புதன், 12 ஜூலை, 2023

வருகை புரிந்தோருக்கு வாழ்த்து


https://sivamaalaa.blogspot.com/2023/07/dinner-in-honour-of-reuben-saruka.html

மேற்கண்ட இடுகையின் தொடர்ச்சி:


வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் ஒரு கவி. இது நம் நன்றியைத் தெரிவிக்கிறது. 


(எண்சீர் விருத்தம்)

வந்துலவும் தென்றலுக்கு வணக்கம் சொல்ல,

வாய்வந்தே உதவாமல் மறந்த போதும் -

செந்தணிகைத் தென்றலதும் பிணக்கம் கொண்டு,

சீருடனே மீண்டும்வர மறப்ப துண்டோ?

வந்திருந்து சிறப்பித்த நீங்கள் எல்லாம்

வாழியவே வளர்பிறையாய் என்று மென்றும்!

செந்தமிழால் உங்களையே வாழ்த்தி நின்றேன்:

சிலையுணர்வு பெற்றமைபோல் நலம்சொல் வேனே.


செந்தணிகை -   தணிகைமலை(த் தென்றல்). அல்லது அதுபோல் குளிர்ந்த தென்றல்.

சிலை உணர்வு பெற்றமை  -  ஒரு சிலைக்கு உயிர்வந்தது போல்.

முன் மறந்துவிட்ட காரணத்தாலும் இப்போது நன்றி சொல்வதாலும் சிலை 

உணர்வு பெற்றதென்று சொல்லப்பட்டது.


மெய்ப்பு  பின்னர்.

கருத்துகள் இல்லை: