செவ்வாய், 11 அக்டோபர், 2011

On Sathya Sai

கேட்டபோ தெல்லாம்நீ உதவி செய்தாய்,
கேடகற்றி வாழ்வைநீ விளக்கம் செய்தாய்!
ஊட்டமிகப் பெற்றதெலாம் மறக்கப் போமோ?
ஊரறிய விந்தைபுரிந்் துயர்ந்து நின்றாய்.
நாட்டமுடன் நானுனையே வணங்க, இங்கே
யாமிருக்க அச்சமிலை எனவே கையை
ஆட்டியப யம்தந்தாய் அயர்வு தீர்ந்தேன்
அகிலம்நீ நீங்கினையோ என்றும் உள்ளோய்!

உடற்சட்டை களைந்ததனால் ஓய்வ துண்டோ
உன்பற்றா ளர்தமக்குன்் கடைக்கண் பார்வை?
கடல்வட்டம் நிலவரம்போ டிவை கடந்து
கனிந்தஅருள் நீபொழியத் தடைகள் ஏது?
விடலறியார் உமதுதிரு வடிகள் தம்மை
விழைந்தணுகும் நல்லடியார்; சத்ய சாயி,
உடலொருமைக் குள் அடங்கா ஆன்ம ஞானி
உலகில்நீ வலம்வந்தே ஓங்கி நிற்பாய்.

கருத்துகள் இல்லை: