புதன், 24 டிசம்பர், 2008

"வெற்றுப்பாடலை" வெண்பாவாக்கும் கலை......!

[ சீரும் தளையுமில்லாப் பாடல்கள் சில, நன்றாகவே இருக்கக் காணலாம். அவற்றின் கருத்தோட்டத்தைச் சிதைத்துச் சொற்களையும் மாற்றி "வெண்பா" ஆக்கிவிட்டால்..... அதைப்பற்றியது இந்தப் பாடல்]

சீரும் தளைமற்றும் சேராக் கவிதைக்குள்
ஊறும் அழகை உருக்குலைத்து --- வாருமே
வெண்பா விளைந்திடக் காண்போம்; வெளிறிய
மண்பாவா னாலும் மதி.

இந்தி படிப்பதா வேண்டாமா?

(இன்னிசை வெண்பா)

விரும்பின் எதையும் படிக்கலாம் இன்றேல்
வெறும்பூவைச் சூட மறுக்கலாம் அஃதொப்ப,
உள்ளம் விழையாத எம்மொழியும் வேண்டாமே,
கொள்ளவே தக்கதைக் கொள்.

ஒரு கருத்துக்கள நண்பருக்கு எழுதியது:

(நேரிசை வெண்பா.)

ஆரூர்ப் பெயர்மாண்பீர் அண்மித்தீர் இத்திரியை
வேறூரில் வேலைமிக் கென்னவோ --- நேரிழப்பு?
மீண்டுமோர் சுற்று மிகக்கூர்ந்து கற்றுயர்ந்து்
தாண்டித் தடைதகர்ப் போம்.

எழுதித் தொடருங்கள் எம்மால் இயன்ற
பொழுதெல்லாம் இங்கு புகுந்து --- பழுதின்றிப்
பூக்கள் மணமொக்கப் பொன்பொலியச் சீர்செய்தே
ஆக்கிடப் பாவின் பணி.

சனி, 20 டிசம்பர், 2008

நிகழ்வுகளும் கருத்துக்களும்

(வெண்டுறைகள்.)

காவலனே முன்நின்று கடந்திடுக என்றாலும்
கோவலன்போல் முன்சென்றால் குழப்பமே உனதாகும்.

வேண்டாமே என்பவளை விட்டகல வொட்டாமல்
ஆண்டாள நினைப்பானேல் அறிவிலியும் அவனாமே.

விழைவில்லாள் அன்னவளை விரும்பிப் போய்க்கண்டு
நுழைந்தில்லில் கொன்றுதற் கொலைப்பட்டான் ஒருபேதை.

These were based on recent events in Mumbai and Andra Predesh.