சனி, 28 செப்டம்பர், 2013

Many beautiful poems in Tamiz..

எத்தனை எத்தனை இன்கவிகள்
என்னை வாசியென் றோடிவந்தே
ஒட்டிக் கொள்வன இதழ்களிலே‍‍‍............................
அவற்றை
ஒத்திக் கொள் வேன் நெஞ்சகத்தில்.

எண்ணி இருக்கையில் மணிப்பொறியின்
சின்ன முள்ளும் பெரிதினைப்போல்
தின்னும் முடிக்கும் நேரத்தினை!
பின்னும் இமைகள் உறக்கத்தினால்.

கவிமணி தேசிக வினாயகனார்
கவியை எழுத விழைந்ததுண்டு!
குவியும் பற்பல சோலிகளால்
 அவிய‌ ஒழிந்தன நாட்கள்பல.


வானொடு கொஞ்சும் வண்ண நிலா
வாய்த்த இரவினை வளர்த்திடுமேல்
தேனொடு குலவும் தெளிகவியைத்
தேடிப் பாடிடத் திகட்டிடுமோ?


எழுத = பல சுவைக் கவிதைகள் என்னும் திரியில் பதிய அல்லது இட.
மணிப்பொறி  = ‍  கடிகாரம்,   அவிய‌ -- பயனின்றி,  ஒழிந்தன--- ‍சென்றுவிட்டன. வளர்த்திடுமேல் -  நீளச்செய்யுமானால்.

கருத்துகள் இல்லை: