வெள்ளி, 20 ஜூன், 2025

தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி என்ற பெயரை இன்று ஆய்வு செய்கையில் இரு நன்மைகள் காண்கிறோம். ஒன்று, தட்சிணம் என்பதை உணர்வதுடன்  ; இரண்டு, மூர்த்தி என்னும் அழகான பெயரையும் தெரிந்து மகிழ்கிறோம்.

மூர்த்தி என்ற சொல் பலருக்கும் பெயராகவும் இலங்கும்  பெருமை கொண்டது.  தெய்வப் பெயர்களிலும் இணைந்து வருவது. கிருஷ்ண மூர்த்தி  இராமமூர்த்தி கணேச மூர்த்தி எனவெல்லாம்  காண்க.

வினைச்சொல்: முகிழ்த்தல்.  முகு: பொருள்: முன் சேர்தல். முன் வந்து தெரிவது. மு= முன்; கு = சேர்வுக் குறிப்பு. மு+கு > முக்கு,  பொருள் முன் அல்லது வெளிக்கொணர்தல்.  இழ் என்பது ஒரு விகுதி. பெயரிலும் வினையிலும் இழ் விகுதியாகும்.   இழ் என்பது ஓர் அடிச் சொல்லுமாகும்.  இழ் > இழு, இழை, இழி என்பவற்றில் வெவ்வேறு ஆனால் தொடர்புறு இயக்கங்களைக் குறிக்க வரும். ஆகவே தமிழ் என்றால் தனிமைப் பண்புடன் , சுவையுடன் பொருளுடன்  இயங்கும் மொழி என்று கொள்க.  ஆக, முகிழ் > முகிர் > மூர். + தி (விகுதி ) > மூர்த் தி :  முன்தோன்றும் தெய்வஉரு

தென்கணம் > தெற்கணம் > தெக்கணம் > தக்கணம் >  தட்சிணம். ( எ> அ). எ -  அ: தெரிசனம் - தரிசனம். சொன்முதல் திரிதல்.

தெற்கணம் பார்க்கும் தெய்வம் என்றாயிற்று. தெற்கணம் - தென்திசை.

கண் = இடம்   கணம் இங்கு நிலப் பகுதி.

 அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்ந்துகொள்க 








எது சரி? நெசமா நிஜமா

 இதனை இப்போது ஆய்வு செய்வோம்.

நடைமுறை  வாழக்கையில் நம் மக்கள் பேசும்போது நெசம் என்றுதான் பேசுகிறார்கள். இதை ஆயந்த சிலர் நில் என்ற சொல் கடைகுறைந்து சு அம் என்ற விகுதிகள் ஏற்று நிசம் என்றாகி  நெசம் என்று மாறி வழங்கும் என்றனர்.  இந்தக் கருத்தில் உண்மை இருக்கி றது என்று நினைக்கலாம்..

எழுத்துத் திரிபுகள் என்ற அளவில் இந்த  விளக்கதில் வழு ஒன்றுமில்லை. ஆனால்  இதனினும் சிறந்த கருத்தில் நெசம் என்பதே முதலாகச் சொல் தோன்றியது என்பதே உண்மையாகும்.

ஓர் உண்மையைக் கூறுகையில் கருத்துகள் தம்முள் இணக்கம் பெற்று சொல்வது ஏற்புடைமை அடையும். பொய் எனின் ஒன்றுக் கொன்று பொருந்தாமை வெளிப்படும். Contradictions, inconsistencies என்றிவற்றைக் கூறுவர்

ஆகவே உண்மை  நெசவு போன்ற இழைப் பொருத்தம் உள்ளது. இதனாலே நெசவு என்ற சொல்லினடியாக நெசம் என்பது  தோன்றிற்று. இதுவே சரியானது மேலானது ஆகும்  இருவழிகளில் உரைபெறு சொல் இதுவாம்.   நெசவு என்பதில் நெச என்பது அடிச்சொல் அன்று (அல்ல) எனினும் அடிபோல் பாணினிபோல் பாவித்துக் கொண்டால்,  அதனோடு அம் விகுதி இணைப்பின் அது நெசம்  ஆகிவிடும். இழைப்பொருத்தம் ஆதலின் உண்மைத்தன்மை உடையது என்பதாம். எளிதாகப் புரிந்துகொள்ளும் நோக்கில் சுருக்கினோம்  விரித்துரை வேண்டின் எமக்கு எழுதுங்கள்.  புரிதலுக்காக இஃது அடி என்று உரைக்க.

இணக்கம் கருதி இது இருபிறப்பி அல்லது பல்பிறப்பிச் சொல் என் க .

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்ந்து பரப்புக.


 கூறுவர் 





உலகுக்கு உதவும் பிரதமர் மோடி

 பிறருக்கும் தமரான பிரதமர் மோடி

பிரியாமல் உலகருடன் உறைந்து வாழ்வார் 

அறவர்க்கும் அன்பருக்கும் அருமைச் செம்மல்

ஆலயத்தில் இறைவர்காண்  அகத்து மாண்பர்

அரியதீவு சைப்பிரசில்  அடியை வைத்தார்

ஆனமக்கள் அனைவர்க்கும் உறவர் ஆனார்

பெரிதுசொன்னார் இதுவன்று போர்செய் காலம்

பிழைக்காதீர் என்றபடி  பெருமை கண்டீர்.


பொருள்

பிறருக்கும்  -  தாம் அல்லாத பிறருக்கு(ம்)

உலகர் -  உலகத்து மக்கள்

உறைந்து - ஒன்றிணைந்து

அறவர் -  அறம் செய்வோர்

ஆலயத்தில் இறைவர்காண்  அகத்து மாண்பர்

ஆலயங்களின்  இறைவனைக் காண்பவர்

அகத்து மாண்பர் -  மனத்தில் மாண்புடையார்

உறவர் - சொந்தக்காரர்

பிழைக்காதீர் - இதற்குச் தவறு செய்யாதீர் என்று பொருள்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.