புதன், 1 மார்ச், 2023

துர்க்கையம்மன் கருணை







துர்க்கையம்மன்


பாட்டு:


இரக்கத்து   அன்னை எழில்திருக்   கருணை

பரக்கப் பயன் தரு பாயருள்  பொருநை

கரக்கு  மனமிலாக்  கனிவுடன் அணைத்து

சிறக்க   வாழ்தரும்  செம்மலர்க்  கையள்


இரக்கத்து   -   ரட்சம் பெருகிய;  அன்னை --  தாய்

எழில்  திருக்கருணை --  அதுவும் எழிலும் திருவும்  பொருந்திய கருணை 

பரக்கப் பயன் தரு  பாயருள்  பொருநை---   விரிவான பயன்களைத் தரும் பொருநை   ஆறு போல் பாய்வதும்  ஆகும்; 

கரக்கு மனமிலா --  அதை எண்ணத்தாலும் மறைப்பதே  இல்லையாகிய,

கனிவுடன்  -  அன்புடன்  , அணைத்து  -  ஏற்றுக்கொண்டு,   

சிறக்க   வாழ்தரும்  -   சிறந்த வாழ்வை அருளும்  , 

செம்மலர்க்  கையள் -  அழகிய செம்மலர்களை ஏந்தி நிற்கும் கையுடையாள்.


மகிழ்வீர்

மெய்ப்பு  பின்


கருத்துகள் இல்லை: