புதன், 18 பிப்ரவரி, 2026

கானம் என்ற சொல்.

 கானம் என்ற சொல்லினை இங்கு ஆய்ந்து காண்போம்.

இந்தச் சொல் தமிழிலும் வழங்குகிறது,   சமஸ்கிருதத்திலும் வழங்குகிறது. கன்னல் என்ற சொல் கரும்பைக் குறிக்கிறது.  கன் என்பதே இதன் அடிச்சொல்.

கன் > கனி   ( விகுதி இ ).  பழம்,  இனிமையானது என்பது பொருள்.

கனைவரிவண்டு  என்பது  கேட்பதற்கு இனிய ஒலியினை எழுப்பிக்கொண்டு பறந்து திரியும் வண்டு. வரிகளும் உடையது.

கன் > கனி.

கன் > கனை.  இனிய ஒலி எழுப்பு.  ந ந என்பது இசை ஒலி,

கா என்றால் தொடர்வரவாதல். கா, மற்றும் ந இரண்டும் இசை ஒலிகளும் ஆம்..

கா-  காத்தல் என்றால்  தேவையான அளவில் இடர் இன்றிப் பாதுகாத்தல். இனிய ஒலி காக்கப்பட்டுத் தொடர்வரவாதலே  இசை.

கா -  நா >  கானம்  ( அம் விகுதி வந்து) கானம் ஆகிறது.  காத்து நாவில் வைக்கப்படுவது. நா என்பதற்குப் பதில் கா+ இன்+ அம் என்பன,  இன் குன்றி ன் என்றே நின்று,  கானம் என்று வரின்,  இன் என்பது  இனிமை என்று கொண்டு,  காத்து இனிமையினால் வைக்கப்பெறுவது என்று முடிக்கலாம்.  இதுவும் பொருத்தமே ஆகும்.

கனத்த இருள்,    கனை  இருள்.  இது முழுமை குறிக்கும்.  முழுமையும் இனிமையே.  திணிந்த இருள்.  திண்> திண்மை.

இனி குறில் நெடில்  பற்றிக் கூறின்,  வா என்ற ஏவல்,  குறுகி வந்தான் என்றாகிறது.    தா என்பது தந்தான் என்றாதல் காண்க. தாள் என்ற சொல்லிற் பிறந்த  சொல்  தளம் என்று குறுகும். குப்பை சேர்ந்திருத்தல் குள் > கூளம் ஆகிறது. தண்ணீர் சேர்ந்திருத்தல்  குள்> குளம் ஆகிறது. இது போதும்.  பழைய இடுகைகளையும் படிக்கவும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.

பகிர்வுரிமை



கருத்துகள் இல்லை: