ஞாயிறு, 20 ஏப்ரல், 2025

சரண்யா - யா இறுதி

 பெண் மக்கள் பெயர்களில் யா என்னும் இறுதி எவ்வாறு  ஏற்படுகிறது என்று அறிந்து கொள்வோம்.

சரண் என்ற ஆண்மகனின் தாய் அல்லது  "ஆயா" வை சரண் ஆயா என்று அழைப்பீர்கள். இப்படிச் செய்ய மனிதற்கு முயற்சி தேவைப் படுகிறது. இத்தகு கூடுதல் முயற்சிகளைக் குறைத்துக் கொண்டு சொல்ல வருவதை விரைவில் முடிக்க வேண்டியது அன்றாட வாழ்க்கையில்  முதன்மை யாம். செய்யத் தகுந்தவற்றைச் செய்யக் காலம் தாழ்த்தல் கூடாது. அத னால் சொற் சுருக்கம் தேவை யானதே. சொற்கள் சில சுருக்கத்தில் அழகுறுகின்றன.

சரண் ஆயா என்பது சரண்யா என்று சுருங்குகின்றது.

இதுவேபோல் சுகன்யா என்பதும் சுருக்கமே.

நீட்டங்கள் இல்லாமல் சுருக்கங்களே மிக்கு நின்ற மொழிகளும் உலகில் உண்டென்று கொள்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்ந்துகொள்க.





 செய்ய




 அழைக்கும் அழைக்க  முயற்சி தேவைப் படும். இதைத் தெளிவுய்யன்ப

வெள்ளி, 18 ஏப்ரல், 2025

திராவிடம்

 இந்துச் சொல்லைப் பற்றிச் சிந்தித்த காலை முன்னே நாம் சில கூறி இருக்கிறோம். பஞ்ச திராவிடம் பற்றியும் சில சொன்னோம்.

இவை இருக்கட்டும்.

ப ஞ் ச. திராவிடமும் பற்றி யாரும் அக்கறைப் பட வில்லை.

Conic projection. என்று சொல்லப்பட்ட தென்னாட்டு  நிலப்பரப்பு  உண்மையாகவே ஒரு தி ற ப்பான  முக்கடலையும் அப்பால் ஒரு மா கடலையும் கொண்ட  புவிப் பகுதியே. திற ந்த இந்த இடம்    "தி  ற இடம"ல்லாது வேறு  என்ன ?  இடப்பெயர் இனப்பெயர் அல்ல. (அன்று)

தமிழன் வைத்த  வாய் மொழிப் பெயர் தான்.  ஒப்புக் கொள்ள  முடியவில்லை.  இதை மறைக்க முன்னரே முயற்சிகள் மேற்கொண்டிருப்பர்.  அது பலித்ததோ இல்லையோ,  அது  பிராமணர்களுக்குரிய பெயரும்  ஆனது   இப்போது அந்தச் சொல்லுக்குப்  பல சொந்தங்கள்.

திறந்த கடல் முப்புறமும் கொண்ட திறவிடம்.  திரவிடம் திராவிடம் என்று எப்படியானாலும் உண்மையை மட்டும் மறைக்கமுடியவில்லை.

இடம் என்ற இறுதிச் சொல் இன்னும் உயிரோட்டத்துடன் மிளிர்கிறது.

 அது இடப்பெயர்தான்.   சம்ஸ்கிருதம்  தமிழெல்லாம்  இந்தியத் தாயின் மொழிகள்தாம்,  

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்



If you enter compose mode please do not make changes.

You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகையை எந்த சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.












புதன், 16 ஏப்ரல், 2025

புதல்வன்

 மகன், மகள், மக்கள் என்று ஒருமை (ஆண்)- ஒருமை (பெண்) -  பன்மை ( இரு பாலாரும்) என இருந்தாலும் புதல்வன்,  புதல்வி ,புதல்வர் என ஆண்பால் பெண் பால் பலர்பாலாகவே இந்த அமைவுகள் வருகின்ற -ன.  குழந்தை, பிள்ளை மதலை, மழலை முதலிய சொற்கள் ஐ விகுதி பெற்று  முடிகின்றன. பொதுப்பால் என்ற பகுப்பினை நூல்களில் காணா விட்டாலும் இவை வெவ்வேறு கூ றுபாடுகள் உடைய பொதுச்சொற்கள் தாம். இவற்றிடையே பகவொற்றுமை  ( uniformity) காணலாம். 

புதிய வரவாக வந்த குழந்தைதான் புதல் வன் அல்லது புதல்வி எனப்பட்டது. புதுமை குறிக்க புது என்ற சொல் இருப்பதைக் கண்டுகொள்க.  

அல் எனல் அது  இடம் எனலே.

இன்னொரு முறையில் கூறுவதானால் இல் எ ன்பது இந்த இடம்,  அல் என்பது அந்த இடம். இடம் இது என்பது இல். இடம் அது என்பது  அல். இடம் முன் என்பது உல்.

ஆகவே இல் என்பது இது என்று சுருக்கிக் கூ  றலாம். இல் - வீடு மற்  றொரு  பொருள் 

புதல்வன் என்ற சொல்லை புது + அல் +வு + அன் என்று பிரிக்க வேண்டும். புது அல் வு இ என்பதும் இதனாலே பெறப்படும். புதல்வர் - அர் விகுதி. இதன்  அடி "புது" என்பதறிந்தீர்.

புகு என்னும் சொல்லும் புது என்பதுடன் தொடர்புடையதே என்க. புதியன புகுதல் என்னும் வழக்கினையும் காண்க

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்ந்துகொள்க. வணக்கம்.