வெள்ளி, 31 மார்ச், 2023

பேரப்பிள்ளைகள் அருகில் வேண்டும் [updated]

வெண்பா

 யாரேதாம்  நீரென்ற  போதிலுமே  உந்தம்நற்

பேரப்பிள்  ளைகளை  நீங்கியே  ---- ஓரிடத்தும்

நிற்பீரோ  கண்மூடி  நித்திரை  கொள்வீரோ

கற்பீரோ  பாடம்  புதிது.



பொருள்:

எத்தனை அகவை ஆகிவிட்ட யாராக இருந்தாலும்,  உம்  பேரப்பிள்ளைகளை நீங்கி,  இன்னோரிடத்திற் சென்று தங்கி,  உம்மால் நித்திரை அல்லது உறக்கம் கொள்வதும்  கடினமே.  அவர்கள் அருகிலிருக்கவேண்டும்.  அது  உம் உடற்பயிற்சிக்காகத் தங்குவதானாலுமே.  இதுவே இக்கவிதை சொல்வது.

கலித்தாழிசை.

வீட்டுக்குப் போக  விரும்பிய  பாட்டிதனை

நாட்டுக்கு நல்ல மருத்துவர் விட்டிடாமல்

காட்டுக்குப் போவென்றோ கழறினார் பாவமரக்

கூட்டுக்குள் போவென்ற கொள்கை நலமாமே.









paatti maraNam










கருத்துகள் இல்லை: