திங்கள், 23 செப்டம்பர், 2013

மனோன்மணீயம் சுந்தரனாரின் பாடல்.

வருபொருள் உரைக்கும் வல்லபம் பெறில் என்?
மண்ணிடை விண்ணிடை மறைந்த
பெரு ரகசியங்கள் யாவையும் உணரும்
பெருமையும் ஞானமும்பெறிலென்;
பருவதம் எடுத்துப் பந்தென ஆடும்
பத்தியும் சித்தியும் பெறிலென்
பரவனுகூல  திருட்டியென் றுரைக்கும்
பண்புறும் அன்பிலை எனிலே.

இது மனோன்மணீயம் சுந்தரனாரின் பாடல். அன்பின் அகநிலை அல்லது அறவுள்ளம் என்ற தலைப்பில் வெளியிடப் பட்ட  கவிதைகளில் இரண்டாம் பாடல். அன்பின் முதன்மையை வலியுறுத்துவதாகும்.

Continued in post dated 26.09.13

கருத்துகள் இல்லை: