com/2014/04/blog-post_10.html 

ஒரு  நூலில் ஒரு பகுதி முடிந்து, அதே நூலில் இன்னொரு பகுதி தொடங்கினால்  இது அடுத்த அத்தியாயம் என்போம். இதை ஆங்கிலத்தில் chapter என்பர் : இது உங்களுக்குத் தெரியும் .

இதற்கு ஒரு சொல் புனைந்து பார்க்கலாம்.

ஒரு பகுதி அற்றது.  அதாவது முடிந்தது. இருந்தாலும் நூல் இன்னும் முடியவில்லை. அடுத்த பகுதி அதனோடு இயைகிறது.

அற்று (ஒன்று முடிந்து)
இயை  (இன்னொன்று இயைகிறது).
அம்  என்ற விகுதி கொடுப்போம்.

அற்று + இயை + அம் .

ஆனால் பேச்சு வழக்கில் நாம் அற்று என்பதை அத்து என்றல்ல்லவா சொல்கிறோம்?

ஆகவே, 

அத்து+ இயை +அம் = அத்தியையம் .

யையையை என்று வந்தால் வாய்க்குத் தடையாய் உள்ளது. ஆக, யை என்ற எழுத்தைத் தூக்கி எறிக.  அதற்கு பதில் "யா"  போடுக.

ஆக,   அத்தியாயம்.

நன்றாக  இருக்கிறதா ?


Note:   I may look for my old writings when I have the time.  Some forums where I wrote them have closed down. Web masters gone, perhaps for good.  I too have to spend time looking for my own records. There are data charges too incurred. The best is to write anew.  If you have read it before, please bear with me.
I will edit later,

உபாத்தியாய - வாத்தியார்

உபாத்தியாய என்ற சமஸ்கிருதச் சொல்லுக்குப் பல பொருள் உண்டு.  வேதங்கள் வேதந்தாந்தங்கள், இலக்கணம் முதலிய சொல்லிக்கொடுத்து அது தரும் ஊதியத்தால் வாழ்பவர் என்பது ஒரு பொருள். இது ஒரு  கல்வி கற்பிக்கும் பெண்ணையும் (ஆசிரியை) குறிக்கும். மூன்றாவது பொருள் கற்பிப்போன் ஒருவனின் மனைவி என்பதுமாகும்,  சமஸ்கிருத நூல்களில் இச்சொல் வருங்காலை, இடம் நோக்கிப் பொருள் அறிய வேண்டும்.  ஆச்சார்யா என்பது வேறென்பர் சமஸ்கிருத ஆசிரியர்.

தமிழில் வழங்கும் வாத்தியார் என்பதற்கு இந்தப் பொருள்களெல்லாம் இல்லை. வாத்தி என்பவர்  வாய்மொழியாகக் கல்வி கற்பிப்பவர்.  வாய்> வாய்த்தி > வாத்தி > வாத்தியார்.  "வாய்  மூடு"   என்பதை "வா மூடு" என்பவர்களும் உள்ளபடியால், யகரம்   மறைதலின் இயல்புண்மை அறியலாகும். வாத்தியார் மனைவியை நாம் வாத்தியார் என்பதில்லை. ஆசிரியை என்பதை "வாத்திச்சி "என்பது சற்று "பணிவுக் குறைவு"டையதாய்த் தோன்றுகிறது . இது "வாத்தி ஸ்ரீ "  அன்று.  ஸ்ரீ  ஆயின் உயர்வு தோன்றுதல் வேண்டுமே !

அத்யாயிகா  வாசிப்போன்;   கற்போன்.

அத்யாயின்  மாணவன்.மாணவி.

அத்யாய     இது  நூற்பகுதி குறிக்கும். chapter of a  book.

உப +    அத்யாய‌ =  உபாத்யாய    -   வேத முதலியன போதிப்பவர் .

எனவே வாத்தியார் என்பது வேறு,  உபாத்யாய என்பது வேறு .

இவ்விரு சொற்களும் குழப்படி செய்யப்பட்டுள்ளன என்று புரிந்துகொள்ளல் வேண்டும்.

வாத்தியார் என்பது கொச்சை  உபாத்தியாயர் அதற்குச் சரியானது என்று நமது ஆசிரியர்கள் "தறுதலாகத் திருத்தியதன்" காரணமாக நேர்ந்த  குழப்பம்  இதுவாகும்.



புதன், 9 ஏப்ரல், 2014

நாடகம்

நாடகம் எனப்படும் சொல்லை ஆய்வோம்.

இச்சொல்லினுள்  நுழையுமுன் சில விதிகளை நாம் மனங்கொள்ள வேண்டும்.

இவற்றைக் கவனியுங்கள்.

படு >  பாடு.
சுடு  > சூடு.

படுதல் சுடுதல்  ஆகிய வினைகளினின்று  அமைந்த பெயர்களே   பாடு   சூடு  முதலியன.   முதனிலை திரிந்த (நீண்ட ) பெயர்களே.இவை

வினைச்சொல்லின் முதலெழுத்து நீண்டு பெயராய் மாறின.

காகிதம் போடு ,  காகிதம் ஒரு பொருள். அதைப் போடலாம்.
சூடு போடு .  சூடு ஒரு காணும்  பொருளன்று.  எனினும் சூடு என்ற சொல் ஒரு பொருள் போலுமே நிற்பது காணலாம்.

இவற்றுள் சில பின்னும் ஒரு விகுதி பெறுதல் உண்டு.  எ-டு   சூடம் .(அம் ).

இப்போது நாடகத்துக்குப் போவோம்.

நடி+ அகம்  =  நாடகம்.

இங்கு ந  என்பது நா  என்று  நீண்டது .  பின் நடி  என்பதன் இறுதி இகரம்  கெட்டது  (மறைந்தது).  அகம் என்ற விகுதி வர,  நாடகம் ஆயிற்று.

பாடம் என்பதும் அப்படியே.   படி என்பதில் இகரம் கெ ட்டது. பகரம் நீண்டது.
 அம்  சேர்ந்தது.

நாடகம் என்பதில் அகம் ஒரு விகுதியாய்க் கொள்வோம்.  அதை இன்னும் பிரித்துக் காட்டுதல் கூடும் எனினும் இப்போதைக்குத் தேவையில்லை என்று எண்ணுகிறேன்.