ஞாயிறு, 14 ஜனவரி, 2018

பணம் பந்தியிலே



பந்தி என்னும் சொல்

பந்தி என்னும் சொல் எப்படி அமைந்தது? 

 பணம் பந்தியிலோ குலம் குப்பையிலேஎன்பது ஒரு தமிழ்ப் பழமொழி.
பணம் பந்தியிலே குணம் குப்பையிலேஎன்று தொடங்கும்      ஒரு திரைப்பாடலை எழுதிய கவி, அமரர் கா.மு. ஷெரீப் என்று தெரிகிறது. குலத்தினும் பணமே ஆற்றல் மிக்கது என்கிறது பழமொழி. “ இந்தப் பழமொழியை அறியாதவன் மனிதன் இல்லேஎன்`கிறார் கவிஞர்.

ஆனால் பந்தி என்ற சொல்லின் தோற்றம் அறிந்துகொள்ள இந்தப் பழமொழியின் உதவி தேவை இல்லை.   பந்தி என்பது பலர் அமர்ந்து உண்ணும் வரிசை அல்லது பல வரிசைகள். அங்கனம் வரிசையாக அமர்ந்துண்ணும் உணவுக் கொடை அல்லது விருந்து. 1[

பல்: அடிச்சொல்.   பொருள்:  பொருந்தி அல்லது கூடி யிருத்தல்.


இதனடிப் பிறந்த சொற்கள் சிலவற்றையாவது  அறிந்துகொள்வோம்.

பல்   -.  மேவாய் கீழ்வாய் எலும்புகளுடன் பொருந்தி நிற்பது.

பல் > பல்+து >  பற்று.    (௳னம் பொருந்தியுள்ள நிலை).

பல் > பல்+ தி > பன்றி.   ( நீண்ட பற்களை யுடைய விலங்கு).

பல் >  பன் > பன்+து > பந்து.
.நோ:  சில் >  சின் > சிந்து .

( சிந்து என்பது சிறியது என்று பொருள்படும் சொல். அளவடிக்குக் குறைந்த நிலையினது யாப்பியலில் சிந்து எனப்படும்.  சிந்து  என்பது சிறு நூலையும் குறிக்கும் என்றார் பி.டி. சீனிவாச ஐயங்கார் எனும் வரலாற்றறிஞர்.  இது சிந்து நதி அளாவிய நிலப்பகுதிகளில் விற்கப்பட்டதனால், நதியும் அப்பெயர் பெற்றது. இச்சொல் பின் ஈரான் சென்று ஆங்கு இந்து ஆனது.  பின் இத்திரிபு மீண்டும் இந்தியாவிற்கு வந்தேறி இறுதியில் ஒரு மதத்திற்கும் பெயரானது என்பதை முன் எடுத்து எழுதியுள்ளோம்.)
எங்கெங்கு உலவினும் சில், சின் என்ற அடிகள் இன்னும் நம்மிடை நின்று நிலவுதல் நம்  பாக்கியமே ஆகும். இது நிற்க:
பந்து என்பது கயிற்றாலோ துணியாலோ சுருட்டிப் பிடிக்கப்பட்ட உருண்டை.  இப்போது செய்பொருள்கள் மாறிவிட்டன.

பல் > பன்  > பந்தி.  (பன்+தி).
.நோ:   முன்+தி > முந்தி.

பலர் பொருந்தி அல்லது சேர்ந்து உண்பதே பந்தியாகும்.  

திரட்சி என்பதன் முதலெழுத்தாகிய தி,  ஈண்டு விகுதியாய் நிற்றலும் பொருத்தமே ஆகும்.

பல் பல:  ஒன்றுக்கு மேற்பட்டவை..   (   இரண்டும் அதற்கு மேற்பட்டவையும் எனினுமது.)

பந்தியிலும் உண்டு மகிழ்வீராக.

அடிக்குறிப்பு:

1  (விருந்து என்னும் சொற்குப் புதுமை என்னும் பொருளும் உண்டு.)

விருந்து + அம் = விருத்தம்: வலித்தல் விகாரம்.  பொருள்: புதுவகைப் பா.




[1][1]

80 ஆண்டு இந்துக்கோயில் இடிப்பு: நிலம் வாங்கினோர் நடவடிக்கை

இந்தச் செய்தியை இங்கு வாசிக்க:

/search?q=Masai+temple+demolition&client=firefox-b&dcr=0&tbm=isch&source=iu&ictx=1&fir=IaSTfD7kSFz

At Demolished Masai Temple! The public... - Malaysian Tamilar Kural

https://www.facebook.com/TamilarKural.../1810021032364561/
At Demolished Masai Temple! The public gathering to save the Temple!
https://www.google.com.sg/search?q=Masai+temple+demolition&ie=utf-8&oe=utf-8&client=firefox-b&gfe_rd=cr&dcr=0&ei=xVVbWqGPMNvmugS1ko2gBg
 
https://www.thestar.com.my/news/nation/2018/01/13/devotees-urge-authorities-to-halt-temple-demolition/
Compiled by THO XIN YI, ROYCE TAN and R. ARAVINTHAN
Read more at https://www.thestar.com.my/news/nation/2018/01/13/devotees-urge-authorities-to-halt-temple-demolition/#EQwTJURrkcKDkO5e.99

நாளிதழ் வாக்கியங்கள் காதுக்கெட்டிய பதில்கள்



வாக்கியமும் கேள்வியும்
எழுத்தில் தோன்றும் சில கருத்துகளும்  அவற்றில் புறப்படும் கேள்விகளும்.

1    அவர் தனிமனிதரல்ல;  அவர் நம் இனத்தின் சொத்து. அவரை அடிக்கக்கூடாது. 

அவர் பொதுமனிதர் என்றால் அவர் உயர் திணையாகவே இருக்கிறார் என்று பொருள்.  அவர் சொத்தாகிவிட்டால் அஃறிணையாகிவிடுகிறார். தனிச்சொத்தானாலும் பொதுச்சொத்தானாலும் விலைப்பொருளாகிவிடலாம். அவரை விற்றுவிட நீங்கள் ஒப்பினால், நாங்கள் வாங்கிக் கொண்டுபோய் அப்புறம் அடிக்கிறோம்.

2  சிலர் தங்கள் சுயநலத்திற்காக அவரை அடிப்போம் என்`கிறார்கள்.

அப்படியானால் பொதுநலத்திற்காக அவரை அடிப்போம் என்று சொல்வது சரி என்`கிறீரோ?

3  எல்லா நதிகளையும் நான் இணைப்பேன்.

உம் மாநிலத்தில் உள்ள நதிகளை இணைத்தாலே அது பெரிய காரியம்.  அடுத்தமாநில நதியை இணைக்க அவர்கள் இணங்கவேண்டுமே!

4  எல்லா அரசியல் கட்சிகளையும் இணைத்தால் நதிநீர் கிடைத்துவிடும்.

அப்படியா? இந்த அரசியல் கட்சிகளில்தான் நதிகள் ஓடுகின்றனவோ?

5  நிறைய இளைஞர்கள் கூடுகிறார்கள்.  இப்போது       விழிப்புணர்வு  ஏற்பட்டுவிட்டது.

ஒரு யானையைப் பார்க்கவும் கூட்டம் கூடுகிறது.  யானையைப் பற்றிய விழிப்பும் ஏற்பட்டுவிட்டது. இனி யானைகளுக்கு நல்ல நேரம்தான்.






சனி, 13 ஜனவரி, 2018

பொங்கல் வாழ்த்து அனைவருக்கும்.



உழுதுண்பார் உலகுக்கும் உணவளிப்பார்
 உயர்ந்தோராம்  அவரென்போம்
கொண்டாடும்
பொங்கல்  நன்னாள்;

பழுதில்லை  பாரெங்கும் யார்பிறரும் 
அவருடனே பொழுதெல்லாம்
களித்தாடிப்
பொஙகல் உண்டால்;

மெழுகாக உருகுள்ளம் படைத்தவர்கள்
உள்ளிலொரு கபடமற்றார்
மேதினியில்
 மக்கள் வாழ

அழகாகத் தம்கடனை ஆற்றிடுவார்
அவர்துயரெங் கிருந்தாலும்
அதுதுடைத்தல்
 கடனே யார்க்கும்;

பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக.
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

காரணப் பெயர்களும் இடுகுறிகளும்



ஒரு புதிய  பொருளுக்குக் பெயர் வைக்கவேண்டும். பெயர் வைக்கவில்லை என்றால் அதைப்பற்றின எல்லா விவரங்களையும் கேட்போனிடம் முறையாகத் தெரிவித்தாலும்  அவனுக்குப் புரிகிறதோ என்னவோ? புரியவில்லை என்பானாகில் சொல்வோனாகிய என்பாடு தொல்லையாகிவிடும். அந்தப் புதிய பொருளைக் கையில் தூக்கிப் பிடித்துக்கொண்டு இந்தப் பொருளைப் பார்!  இக் கணத்திலிருந்து  இதற்கு:  “ நாகாய்”  என்று பெயரிட்டு உள்ளேன்;  நான் நாகாய் என்று சொல்லும்போதெல்லாம் நீ இதைத்தான் குறிப்பதாகக் கொள்ள வேண்டும்.  வேறுபேச்சுக்கே இடமில்லை என்றேன் எனின், கேட்போன் வேறு சிந்தனைகள் ஏதும் செய்யவேண்டியதில்லை. அவனுடைய வேலை எல்லாம் நான் நாகாய் என்று குறிக்கும்போதெல்லாம் அவன் அப்பொருளை நினைக்க வேண்டியதுதான். 

 எந்தமொழி, என்ன அடிச்சொல், என்ன அமைப்பு, என்ன என்ன என்ன என்று வாய்திறக்கவே  வழியின்றி எல்லாம் அடைக்கப்பட்டுவிடுகிறது.  அவனுடைய நாக்கு காயும்வரை கத்தினாலும் அவனுக்கு வேறு விவரங்கள் எதையும் தெரிவிக்க மாட்டேன் என்ற உறுதியுடன் தான் நான் அப்பெயரை அப்பொருளுக்கு இட்டேன். அது என் உறுதி; அவனுக்கு அறியும் பங்கு இல்லை.  அவன் வேலை அப்பொருளை நினைக்க வேண்டியதுதான்; இன்றேல் மடியவேண்டியதுதான். 

இப்படி இடப்பட்ட பெயர்களை இடுகுறி எனலாம்.  சில இடுகுறிகளுக்கு ஏன் அப்பெயர் இடப்பட்டன என்பதை அறிந்தோர் ஒருகாலத்தில் இருந்திருப்பர்.  அவர்கள் அவற்றை எழுதி வைக்கவில்லை யாகையால், நாம் எதையும் அறிய முடியவில்லை.  ஆய்வு செய்யலாம்.   செய்தும் அறிய இயலாதவற்றை, “ காரணம் அறியப்படாதவை” என்று சொல்லிவிட்டுப் பயன்படுத்தவேண்டியதுதான். 

அவையும் இடுகுறிகள் தாம்.  அறவே அறிய முடியாதவற்றோடு இத்தகையவையும் சேர்ந்து நம்மை மகிழ்விக்கின்றன.

காரணம்  அறிந்து பயன்படுத்தினாலும் அறியாமல் பயன்படுத்தினாலும் பொழுதுபோய்விட்டாலும் அந்தப் பொருள் அதுவாகவே இருக்கிறது.  பொருளில் எவ்வித மாற்றமும் இல்லை.

புதிய பொருள்களுக்கு எப்படிப் பெயரிடுவது என்ற திறமையைப் பெறுவதற்குச் சொல்லறிவும் பொருளறிவும் பயன்படக்கூடுமாகையால்,  சொல்லமைப்புகளை அறிவது நன்மை பயக்கும். சொல்லின் பொருளை அறிந்து அதைப் பயன்படுத்தினால் நம் கருத்துக்களைச் சிறப்பாக வெளிப்படுத்தவும் இத்தகைய அறிவு உதவக்கூடும். சொற்பொருளாய்வு  ஏதேனும் புதிய கதைகளைக் கட்டி விடுவதற்கும் பயன்படக்கூடும். ஆரியர் படையெடுப்பு போன்ற கதைகளைப் பாருங்கள். 

இன்னும் பல நன்மைகள் இருக்கலாம். அவ்வப்போது புதிய நன்மைகளைக் கண்டவிடத்து மகிழ்க. ஒருவனை ஒரு சொல்லால் ஏசினால் ஏசினவனின் உள்ளக்கிடக்கை எத்தகையதாய் இருந்தது என்று நீதிமன்றங்கள் அறிந்துகொண்டு திறமிக்கத் தீர்ப்புகளை வழங்கச் சொல்லாய்வு உதவக்கூடும்.
சொல்லை அமைக்கும்போது சிற்பி செதுக்குவதுபோல் சொற்களில் நாத்தடை கூட்டும் எழுத்துக்களை விலக்கி உருப்படுத்துதல்  ஒரு திறமிக்க்க் கொள்கையே எனலாம்.  

இதற்கு நான் காட்டும் உதாரணங்கள்:

கெடுதல் பெரும்பாலும் செய்யும் ஒரு கோளுக்குப் பெயரிட:
கேடு > கேடு+து > கேடுது >  கேது.
( கேடு உடையது ).

இங்கு டு ஒரு தடைபோல் ஒலிப்பதால்,  டுகரத்தைக் களைதல்.  இதனால் சொல் நலம் அடைந்தது என்றே சொல்லலாம்.   சொற் காரணம் அறிய இயலாமற் போவது ஒரு தடையாகவில்லை.

பீடு > பீடு+ மன்னன் >  பீடுமன் > பீமன் > வீமன்.
பெருமைக்குரிய மன்ன்ன் என்று பொருள்படுவது. டுகரம் விலக்கல். மன்னன் என்பதை மன் என்று வெட்டிப் பொருத்துதல். இதனாலும் சொல்லுக்கு  நன்மையே விளைந்தது.

இராகு:
இருள் <  இர்.
இர்+  ஆகு = இராகு.
மூலத்திலிருந்து புனைந்ததால் பலராலும் கண்டுபிடிக்க இயலாமை.

தெருள் > தெருட்டு > தெருட்டம் > திருஷ்டம். (தெரிதல் ).
தெ என்பது தி என்று மாற்றம் பெற்றது. டகர ஒற்றுக்கு ஒரு ஷ் இடப்பட்டது.

கண்டு மகிழ்வீர்.
  


வியாழன், 11 ஜனவரி, 2018

விகுதியும் பயனும்



இதுகாறும் சொற்கள் பலவற்றை நாம் விளையாட்டைப் போலவே ஆய்வு செய்து சில உண்மைகளையாவது அறிந்துள்ளோம். பலவற்றையும் போட்டுப் புரட்டிக்கொண்டிருந்துவிட்டு இறுதியில் யாதும் தெரியவில்லை எனின் அதற்கு வெறுமனே உறங்கி எழுதல் மேலும் பலனளிக்குமன்றோ’?

இப்போது மதிக்குகந்த ஓர் இலக்கணக் கொள்கையை  அல்லது ஒரு சொல்லியற் கொள்கையை அறிந்து இன்புறுவோம்.

ஒரு பகுதி என்று நாம் குறிப்பிடுவது ஓர் ஏவல் வினை.  இது வரு என்பதுபோலும் ஒரு சொல்.  ஆனாலும் வரு என்பது ஓர் ஏவல் வினையாக வழங்கவில்லை.  தேடு என்பது ஏவல்  வினை.  ஒருவனிடம் எலியைக் தேடு என்றால் அவனிடம் ஓர் வேலையை ஏவுவதாக இருப்பதால், அது ஏவல் வினை என்`கிறோம்.  A verb denoting a command.   வருகிறான், வருகிறாள் என்பனவற்றில் வரு என்பதே பகுதியானாலும்,  அது ஏவலாக இல்லாமல் இருப்பதற்குக் காரணம்,  வரு என்பது வார் என்று திரிந்து,  அதுவும் ஏவலாக
 இல்லாமல் பின்னும் வா என்று திரிந்து இவ்விறுதி வடிவே  ஏவலாக மொழியில் நின்று நிலவுகிறது.  வினைப்பகுதிதான் ஏவல் வினை என்னும் சொலவின் உண்மையை வரு என்பதன் நிலைமை பொய்த்துவிடச் செய்கிறது.

ஒரு காலத்தில் தமிழில் வரு என்பது ஏவலாக இருந்தது. 1 அந்தக் காலம் மலையேறிவிட்டது.  இப்போது நாம் திரிபை வைத்துக்கொண்டு திண்டாடிக் கொண்டிருக்கிறோம். சொல்லறிவுடையோன்  வரு-தான் வா என்பதை அடையாளம் கண்டுகொள்வான். மொழியானது எப்போதும் திரிபு கொண்டிருக்கும் ஒரு கருவி என்பது அவனுக்குத் தெரியும். சில நூற்றாண்டுகளிலேயே மொழி திரிந்து உருத்தெரியாமல் போய் அதை அறிய முயல்வாருக்கு உரை தேவைப்படும் நிலையை அடைந்துவிடுகிறது. இதை அறிந்த இலக்கண ஆசிரியர் பவணந்தி முனிவர், பல நூற்றாண்டுகட்கு முன் “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்றார். 

அவர்காலத்தில் வகையினானே என்று கேட்போர் அறிந்த தமிழ், பிற்காலத்தில் வகையினாலே என்று மாறிவிட்டது.அதனால் நாம்   0னே > லே திரிபு என்றும் 0ன > ல திரிபு என்றும் சொல்கிறோம்.  அதனால் நாம் திராவிட மொழிகள் தமிழினின்றும் திரிந்தன என்`கிறோம்..  மனோன்மணியம் சுந்தரனாரின் சொற்களால் இதைத் தெரிவித்தல் சாலுமேல்,  “ஓன்று பலவாயின”  என்`கிறோம்.

இப்படிக் கூறுவது சரியாயினும்,  ஒவ்வொரு சொல்லுக்கும் சரியாகிவிடாது. பல வேளைகளில் தெலுங்கிலும் மலையாளத்திலும் துளுவிலும் உள்ள சொற்கள் முந்து வடிவங்களாக உள்ளன; தமிழ் திரிபைக் காட்டுகிறது என்பதையும் நாம் உணர்தல்  வேண்டும்.  மொழிப்பற்றினால் தமிழிலுள்ள ஒவ்வொரு சொல்லும் முந்துவடிவம் எனின் அது பிழையாகும்.   ஒவ்வொன்றயும் ஆய்ந்தே முடிவு மேற்கொள்ளுதல் வேண்டும்.  தமிழின் சொற்களில் பல முந்துவடிவம். எல்லாம் அன்று.

ஒரு பகுதியில் ஒரு விகுதி சேர்ந்தால் அது பயனுடையதாய் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் எதற்கு அந்த விகுதியைச் சேர்க்கவேண்டும்?  என்ற கேள்வி எழுகிறது.  கு என்பது ஒரு வினையாக்க விகுதி.  மூழ் என்ற அடியுடன் கு சேர்கையில் “மூழ்கு” என்றாகி அது ஒரு புதிய பொருள் நிலையைக் காட்டுகிறது.  வரு என்பது வருதலைக் குறிக்கிறது.  வருகிறான் என்பது வினைமுற்றாகிறது.   பின் வரு என்பதில் ஏன் வருகு என்றும் செய் என்பதில் செய்கு என்றும் ஒரு வீண்விகுதி சேர்க்கவேண்டும்?  

 ஆகவே வருகுதல் என்பதை வருதல் என்பதனோடு ஒப்பக் கொள்ளுதல் கூடாது, என்பதோர் கொள்கையாகும்.  மி என்பது மேல் என்று பொருள்படும்.  கு விகுதி சேர்ந்து மிகு  என்பது அமைகிறது.  இன்னொரு சொல் அமைய அது (கு) உதவியது. அப்படி உதவாவிடின் விகுதியை இணைத்தல் உதவாக்கரை வேலையன்றோ?

இதுபற்றி இரு புலவர்களுக்கிடையில் ஒரு சர்ச்சை எழுந்தது.
அதை இன்னொருகால் அறிந்து இன்புறுவோமே!

 அடிக்குறிப்பு:

1.  இன்னொரு சொல்வடிவம்:  தருதல் > தரு(கு)தல் > தருகுதல். இதனை வருகுதல் என்பதனோடு ஒப்பிட்டு உணர்க.

2    அறிஞ்ர் சிலரின் கருத்துப்படி  லகரம் மொழிவரலாற்றில் 0னகரத்தின் முந்தியது என அறிக;  இதனை சங்கச் செய்யுள்களின் மூலம் அறியலாம். அண்ணன் என்பதினும் முந்தியது அண்ணல் என்ற வடிவம். இளையன் அல்லது இளையவன் என்பதினும் முன்னது இளவல். வினைமுற்றுக்களிலும்   "செய்வல் யானே" எனின் செய்வேன் நானே"   என்பது ஆகும். லகரம் னகரமாக மாறிவிட்ட பின் சில சொற்களில் னகரம் எழுதுவோரால் விரும்பப்படுவதாயிற்று என்று  அறியப்படுகிறது. பேச்சின் வேறுபட்டதாய் எழுதுமொழி இருத்தல் வேண்டி இது மேற்கொள்ளப்படுவதாயிற்று எனலாம்.  

எழுத்துப்பிழைகள் தோன்றின் பின்னர் இடுகையைச் 
செப்பனிடுவோம்.