புதன், 18 செப்டம்பர், 2013

amman pAttu "கருணை தெய்வமே கற்பகமே"


இராகம்:  சிந்து பைரவி , தாளம் :  ஆதி

கருணை தெய்வமே கற்பகமே
காண வேண்டும் உன் தன் பொற்பதமே (என் கருணை)

உறுதுணையாக என் உள்ளத்தில் அமர்ந்தாய்
உனையன்றி வேறே யாரோ என் தாய் (கருணை)

ஆனந்த வாழ்வே   அளித்திடல் வேண்டும்
அன்னையே என் மேல் இரங்கிடல் வேண்டும்
நாளும் உன்னைத்  தொழுதிடல் வேண்டும்
நலமுடன் வாழ அருளல் வேண்டும் (கருணை)

This is an old song usually sung in amman festivals. Author மதுரை ஸ்ரீனிவாசன்


கருத்துகள் இல்லை: