ஞாயிறு, 8 ஜனவரி, 2023

பரத்துவாசர் பொருள். சொல்.

 பரம் என்பதன் பொருள்

பரத்துவாசர் என்ற சொல்லில் அடிப்படை முதன்மை வாய்ந்த சொல்லாய் இருப்பது  " பரம் "  என்பதே ஆகும்.

பரம் என்பது பரத்தல்  என்ற   வினைச்சொல்லினின்று வருகிறது.  பர  ,  வினையால் எடுத்துக்காட்ட,  "பரந்த பூமி" என்ற தொடரைப் பார்க்கலாம்.  பல்வேறு பொருட்களை உடைய சொல் என்பதற்கு,  " பரந்த பொருள்தரும் சொல்"  எனினுமாகும். கடலும் பரந்த இயற்கை இடமே.  அதனால் அதற்குப் "பரவை"  என்ற சொல்லும் தோன்றியது.  பறவை என்பது குருவி முதலானவற்றைக் குறிக்கும்.

பரம் என்றாலே அவன் எங்கும் பரந்து இருப்பவனாக உணரப்படும் கடவுள்.   பரம்பொருள் என்ற இருசொல்லொட்டும் அஃதே ஆகும்.

இராமாயணத்தில் பரத்துவாசர்   ஒரு முனிவர்.  பரதன் அவரைத் தந்தைக்குரிய பணிவுதந்து வணங்கினான் என்ப.

வந்த   மாதவத்    தோனையம் மைந்தனும்

தந்தை     யாம்எனத் தாழ்ந்து வணங்கினான்;

இந்து மோலி அன்   னானும் இரங்கினான்,

அந்த   மில்நலத்   தாசிகள் கூறினான். 


மேல் என்பது மோல்- மோள்  என்று திரியும்.    மேலி(டு) >  மோலி.    மேல்- மோள் - மோட்சம் என்பதும் காண்க.  மோலி - மகுடம் 

பரத்து என்பது  பர(ம்) +  அத்து என்பதில் மகர மெய் குன்றிய சொல்.   அத்து என்பது சாரியை.  இது "அது"  என்ற சொல்லினின்று தோன்றி.    தகர மெய் இரட்டித்தது ஆகும்.

இம்முனிவர் பரந்து பல இடங்களிலும் தோன்றி அறியப்பட்டவராக இருக்கலாம்.   இவ்வாற்றல் இருந்தோராக எண்ணப்பட்டவர்களும் உளர்.  பரத்துவாழ் > பரத்துவாஜ்  எனல் திரிபு காண்க.  வாழ் >  வதி > வசி திரிபுகள்.

வாழ்த்து  என்பது வழுத்து என்று குறுகுதலும் காண்க.   வழுத்துதல்.

வசி >  வசி + அர் >  வாசர்.

பரதவர் என்ற மீனவர் குறிக்கும் சொல்லும் பரத்தல் என்ற வினையினுடன் தொடர்புடைய சொல்லே.  பரவை - கடல்.

இதை விளக்கும் பழைய இடுகைகள் காண்க. இங்கு உள்ளன.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.


கருத்துகள் இல்லை: