ஞாயிறு, 18 ஜூலை, 2021

கவலையைத் தீர்ப்பது இறைப்பற்று,

உங்களுக்கும் எத்தனையோ வேலைகள்.  இந்நிலையில்,  கடவுள் கண்ணுக்குத் தெரியவில்லை என்று வாதிட்டு நேரத்தை வீணாக்கவேண்டாம்.  உங்கள் வேலைகளில் ஈடுபடுங்கள்,  ஆனால் வேலைகளக் கவலைகளாக மாற்றிக்கொள்ளவேண்டாம்.  கடவுள் இருப்பதாகவே பாவித்து,  சூடன் சாம்பிராணி கொளுத்திக் கும்பிட்டுக் கொண்டிருந்தாலும்,  நல்லதுதான்.  செலவு ஊதுபத்தி சாம்பிராணிக்கு!அந்த நேரத்தை அப்படிச் செலவிடாமல் வெளியில் போய்ச் சண்டைகளிலும் கொரனாத் தொற்றுத் தொடர்புகளிலும் ஈடுபட்டு ஏன் துயரத்தை வரவழைத்துக் கொள்கிறீர்?  சூடன் சாம்பிராணிக்குச் செலவு என்றால் வேறுவழிகளும் உள்ளன.  தியான வழிபாடு செய்யுங்கள். (ஊழ்குதல்). செலவு ஒன்றுமில்லை.  ஆனால் புகை இல்லை என்றால் கொஞ்சம் கொசுத்தொல்லை ஏற்படலாம். பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். உங்கள் மதப்படி பின்பற்றுங்கள். நன்மை உங்களுக்குத்தான்.  இறையுணா  [ பிரசாதம் ]  உட்கொள்ளுங்கள் ( நீங்களே சமைக்கலாம், நேரமிருந்தால்.).  மனம் என்பது கவலைகளின் வங்கியாக மாறிவிடக்கூடாது.  நீங்கள் செய்வது எதுவும் உங்களுக்கு நல்லதாக அமையவேண்டும்.  அதன் பலன் உங்களுக்குத் தானே வருகிறது.  குடித்துவிட்டு ஆடும் இடங்களைத் தவிர்த்து விடுங்கள். உங்கள் வாழ்வு மலரவேண்டும்.

இதுதான் இந்த வரிகளை எழுதக் காரணம். இதைத்தான்  இவ்வரிகள் முழங்குகின்றன.



கடவுளைக் காணாய்நீ -- -- -  அதனால்

கவலை  ஏனுனக்கு,     --- மனிதா!

அட எத்  தனைகவலை ----  சேர்த்தே

இந்தக் கவலையும் வேண்டுவதோ?


இருப்பதாய்ப் பாவிக்கிறாய் ---  பணிந்தபின்

எழுந்து இன் சோறுனக்கே ,

பருப்புடன் சமைத்ததுவோ  ---- ஆன்மப்

பசிக்கும்  உணவதுவே.


பழங்களால்  மாலையிடு ---  பலவும்

பாடுக   பாராட்டி.

வழங்கி வண்மைதரும் ---  உள்ளம்

வந்துவிடும் உனக்கே. 


கவலைகள் காப்பகமாய் ---- உன்மனம்

காசினியில் தவித்தால்

உவகை தருவாழ்வினை ----  நீயும்

ஒத்து நுகர்வதெங்கே?


சோடனை செய்வது எப்படி?  தெரிந்துகொள்க





அரும்பொருள்:


பாவிக்கிறாய் -  பாவிக்கவேண்டும் என்பது

இறைவன் நாமம்  -  பாவன நாமம்.  இறைமை  மறைவாக உள்ளது.  கண்ணுக்குத் தெரியவில்லை. காதுக்கும் கேட்கவில்லை.  உற்றும் அறியமுடியவில்லை.  நறுமண வடிவில்லை - மூக்கினை எட்டவில்லை.  நாவிலும் இனிதா, கசப்பா என்று அறியமுடியவில்லை.  ஐம்புலன்களுக்கும்  அப்பால் உள்ளது அது.  இறைவனின் ஐந்தொழிலில் " மறைத்தலும் " ஒன்று.   மறைவாக இருக்கிறது.

இருக்கிறது என்று தொழுவதில் உனக்கு நட்டம் விளக்கு, ஊதுபத்திச் செலவுதாம்.  எப்படியானாலும் போகும் காசு போய்த்தான் தீர்கிறது.

இதில் மிச்சம் பிடித்தேன் என்பான். அவன் வாழ்க்கையை
ஆராய்ந்தால் கடனில் இருப்பான்.

சிவன் நாமம்,  முருகன் நாமம்,  அம்மையின் நாமம் எல்லாம் பாவன நாமங்கள்.  நாமம் ஒன்றும் அவனுக்கில்லை என்கிறது சைவசித்தாந்தம்.  இந்த நாமங்கள் கடவுளை அறிதற்கு நம் மொழியில் நாம் பயன்பாடு செய்யும் நாமங்கள்.

நாவில் பயில்வது நாமம்.

பாவன நாமத்தை ஒரு பொழுதாவது பாவனை செய்வீர்.

நன்மையே நல்கும் அது.


.
வண்மை -  வளம்

காப்பகம் -  பொருள் அடையும் இடம்.

காசினி - உலகம்.

நுகர்தல் - அனுபவித்தல்

 

Conversation between grandfather and grand- daughter with photo

 ஒரு தாத்தாவுக்கும் பேத்திக்கும் நடைபெற்ற உரையடல்.


There has been an error. The photo and material are lost. Recovery will be effected as soon as possible.
Apologies to readers.

------------------------------------------------------------------------------------------------------------------------------

RECOVERED

-----------------------------------------------------------------------------------------------------------------------------

SAID THE GRANDFATHER: If there are no cats and dogs this world would have been a lousy place.
I saw a hitch-hiker's YouTube video : He had camped by a large river near the Himalayas and he was visited by 3 dogs at different times of the day. They licked his face and ate some of his biscuits with him serving them. His happiest time was with them in a stretch of 2 weeks.
God made them as companions for us, humans


GRAND DAUGHTER SAID:  Yes thatha I agree. The world will be boring without our four legged friends

------------------------------------------------------------------------------------------------------------------------
Comment:

Your dog does more than your dearest friend to make you feel you are his Maharaja.


அம்மை தமிழென்பது அமைப்பில் தெரியும்.

 மகர ஒற்று  0னகர ஒற்றாக மாறும். இது தமிழ்ப் பண்டிதன்மார் அறிந்த திரிபுதான்.  இதைப்போய்ப் புதிதாகக் கண்டுபிடிக்க வேண்டியதில்லை.

எடுத்துக்காட்டுகள் சில:

திறம்  -   திறன்.

அறம் -   அறன்.

இது கவி எழுதுவோனுக்கு அல்லது பாடுவோனுக்குத் தமிழில் ஒரு நல்ல வசதி. இதைப் பாருங்கள்_

"அறன் எனப்  பட்டதே இல்வாழ்க்கை; அதுவும்

பிறன் பழிப்......."  (குறள் )

எதுகைகள் அழகாய் அமைகின்றன.  பிறன் என்பதற்குத் தக,  அறம் என்னாமல் அறன் என்றே வந்தது. 

திறம் என்பது திறல் என்றும் திரியும். இவ்வாறு  இது  அறல் என்பதற்கு எதுகையானது.

மகர ஒற்று லகர ஒற்றாகவும் திரியும் என்றோம் அன்றோ?   

அப்படியானால் வேறு சில சொற்களிலும் இது இருக்கும்.  எல்லாச் சொற்களிலும் இது நிகழ்வதில்லை.

அம்மை என்பது அன்னை என்றாகும்   மகர  0னகரமானது.

அம் என்ற அடிச்சொல், தமிழில் தோற்றம் என்னும் பொருளை உடையது. இந்தப் பாட்டைப் பாருங்கள்.

"அமைவாம் உலகின் மக்களை எல்லாம்

அடிநாள் ஈன்ற அன்னை தந்தை

தமிழர்கள் கண்டாய் அறிவையும் ஊட்டிச்

சாகாத் தலைமுறை ஆக்கிய நாடு.   ---   தமிழ்நாடு.

இது கவி பாரதிதாசனார் பாட்டு.

உலகம் அமைந்த [தோன்றிய] ( போதே) அனைத்து  மக்களை(யும்)  தமிழ் அன்னையும் தந்தையும்  [ அடிநாளில் ]  ஈன்றனர். 

( உலகம் அமைந்த அடிநாளிலே அனைத்து மக்களையும் தமிழ் அன்னையும் தந்தையுமே ஈன்றனர் ). இவ்வாறு வாக்கியமாய் அமையும்.

அம் >  அமைவு  ( தோற்றமுற்ற காலம்).

அம்  - அழகு என்றும் பொருள்.

உலகின் மிக்க அழகான பெண் யார்?  உங்கள் அம்மாதான்.  சிறு பிள்ளையாய் நீங்கள் பார்த்துப் புன்னகை பூக்கவில்லை?  இதை  எந்த நாளும் மாறாதீர்.  உலக அழகிகளெல்லாம் பின்னர்தான்.

"ஊரெல்லாம் நீயே சென்றாலும் தானே

அம்மா போலே அழகும்

எங்கேயேனும் காணவும் ஆகுமோ சாமி?"   என்றார் இன்னொரு கவி.

கணேசன் என்னும் விநாயகன்,  எனக்கு அம்மாவைப் போலவே அழகான பெண் வேண்டுமென்று குளக்கரையில் காத்துக்கிடந்தும் அத்துணை அழகி யாருமே காணப்படவில்லை.  அம்மாவை எப்போதும் பாதுகாத்துக் கர்மவினை அண்டாமல் காத்துக்கொள்ளுங்கள்.  முற்றத் துறந்த முனிவரான பட்டினத்தடிகளும் 

முன்னை இட்ட தீ முப்புறத்திலே

பின்னை இட்டதீ தென்னிலங்கையில்

அன்னை இட்டதீ அடிவயிற்றிலே

யானு  மிட்ட தீ  மூள்க மூள்கவே

என்று கதறியுள்ளார்.   எவ்வாறு மறப்பீர்  அன்னையை.   " அம்மைய்ப்பா உங்கள்  அன்பை மறந்தேன், அறிவிலாமலே நன்றி மறந்தேன்"  என்பது பாட்டு.

தாயினும் ஒண்பொருள் ஏது?  ஈன்ற தந்தை சொல் மிக்கதோர் மந்திரம் ஏது.

அம்மா அழகு. 

அம்மை,  அன்னை என்ற திரிபுகள் உண்டு.  ஆனால் அல்லை என்ற திரிபு இல்லையோ? திறம், திறன், திறல் என்பதுபோல்,  அம்மை, அன்னை, அல்லை என்றுமாகி,  தாயைக் குறிக்கும்.

அமைப்பு என்ற சொல் தமிழாதலின், அம்மை தமிழாகும்.  இரண்டுக்கும் அம் என்பதே அடிச்சொல்.

இதை அம் என்ற அடிச்சொல் நமக்குத் தெரிவிக்கிறது.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

மெய்ப்பு 2300 17072021