வெள்ளி, 24 நவம்பர், 2017

ஐயப்பன் பக்தர்கள் நாளை அறப்பணி


நாளை   21.11.2017 ஐயப்ப பற்றர்கள் முதியோர்
இல்லம் சென்று அறப்பணி செய்து

அங்குள்ளோரை மகிழ்விக்கிறார்கள்.
அவர்கள் உங்கட்குச் சொல்வதுபோல்
அமைகிற கவிதை இது .


ஐயப்ப பத்தர்கள் நாங்களே--- நாங்கள்
அன்புகொண்   டங்கு வருகிறோம்

மெய்யாய் முதியோரைக் காணுவோம் ---கண்டு
மேலாம்  அறப்பணி பூணுவோம்,


மூதாட்டி கட்குப்பல் சேலைகள்---ஆண்
முதியோர்க ளுக்குப்பல் வேட்டிகள்.
ஆதாரம் அற்றார்க்குச் சாப்பாடு---எங்கள்
அய்யப்ப    சாமிவ   ழிபாடு


இல்லமோ அன்றெங்கள் இல்லமே --- நாங்கள்
இயற்றுவ தய்யப்பன் உள்ளமே,
சொல்லிடும் நற்பணித் திட்டமே ---இங்கு
சூழ்குமு கத்துநல் வட்டமே. 




இளைஞர் திருமோகன் சாமியே --- குழு
இதன் பொறுப்பேற்ற முன்னவர்;
கிளைஞர் மினுங்குறு நட்பினர் --- போலும்
மிறைத்தல் மிகக்கொள் உறுப்பினர்.
 



ஆதாரம்  - வாழ்வாதாரம் 
அன்று   -  அத் தினத்தில் 
கிளைஞர் - உறவினர்.

குமுகம் - சமுகம்.
மிறைத்தல் - பாடுபடல். உழைத்தல்.

மினுங்குறு - ஒளிவீசும்;  மேலெழும்.

சில தொடர்களுக்குப் பொருளுரை:


இல்லமோ அன்றெங்கள் இல்லமே  :   இல்லமோ  -  குறிப்பிட்ட

முதியோர் இல்லம் என்பது;

அன்று எங்கள் இல்லமே:  நாங்கள் வந்து சேவையாற்றிய போது

அது எங்கள் சொந்த இல்லம் (போல் ஆயிற்று).

சூழ்குமு கத்துநல் வட்டமே.  :  சுற்றியுள்ள மக்கட்கு  நல்ல

வட்டாரமாகிவிட்டது.
 
 


வெண்டளையும் சில இடத்துப் பிற தளையும்
தட்டு வந்த சிந்து கவி .

இது "எளிதாக்கப்"பட்டுள்ளது.



இப்போது சந்தக் கவிதைகளைத் தெரிந்துகொள்வோம்.
இது முதலில் சந்தமின்றி பெரும்பாலும் வெண்டளையில் எழுதப்பட்டுப் பின் சந்தம் வரும்படி மாற்றப்பட்டது.
சந்தத்தின்பொருட்டு சீர்கள் அறுக்கப்பட்டு ( வகையுளி ) சொற்கள் முழுமையாக நில்லாமல் தொடுக்கப்படும்.  எடுத்துக்காட்டு:
ஒரு சொல்லின் பகுதி அடுத்த சீரில் சென்று சேரக்கூடும்.
மூதாட்டி கட்குப்பல் சேலைகள்---ஆண்
முதியோர்க ளுக்குப்பல் வேட்டிகள்.
இது  சொற்களாக நிறுத்தப்பெறின்:
மூதாட்டிகட்குப்   பல் சேலைகள்---ஆண்
முதியோர்களுக்குப்   பல் வேட்டிகள்.
என்று வரவேண்டும்.
ஆனால் சந்தம்:
மூதாட்டி/ கட்குப்பல்/ சேலைகள்---ஆண்
முதியோர்க/ ளுக்குப்பல்/ வேட்டிகள்.
என்றபடி அமைதல் காண்க.


சில இடங்களில் இது பின்பற்றப்படாமல் விடப்பட்டது.

கிளைஞர் மினுங்குறு நட்பினர் --- போலும்
மிறைத்தல் மிகக்கொள் உறுப்பினர்.  

இதை நீங்கள் சந்தம் வரும்படி படித்துக்கொள்ளுங்கள்:
கிளைஞர் மி / னுங்குறு/ நட்பினர் --- போலும்
மிறைத்தல் மி/  கக்கொள் உ   /றுப்பினர்.
இப்படிப் படிக்கும்போது,  நட்பினர் என்பது றுப்பினர்
என்பதுடன் இயைந்தொலிக்கும்.


இக்காலத்தில் சந்தப்படி பிரித்தெழுதுவதை ஆசிரியர் 
சிலர் விரும்புவதில்லை. பொருள்தெரியக் 
கடினமாக்விடுவதால். 
 



last edited   21/11/201 7  1225 MST
 post screen appearance differs -  noted.

WARNING:  This post may appear disorderly on
your screen.  This is due to some inherent fault 
in the post software. Please read with caution.
We are not able to rectify it. 

வியாழன், 23 நவம்பர், 2017

சவுரியம் தமிழா?



இன்று சவுரியம் (சௌரியம்)  என்ற பேச்சுவழக்குச் சொல்லைப் பற்றிச் சிந்தித்து ஒரு முடிவை எட்டுவோம்.

இது பேச்சு வழக்கில் அசைத்து விலக்கிவிடமுடியாத வலிமை பெற்றதாக உள்ளது என்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள்.

நலம் என்ற சொல் ஓரளவு பரவியுள்ளது.
உகந்த உடல்நிலை என்று பொருள்படும் சுகம் என்பது இன்னும் வழங்கிவருகிறது.

உகத்தல்:   உக > சுக > சுகம். அகர வருக்கத் தொடக்கத்துச் சொற்கள் சகர வருக்கமாக வரும் என்பது முன்னர் எம் இடுகைகளில் தெளிவுபடுத்தப்பட்டது. அங்கனம் திரிந்ததே சுகம் என்ற சொல்லும்.

இப்போது சவுரியம் என்ற பேச்சுச் சொல்லுக்கு வருவோம்.

சவுங்குதல் என்பது மனம் தளர்தல். இது  தமிழ் வினைச்சொல்.

மனம்தளர்தல் இல்லாத நிலையே, நலமான நிலையாகும்.  உடல் தளருமாயின் மனமும் தளர்தல் தெளிவு,

சவுங்கு+ அரு+ இயம் = சவுகு+ அரு + இயம் > சவுகரியம் ஆகும்.
ஆக சவுகரியமாய் இருக்கிறேன் எனில் மனத்தளர்ச்சி இல்லாத நலத்துடன் இருக்கிறேன் என்பது.

சவுகரியம் என்பது சவுரியம் என்று திரிந்தது. இது சௌரியம் என்றும் எழுதப்பெற்றது.

சவுங்கு என்பதில் ஒரு ஙகர ஒற்று மறைத்த்து அன்றோ.  இதற்கு ஓர் உதாரணம்:

இலங்கு > இலகு என்பது காண்க.  இலகுதல் = ஒளிர்தல்.
அதுவேபோல் சவுங்கு > சவுகு.

சவுங்குதல் என்பது சவுத்தல் என்றும் திரியும். சவுத்தல் என்றால் அலுத்தல், இளைத்தல், குறைதல், மெலிதல், மதிப்பு அல்லது விலை குறைதல் ஆகிய பொருள்களை உள்ளடக்கும்.

இனி, சவு + அரு+ இயம் = சவுரியம் என்றும் காட்டினாலும் இளைப்பரிய நிலை குறிக்கும் என்பதைக் கண்டுகொள்க.

சவு > சவுத்தல்.
சவு + கு = சவுங்கு.  கு என்பது வினையாக்க விகுதி.
சவுங்கு >  சவுகு என்பது ஙகர ஒற்று விலக்கப்பட்ட சொல். மூலச்சொல் சவு என்பதே. விகுதி விலக்கம் பெரிதன்று.

இச்சொல் சவு+ அரு+ இயம் = சவரியம் என்று  வராமல் சவுரியம் என்று
வுகரத்தை இருத்திக்கொண்டதே தமிழறிஞர் தடுமாற்றுக்குக் காரணம். ஆனால் இது சவுகரியம் என்பதில் இல்லை.  சவுகரியம் > சவுரியம் என்று ககரம் வீழ்ந்தது என்றும்  கொள்ளலாம். இது பேச்சுச் சொல் ஆதலின் மக்கள் விழைந்தபடியே அமைந்தது என் க. சவுரியம் என்பது அவர்கள்  விழைந்த வடிவம்.

சவரியம் > சவுரியம் எனத் திரிதலும் கொள்க.

அறிந்து மகிழ்வீர்.


புதன், 22 நவம்பர், 2017

பாடி மகிழ அம்மன் பாட்டுகள்

அம்மன் பாட்டு: 

சிந்துபைரவி இராகத்தில்:

1.  கருணை தெய்வமே கற்பகமே.

https://sivamaalaa.blogspot.sg/2013/09/amman-pattu.html 


 இரதிபதிப் பிரியா இராகத்தில்:


2. ஜெகத் ஜெனனி

     சுத்தானந்த பாரதி பாட்டு.

 
https://sivamaalaa.blogspot.sg/2016/09/blog-post_20.html 

 பாடி மகிழுங்கள்

ஞாயிறு, 19 நவம்பர், 2017

தென்றல் உலவிடும் போதினிலே




தென்றல் உலவிடும் போதினிலே
என்றன் மனமும் கவிதையிலே
ஒன்றாய் உறைந்து விடுகிறதே  --- இதை
மன்றில் தெளிக்க விரும்பிடுதே.

மனத்தைக் கவிதை இனிமையிலே
திணித்தே களிப்பை மிகுத்திடுதே
அனைத்தும்  அகலாக்  கனிந்திடுமே  -- எனை
இணைத்தே  இனிமைத் தமிழினிலே.

கடலில் அமிழ்ந்தும் அணைந்துகரை
கடந்து தடவும் அலைகளைப்போல்
உடலில் பெருகும் உணர்வதையே---யான்
இடவும் பதங்கள் கிடைத்திலவே


அகலா -  அகலாமல்.

இது ஒவ்வோர் அடியும் வெண்டளை வரும்படி
பாடப்பட்டுள்ளது.  அடுத்த அடித் தொடக்கத்தில்
தளை வேறுபடலாம். 

சில வாரங்களாக யாம் பாடியவை எல்லாம்
விருத்தங்களாக அமைந்திருந்தன. இந்நிலை
மாறி  வரவின்போதே வேறு பாக்கள் 
வர வேண்டியபடி இவ்வரிகள் வழிந்து 
வந்தன. அம்மன் அருளால்.