செவ்வாய், 11 அக்டோபர், 2011

Election & Minister post

தேர்வும் தேர்தலும் ஒன்றுக்கொன்று
திறமான ஒற்றுமைகள் தெரியக்காட்டும்,
ஆர்வம் கூடிவர ஆடிப்பாடி
அகமகிழ அவைபோலச் சிலவே யுண்டு.

தோற்றவர்க்கு மறுவழியில் அமைச்சர் வேலை.
துரைத்தனத்தார் தரவந்த போதும், "வேண்டாம்!
ஏற்றவனாய் மக்கள் எனைக் கருத வில்லை,
இனி எதற்கோ?" என்று நின்றார் அஃதே வீரம்!

கருத்துகள் இல்லை: