செவ்வாய், 9 ஜனவரி, 2018

சந்தேகம் ஐயப்பாடு அயிர்த்தல் ஈரடி





இரண்டுக்கு  அல்லது அதற்கு மேற்பட்ட கருத்துநிலைகள் தோன்றி,  அவற்றுள் இது சரியோ அது சரியோ என்ற கேள்விகள்  உங்களுக்குள் எழுந்து எது சரி என்று துணிய இயலாதபோது,  அதை நாம் சந்தேகம் என்`கிறோம். தனித்தமிழில் இதை “ ஐயுறுதல் “  என்றும்  “அயிர்த்தல்”  என்றும் சொல்வர்.

ஐயுறுதல் என்பது இன்னும் நம்மிடையே வழக்கில் உள்ளது.  பேச்சில் இது வாராத சொல்லாயினும் எழுத்தில் அவ்வப்போது காணக்கிடைக்கும் சொல் இதுவாகும்.  ஐயப்பாடு என்றும் இன்னொரு வடிவம் கொள்ளும்.  இதில் ஐ என்பதே பகுதி அல்லது அடிச்சொல் ஆகும்.

ஐ என்பதொரு சுட்டடிச் சொல் ஆகும். இது அ, இ, உ என்ற முப்பெரும் சுட்டுக்களில்  அ என்ற சுட்டினின்று போதருவதாம். அ என்பது அங்கிருப்பது என்றும் பொருள்படும்.  இங்கிருந்தால்  அது “இ”.  இங்கிருப்பதில் ஐயப்பாடு இருக்காது.  அதுதான் இங்கிருக்கிறதே. மற்றும் நீங்கள்  நேரடியாக அதைக் காணமுடிகிறது. பெரும்பாலான சூழ்நிலைகளில் உங்களுக்கு இங்கு உங்களிடம் இருக்கும் பொருள் மேல் “சந்தேகம்” எழுவதில்லை.  ஆனால் அது அங்கிருக்கிறது.  ஆகவே, அது உண்மையில்  இருக்கிறதோ, இல்லையோ, சிறிதோ, பெரிதோ, உருண்டையோ, தட்டையோ, நீளமோ, குட்டையோ என்றிப்படிப் பலதரப்பட்ட ஐயப்பாடுகள் எழுதற்கு இடமுண்டு. இதனால்தான் அங்கிருத்தலிலிருந்து ஐ -  ஐயப்பாடு, ஐயுறுதல் முதலியவை சுட்டடியில் தோன்றின. இது அறிவுக்குப் பொருத்தமான் சொல்லும் பொருளும் ஆகும்,

அங்கிருக்கும் பொருளின்பால் பல ஐயப்பாடுகள் தோன்றக்கூடும் , அதுவும் ஒன்றுக்கு மேற்பட்ட கேள்விகளை உண்டாக்குதல் கூடும் என்பதால் தமிழில் இந்த மன்நிலைக்கு இன்னொரு சொல்லும் உண்டாயிற்று.  அதுதான் ஈரடி என்ற சொல்.  இது இரு + அடி என்ற இருசொற்களால் ஆன ஒரு கூட்டுச்சொல்.

இப்போது இதை ஒரு கவியில் சொல்வோம்:

சீரடித் தோற்றத் தையன்
தேவனோ  மாந்தன் தானோ,
ஈரடி பட்டென் உள்ளம்
இங்கல மருமே ஐயா.

( இது  ஓர் உதாரணத்துக்காகத் தரப்படும் கவி.  சாயிபாபாவின்பால்  ஐயப்பாட்டினை எழுப்புவதற்கு அன்று ).

ஈரடி என்ற பதத்தை உணர்ந்துகொள்ளப் பயன்படுத்துக.

இது ஐயப்பாடு அல்லது சந்தேகம் என்பது என்ன என்பதைத் தெளிவிக்க,  யான் உங்கட்குப் புனைந்து தரும் ஒரு சிறு கவியாம்.   அலமருதல் -  சுழலுதல். அங்குமிங்குமாய் அலைதல்.  ஐயப்படுதலுக்குப் பொருத்தமான சொல்.

ஈரடி என்பது ஐயப்பாட்டுக்குப் பொருத்தமான பொருளுடைய சொல் என்றாலும்,  பேச்சில் சிலவேளை தரை ஈரமாகக் கிடக்கிறது என்ற பொருளிலும் அது ஆளப்படலாம்.     மழையினால் எங்கும் ஈரடியாகக் கிடக்கிறது “  என்று சொல்வதைச் செவிமடுத்திருக்கலாம்.  இரு + அடி =  ஈரடி என்பது வேறு;  ஈரம் + அடி =  ஈரடி என்பது வேறு என்பதை நினைவில் இருத்திக்கொள்க.

ஈரடி ( ஐயப்பாடு) என்பதில் இரு என்பது ஈர் என்று நீண்டு புணர்ந்தது.  இதற்குக் காரணம் அடி என்பது அகரத்தில் ( உயிரில்) தொடங்கியதே ஆகும்.  மேலும் இங்கு “  அடி “ என்பது  அடுத்தடுத்து நிகழும் இருவேறு நிலைகளை உணர்த்துகிறது.  அடு > அடி. அடுத்தடுத்து வருதலாகும்.  இதுவோ, இல்லை; அடுத்து அதுவோ. இல்லை; துணிய இயலவில்லை என்பது.   

ஈரடி என்பது ஈரத் தரையைக் குறிக்குமானால்,  அடி என்பது தரையே ஆகும்.  கால் தரையை அடுத்து நில்லாவிடின் அதற்கு நிலையிடமில்லை, ஆகவே அடி என்பது தரையே ஆகும்.  சொல்லமைப்பில் இது பொருளாயினும் இலக்கணப்படி அடி என்பது காலடியாய் இருக்க, அது தரையைக் குறித்தபடியால் ஈண்டு இடவாகுபெயர் எனல் உண்மையாகும்.   சொல்லமைப்புக் காரணம் வேறு.  இலக்கணம் கூறும் காரணம் வேறாகலாம் என்பதுணர்க.

ஈரமாகவே இருந்துகொண்டு பயிர்செய்தல் முதலியவற்றுக்கு உதவாத நிலம்  ஈரணம்  (swampy land) எனப்படும்.  இது ஈரம் + அணம் எனப்புணர்ந்தது.    ஈரம் என்பதில் உள்ள அம் விகுதி கெட்டது. (விடப்பட்டது). பெண்கள் குளிக்கும்காலை நனைந்துவிட்ட துணியை “ஈரணி” என்பர். குளியலுக்கான துணியுமாம். இது ஈரம்+ அணி  ஆகும். இரண்டாகவோ அல்லது அதற்கும் மேலான துண்டுகளாகிவிட்ட துணி  ஈரி எனப்படும்.  இரு > ஈரி.  இச்சொல்லுக்கு வேறு பொருளும் உள.  ஈரித்தல் எனின் ஈரமாகுதல் என்பதாகும். ( ஈரப்பதம் என்பர். முழுமையாகக் காயவுமில்லை;  முழுதும் நீர் சொட்டும்படியாகவும் இல்லை. அத்தகு நிலை).

மழைக்காலத்தில் காற்றில் உள்ள ஈரநிலை குறிக்கும் சொல் ஈராடி என்பது.  இது இன்று பயன் படத் தக்க சொல்.  Humidity  என்பதற்குப் பயன்படுத்தலாம், வெளிக்காற்றில் ஈரம்  ஆடுதலே ஈராடி ஆகும். நல்ல தமிழ் விழையும் அன்பர்கள் பயன்படுத்துவீராக. கொஞ்சக் காலம் ஆங்கிலச் சொல்லைப்  பிறைக்கோடுகளுக்குள் இட்டுப்  புழக்கப் பழக்கம் ஏற்படுத்தவேண்டியிருக்கலாம்.

அறிந்து மகிழ்வீர்.



அடிக்குறிப்பு:

சந்தேகம்:   சம்+ தேகம்.  இங்கு  தேகமென்பது உடலைக் குறிப்பதாகச் சொல்வது தவறு. 
தேய்> தேய்+கு+அம் = தேய்கம்> தேகம்.   அதுவா இதுவா என்று இரண்டும் உறழ்ந்து தேய்ந்து நிற்பது.  துணிதல் அல்லது திடம் தேய்ந்துவிடுகிறது.  சம் என்பது சமை என்ற சொல்லில் கிட்டுவது.  சமைத்தலாவது பொருள்களைச் சேர்த்து அமைத்தல். சமை> சம்.( extracted root).  அமை> சமை. இருவேறு நிலையின ஒன்றாக இடப்பட்டுத் துணிபு தோன்றாமையின் ஏற்படும் மனத் தேய்வு விளைதல்.

தேய்கம்> தேகம். (  இடைக்குறை).
 ஒ.நோ:

வாய்த்தி > வாத்தி (வாத்தியார்).  வாய்ப்பாடம் சொல்பவன்,  (  இடைக்குறை).
 வாழ்த்தியம் > வாத்தியம்.  (  இடைக்குறை).
சேர் > சேர்மி > சேமி > சேமித்தல்  ( ர்:  இடைக்குறை).

Enjoy yourselves with words.



(தன் திருத்த மென்பொருள் தோற்றப்

பிழைகளும் அச்சுப் பிழைகளும் பின்

திருத்தம்பெறும்.)



   




You may be a feminist even if you deny

ஞாயிறு, 7 ஜனவரி, 2018

ஆயுதம் கூர்த்திகை "வனைகலன்"



வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்ற பழமொழியில்  ஆயுதம் என்ற சொல் நன்`கு பதிவு பெற்றுள்ளது.  தண்டாயுதம் ( இப்போது தெண்டாயுதம்) என்ற சொல்லிலும் ஆயுதம் ஆட்சிசெலுத்துகிறது.  ஆயுதம் தாங்கிய கொள்ளைக் காரர்கள் என்னுங்கால் ஆயுதம் அங்கு வந்துவிடுகிறது.

ஒன்றை ஆய்வதற்கு அல்லது ஆய்வு செய்வதற்கு ஆயுதம் தேவைப்படுகிறது. கீரை ஆய்வதற்குக் கைகளே ஆயுதம்.  ஆய்தல்:   ஆய்+உது + அம் என்ற பிரிப்பில் இதனமைப்பைக் கண்டுகொளக.  உது = முன்னிருப்பது.  முன்னிருப்பதை ஆயும் கருவியே ஆயுதமாகும்.

ஆயுதம் என்பதற்கு வேறு தமிழ்ச் சொற்கள் உள்ளனவா?  தேடிப்பாருங்கள்.

கூர்த்திகை என்ற சொல் ஓர் இரண்டு நூற்றாண்டுகட்கு முன்னர் தமிழில் வழங்கியதென்று தெரிகிறது. பெரும்பாலான ஆயுதங்கள்  முன்பகுதி கூரானவை. ஆகவே கூர்த்திகை என்பது நன்`கு அமைந்த பெயர். பிற்காலத்தில் கூர்மை இல்லாதவையும் கூர்த்திகை என்று குறிக்கப்படவே,  அதன் சொல்லமைப்புப் பொருள் நழுவிற்று.

கூர்த்திகை என்ற சொல்லை வைத்து வாக்கியம் எழுதுங்கள்.  அப்போதுதான் அச்சொல் மறைந்திடாமல் இருக்கும்.     

ஆயுதம் என்பதை "வனைகலன்" எனலாமா? 

சனி, 6 ஜனவரி, 2018

மிளகாய் சொல். வெளியூர்ப் பொருள்.



மிளகாய் என்ற  சொல்.   (capiscum)

மிளகாய் என்று தமிழ்ப்படித்தவர்கள் எழுதும் சொல்லை, பேச்சுத் தமிழில் “மொளகா”   “மொளகே” என்றெல்லாம் சொல்கிறார்கள்.  இப்படிச் சொல்வது கொஞ்சம் இனிமையற்றதாய் இருப்பதால், தான் இதை “சில்லி” என்று ஆங்கிலத்தில்தான் சொல்வது பழக்கம் என்`கிறார்  யாமறிந்த தமிழர் ஒருவர்.

கறி, குழம்புகளில் காரம் சேர்க்கப் பண்டைநாளில் தமிழரிடம் இருந்தது மிளகு  ஆகும். அப்போது மிளகாய் இல்லாமையால் மிளகை அரைத்தோ இடித்தோ குழம்பு வைத்தனர்.

மிளகாய் என்பது பின்னர் சீனாவிலிருந்து பெறப்பட்டது 1 என்று அறியப்படுகிறது.  இதைச் சொல்லாராய்ச்சி மூலமாக தமிழறிஞர்கள் நிறுவியுள்ளனர். அவர்கள் சொல்லாய்வினை இப்போது காணலாம்.

மிளகாய் என்பது தவறாக அமைந்த சொல் என்று கண்டுபிடித்தனர்.  மிளகு+காய் = மிள + காய் = மிளகாய் ஆயிற்று.  இதில் இருந்த கு என்ற விகுதி விலக்கப்பட்டு,  இறுதியில் இயல்புப் புணர்ச்சியாய் வலி மிகாது அமைந்தது.  இதில் கோளாறு ஒன்றுமில்லை. அவர்கள் சுட்டிக்காட்டுவது என்னவென்றால், மிளகாய்ச் செடி, மிளகாய்ப் பழம், மிளகாய் இலை என்றெல்லாம் அமைவது,  அதாவது நாம் மாங்காய் மரம், மாங்காய்ப் பழம் என்று சொல்வதில்லை.  பழம் என்று சொல்லும்போது ஏன் காய் என்ற சொல் அங்கிருக்கவேண்டும்?  காரணம் என்னவென்றால் காயை அறிந்துதான் பின்னர் செடி, பழம். இலை எல்லாம் தமிழன் அறிந்தான்.  மிளகாய் என்ற சொல்லே தவறாய் அமைந்துவிட்ட சொல் என்பதுதான்.  இப்படி அமைந்ததனால் மிளகாய் வெளிநாட்டுப் பொருள். அதற்கு உண்மையில் தமிழில் பெயரில்லை. மிளகுடன் ஒப்பிட்டு மிளகாய் என்ற சொல்லை அமைத்தனர் என்பதும்  ஆகும்.

ஆனால் இந்தச் சொல் புலவர்கள் அமைத்தது
அன்று.  மக்களால் அமைக்கப்பட்டது.  மிளகாய் புதுப்பொருளாக கொண்டுவரப்பட்ட அன்றே ஒரு புலவர் போய் அதற்குச் சொல் அமைத்திருந்தால் இந்த இடர்ப்பாடுகள் இருக்கமாட்டா! யாரும் எட்டிப்பார்க்காத நிலையில் சந்தையிலிருந்த தமிழனே சொல்லை அமைத்துக்கொண்டான்.  அவன் முயற்சியை முதலில் பாராட்ட வேண்டும்.

அதன்பெயர் வேறுவிதமாய் அமைந்திருக்கலாம். மிளகாய் (மொளகா, மொளகே) என்பதன் பேச்சு உருவில் காய் என்பது இல்லை.  கா / கே மட்டுமே உள்ளது.  இதை எழுத்துருவாய் வடித்தபோது, மிளகாய் என்று தமிழ் வாத்தியார் எழுதினார்.  கா என்பதைக் காய் என்று  எடுத்துக்கொண்டார்.

மிளகு + ஆ:  இங்கு  ஆ என்பதை ஆவது என்று கொண்டால்,  மிளகுக்குப் பதிலாய் ஆவது என்ற பொருள் வரும்.  ஆ என்பது முதனிலைத் தொழிற்பெயராய் அமையும்.  மொளகா என்பதில் உள்ள கடைச்சொல் ஆதல் குறிக்கும் ஆ எனலாம்.

மொளகு ஆவு;  மொளகு ஆயி.   மொளகு  ஆ.  மொளகா > மொளகே.  அதாவது மிளகாய் என்பது மிளகுக்கு ஆகும் பொருள் (காய் அல்லது பழம்.)
மிளகு ஆவு.  மிளகு ஆயி என்பதைத் திருத்தி மிளகாய் என்று  அமைத்திருக்கக்கூடும்.

மொளவா மொளகா என்று பலவாறு அலைந்து இறுதியில் மிளகாய் ஆகிவிட்டது!    என்றாலும் -ஆ  என்பதே சொல்லிறுதி.  அப்படியானால் மிளகாய்ப் பழம் மிளகாய்ச் செடி என்பவற்றில் இடர்ப்பாடு இல்லை.  அது வெளியூர்ப் பொருள் என்பதை மறுக்க முனையவில்லை.

இனித் தோன்றும் பிழைகள் இப்போதுள்ளவை எவையும்
பின்னர் திருத்தம் பெறும்.

Pl read cautiously as a virus places extra dots on 
words. Edited but may recur. 
-----------------------------------

Footnote: 
 


1.There is also a belief that the Portuguese brought it to South Asa and SE Asia.  (Whoever brought it, it is not indigenous to  South Asia. ) 

 






வெள்ளி, 5 ஜனவரி, 2018

மோடி பொருளியல் வெற்றி.






இந்தியப் பொருளியல்  (GDP -  மொத்த உள்நாட்டு உற்பத்தி) இப்போது மேல் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது வெளிநாட்டுப் பொருளியலாளர்களாலும் ஒருவகையில் எதிர்பார்க்கப்பட்டதே என்னலாம். இந்த மேம்பாட்டின் சிற்பிகள் தலைமையமைச்சர் மோடியும் நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் என்பது நாம் வாசிக்கும் இதழ்களிலிருந்து நமக்குத் தெரிகிறது.

ஆனால் நாட்டில் உள்ள சில வீழ்ச்சிகளை ஓர் எதிர்க்கட்சி சுட்டிக்காட்டுகிறது. எட்டாண்டுகளாக நாடு குறித்த சில வீழ்ச்சிகளிலிருந்து மீளவில்லையே என்`கிறது.  அந்த எதிர்க்கட்சிதான் மோடிக்கு முந்திய பத்தாண்டுகள் பதவியில் இருந்தது. அப்போதெல்லாம் அக்கட்சி என்ன நடவடிக்கை எடுத்தது என்ற கேள்வி எழுகிறது.  யார் என்ன செய்ததனால் அந்த வீழ்ச்சி ஏற்படத் தொடங்கியது என்ற  கேள்வியும் கூடவே எழுகிறது!

நாம் எந்தக் கேள்வியும் கேட்கலாம்.  ஆனால் கேட்பவனுக்கே  அதன் தொடர்பான எதிர்க்கேள்விகள் எழுமானால்  மோடியைக் கேள்வி கேட்பதில் ஏதும் நன்மை இருப்பதாகத் தெரியவில்லை.  இதையும் இவைபோன்ற பிற வீழ்ச்சிகளையும் சரிசெய்ய இவர்களிடமும் எந்த மாத்திரையும் இல்லை என்பதே இதிலிருந்து பிறர் அறிந்துகொள்வதாகும்.

மோடியார் சொல்வது (மொத்த உள்நாட்டு உற்பத்தி ) அரசில் சேவையாற்றும் பொருளியல் வல்லுநர்கள் கணித்துப்  பார்த்து  அறிவித்ததாகவே இருக்கவேண்டும். ( அவர் சரிபார்த்திருக்கலாம்.  ஆனால் கணக்குவேலை வல்லுநர் செய்வது.  எல்லா அரசிலும் அப்படித்தான்.)   அதைத் தவறு என்று சொல்ல அந்த விவரங்கள் எல்லாம் நமக்குத் தெரிந்திருக்கவேண்டுமே!  மோடி ஏணியைப் பற்றிச் சொன்னால் எதிர்க்கட்சிகள் ஏற்றத்தைப் பற்றி பேசிக்கொண்டிருப்பது, ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை.

அடிக்குறிப்பு:

உற்பத்தி  -  சொல்லாக்கம் அறியச் சொடுக்கவும்:
http://sivamaalaa.blogspot.com/2013/11/blog-post_20.html
கரு, விதைகள் முதலானவை "உள் பற்றித்தான்"  உருவாகுகின்றன.  இது
திரிசொல்.  உள் - உல்.  பற்றி -  பத்தி.  உல்+பத்தி.  உறுப்பத்தி என்னும் பேச்சுச் சொல்லும் கவனிக்கப்பாலது.

வியாழன், 4 ஜனவரி, 2018

கூர்மாவதாரத்துக்கு ஒரு சொல்.

கூர்ம அவதாரத்துக்குத் தமிழ் தந்த சொல்.

இங்குக் கண்டு மகிழவும்.

https://wordpress.com/post/bishyamala.wordpress.com/833

கூர்மம் என்ற உயிரி

நங்கூரம் என்ற சொல்



இன்று நங்கூரம் என்ற சொல்லை  ஆராய்வோம்.

நம் தமிழ்மொழி பன்முகங்கள் காட்டும் ஒரு மொழி.  அதாவது:  சில சொற்களைச் செவிமடுத்தால் அது சீனமொழிச் சொல் போலிருக்கும். எடுத்துக்காட்டாக:  சாய், பாய், நாய்,  வேய் என்று  ஒலிக்கும். இத்தகைய ஒலியுடைய சொற்கள் சீனமொழியில் உண்டு. ஆனால் அவற்றின் பொருள் வேறுபட்டன.  சில இந்தோ ஐரோப்பியச் சொல் போல  ஒலிக்கும். வேறுசில மலாய் போல தோன்றும்.  இவற்றுள் திரிந்து வேற்றுமொழிபோல் தோன்றுவனவும் ஒருதிரிபும் இல்லாமலே அப்படித் தோன்றுவனவும் உண்டு. ஒலியமைப்பை மட்டும் வைத்து இது எம்மொழிச் சொல் என்று தீர்மானிப்பதில்லை.

சில தமிழ்ப் பெயர்களை வால்வெட்டிவிட்டுக் கேட்டால் வெள்ளைக்காரன் பெயர்போல் இருக்கும்.  எடுத்துக்காட்டாக பெரியசாமி என்பவர் தம் பெயரைப் “பெர்ரி” என்று மாற்றிக்கொண்டு தம் நண்பர்களிடையே மிக்க விரும்பப்படுபவராக ஆகியிருந்தார்.  “மிஸ்டர் பெர்ரி”  ஆனார்.

இவற்றை ஏன் கூறுகிறேன் என்றால் தமிழியல்பினை விளக்குவதற்காகவே. பேசும்போது கடினமாகத் தமிழரல்லாதோருக்குத் தோன்றினாலும் தனிச்சொற்கள் பல வேளைகளில் அப்படிக் கேட்பதில்லை. சில தமிழ்ச்சொற்கள் அயற்சொல் போல் தமிழருக்குச் செவியில் ஒலிக்கலாம்.  அத்தகைய சொற்களில் நங்கூரம் என்பதுமொன்று.

இச்சொல்லில் இரு பகுதிகள் உள. ஒன்று நன்மை குறிக்கும் “நன்” என்பது. இன்னொன்று கூர் என்பதிலிருந்து பெயர்ச்சொல்லாக விளைந்த கூரம் என்ற சொல்லாகும்.

மனத்தில் நன்மை கருதியபடி, சொல்லால் மகிழ்வுறுத்தச் செய்யப்படும் நகைச்சுவைப் பேச்சை : " நங்கு " என்று குறித்ததும் கருதவேண்டியதே ஆகும்.  நன்மை+கு = நங்கு.  இங்கு : " ன் " என்பது " ங் "  எனத் திரிந்தது.

கடலில் கப்பல் கவிழாமல் இருக்க நீரடியில் இறக்கப்படும் கூரான இரும்புதான் நங்கூரம்.  கப்பல்கள் அடிக்கடி கவிழ்ந்து உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் விளையாமல் நல்லபடி இருக்கவேண்டும் என்பதை முன் நிறுத்தி “ நன் “ சொல்லின் தொடக்கமாகிறது. வறுமையில் வாட்டமுறுவோருக்கு “ நல்கூர்ந்தார்”  என்று ஒரு சொல் ஏற்படவில்லையா?  வறுமையில் நன்மை ஏதும் இல்லை. இருந்தாலும் நன்மை இனி விளையவேண்டும் என்ற நம்பிக்கையிலும் எதிர்பார்ப்பிலும் இச்சொல் இங்கனம் அமைந்தது.  அது கடிக்காமல் இருக்கவேண்டும் என்ற அச்சத்தில்  “ நல்ல பாம்பு”  எனவில்லையோ?  அதைப்போல கவிழாமல் இருக்க அந்தக் கூரமாகிய இரும்பு “  நங்கூரம் “ ஆனது.  அறிவியல் மேம்பாடு அடைந்துவிட்ட இந்த நிலையிலும் :

நாளை நடப்பதை யாரறிவார்?  ஆதலின் நன்மை கருதிய கூரமே நங்கூரம் ஆகும். 

பிழைகள் தோன்றின் திருத்தம் பின்