திங்கள், 2 ஜூலை, 2012

வாழ்த்துக்கள்



கவிகள் தந்த இரு நண்பர்களுக்கு வாழ்த்து.

இருவரின் கவிகளும் இனிமை
இனிமைத் தமிழ்ச்சுவைத் தனிமை!
தனி-மையோ எழுதுங்கால் வடிந்து--ஒரு
வடிவான தேனாச்சு முடிந்து.

முடிச்சினில் பொதிதிரிப் பருப்பு,
பருப்பினில் சருக்கரை கலந்து,
கலந்ததைக் காய்ச்சினீர் பாகாய்,--அந்தப்
பாகினைப் பாவலர் நோகார்!

நன்கு முயன்று எழுதியுள்ளீர்கள். சுந்தரராசு அவர்கட்கும் சின்னக்கண்ணனுக்கும் வாழ்த்துக்கள், இனியும் பாடுங்கள், கேட்போம்.

பொதி = பொதிந்த; திரி = முந்திரி. நோகார்= விரும்பாமல் இரார்.
வாழ்த்துக்கள் எனலாகாது என்பர் அறிஞருள் ஒரு சாரார். இருவகையிலும் எழுதலாம் என்பதே  எமக்கு உடன்பாடு.

கருத்துகள் இல்லை: