சனி, 11 மார்ச், 2023

பண்டை அரசர்கள் தமிழை எப்படிப் பயன்படுத்தினர்

 தமிழ்நாட்டுக்கு அப்பால் வாழ்ந்த அரசர்கள்  தங்களுக்கு முக்கியமான நேரங்களில் தமிழை எப்படிப் பயன்படுத்திச் சொற்களை அமைத்துக்கொண்டனர்  என அறிந்துகொள்வது,  ஒரு தனிக்கலை ஆகும். தமிழ் மட்டுமின்றி,  பிறமொழிகளும் அங்ஙனம் பயன்பட்டுள்ளன.  அமைக்கும் சொல் செவிக்கினியதாய் இருக்கவேண்டும்.  அதுவே இதில் முன்மையாக (முதலாவதாக) கவனிக்கப்பட்டுள்ளது. 

எடுத்துக்காட்டாக,  வங்காளத்தில்  அமைந்திருந்த பெரிய வீடுகளுக்கு ஒரு பெயரிட வேண்டி  நேர்ந்தது.   வங்காளம் என்ற சொல்லையே எடுத்துத் திரித்து, வெள்ளையர்கள்  " பங்களோ"  என்ற சொல்லினைப் படைத்தனர்.  இது பின் தமிழ்மொழிக்குள் வந்து " பங்களா" என்று திரிந்தது.  இதேபோல் வங்காளிப் பெண்கள் அணிந்திருந்த கைவளைக்கு  "பாங்கள்ஸ்"  என்ற பெயரிட்டனர். வெள்ளைக்காரப் பெண்கள் கைவளை அணிவதில்லை ஆகையால்,  ஆங்கிலத்தில்  அப்போது அதற்குப் பெயரில்லை.  இப்போது சிலர் அணிந்துகொள்வதுண்டு.  ( இப்போது இரஷ்யப் பெண்களே சிலர் இந்துக்களாய் உள்ளனர் ).

அங்குமிங்கும் சொற்கள் பலவற்றைத் தேடி அலையாமல் "பெங்கால்" என்ற சொல்லையே மேற்கொண்டு இப்பொருட்களுக்குப்  பெயரிட்டது அறிவுடைமையும்  சொற்சிரமத்தை* எளிதில் தீர்த்துக்கொண்டமையும்  ஆகும்.

குப்த அரசர்கள் தங்கள் ஆட்சியை நிறுவிய போது,  அவர்கள் அரசத் தலைமுறைத் தொடருக்கு  ஒரு பெயர் வைக்க நினைத்தனர்.  அந்தத் தொடர் பாதுகாக்கப்பட வேண்டுமென்பது தலையாய நோக்கமாகும்.  அதையே சொற்பொருளாகக் கொண்டு பரம்பரைக்குப் பெயராக்கிக்கொண்டனர்.

தன் காப்பு  >  காப்பு தன் ( முறைமாற்று அமைப்பு)  >  காப்த >  குப்த..

இப்படி அகர முதலானவை,  உகர முதலாய்  அமைவதுண்டு.

அம்மா >  உம்மா >  உமா  (  உமாதேவி )

இதழ் >  அதழ். அல்லது  இதழ் > அதழ்.  ( அதரம் என்ற இடுகையை வாசிக்கவும்).

(  உதடு என்றால்   உது + அடு ( முன்னாக அடுத்தடுத்து இருப்பது )

மற்ற இடுகைகளிலும்  காணலாம்.

அங்க்லோ >  இங்கிலாந்து.

அப்ரஹாம் >  இப்ராகிம்.



---------------------------------------------------------------------

வேறு திரிபுகள்.

*சிறு + அம் + அம் >  சிரமம். சொல்லமைப்பில்  றகரம்  ரகரமாய்த் திரியும்.

 அமைந்துள்ள சிறுதொல்லைகள்   என்பது பொருள்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

கருத்துகள் இல்லை: