வியாழன், 21 மார்ச், 2019

கர்நாடகத்தில் லஞ்ச லாவண்யம் கட்டிட வீழ்ச்சி

எவனெங்கு போனாலும் என்ன காசை
என்பைக்குள் போடென்று வாங்கும் கட்சி,
கவைக்காகாக்  குற்றங்கள் பிறர்மேல் சாட்டிக்
காலத்தை வீணாக்கும் காங்கி   ஆளும்
நவைகூடும் கர்நடமே அன்றோ அங்கே
நாட்டியெழும் கட்டிடமும் வீழ்ந்த தன்றே
சுவைதேடி வாழ்கின்றார் ஆளும் மட்டும்
சொல்வதற்கும் இல்லாத துன்பம் உண்டே.

Building collapses are frequent in India. Many firms use cheap materials and bribe officials to evade regulations, while on-site safety is lax.
Read more at https://www.channelnewsasia.com/news/asia/11-dead--50-rescued-after-india-building-collapse-11366616

பொருள்:

கவைக்கு ஆகாக் குற்றங்கள் -  பயனற்ற குற்றச்சாட்டுகள்
நவை  -  தீமைகள்
கர்நடம் :  கருநாடக மாநிலம்
நாட்டி -  அடிக்கல் நாட்டியபின்
எழும் கட்டிடம் -  கட்டப்படும் கட்டிடம்
அன்றே -  அல்லவோ
சுவைதேடி -  இன்ப வாழ்க்கைக்காக 
வாழ்கின்றார் -  வாழ்கின்றவர்.

இந்தியாவில் வேலை இல்லாதவர்கள்.


நல்ல நாணயங்கள் மத்திய வங்கியால் வெளியிடப் பட்டுக்கொண்டிருக்கின்ற அதே சமயம் கள்ளப் பணமும் பிறரால் வெளியிடப்பட்டு அவையும் இந்தியாவுக்குள் நடமாட விடப்படும் அவல நிலை வெகுநாட்களாக தொடர்ந்து வந்த நிலையில்தான் தலைமை அமைச்சர் மோடி சில கள்ளப் பணத்தை மீட்டுக்கொள்ளும் நடவடிக்கையைத் தொடங்கிவைத்தார்.

மத்திய விசாரணையகம் உள்நுழைந்து பிடித்த பல இடங்களில் பெருவாரியான கள்ள நாணயம் பிடிபட்டுள்ளது.

போரென்பதைப் பலவாறு மேற்கொள்ளலாம், பெருவாரியான கள்ளப்பணம் நாட்டில் புழங்கினால் அந்நாட்டின் பொருளியல் வீழ்ச்சி அடைந்து விலைவாசி ஏற்றம் விண்ணைத்தொடும். அரசு வெளியிடும் நாணயம் செல்லாக் காசாகிவிட்டால் ஒரு போரில் தோற்றுப்போன அவ்வளவு சீரழிவையும் அது தரவல்லதாகிவிடும். பல பயங்கர வாதிகள் கள்ளப்பணத்தைக் கொண்டே இந்தியாவுக்குள் நுழைவதாகவும், இவ்வாறு கள்ளப்பணம் அச்சிடும் அச்சகங்கள் இந்தியாவுக்கு வெளியில் பல இருக்கின்றன என்றும் சொல்லப்படுகின்றது.

கள்ளப் பணத்தின்மேல் மோடி போர்தொடுத்தமையால் அவற்றைப் பயன்படுத்தி வாக்குகள் வாங்கிய எதிர்கட்சிள் பலவற்றால் சரியாகச் செயல்பட முடியவில்லை.

தமிழ் நாட்டில் பிடிபட்ட கள்ளப்பணம் பெருந்தொகை என்றும் சொல்லப்படுகின்றது. பிற மாநிலங்களிலும் இதுவே நிலை.

இது எல்லாக் கட்சிகளுக்கும் முன்னைய அரசுகளுக்கும் தெரிந்திருந்தாலும் யாரும் நடவடிக்கை எடுக்காத நிலையில்தான் மோடி நடவடிக்கை மேற்கொண்டார். கள்ளப் பணச் சம்பளம் வாங்கிக்கொண் டிருந்தவர்களுக்கு வேலையில்லாமல் போயிருக்கலாம். அது தவிர்க்கமுடியாதது.

இப்போது நிதி நல்ல நிலைமையில் உள்ளதாகவே அரசறிக்கை கூறுகிறது, இருப்பினும் எதிர்கட்சிச் சார்பான அமைப்புகள் நிதிநிலை நன்றாக இல்லையென்றும் வேலையில்லாதோர் கூடிவிட்டனர் என்றும் கூறுகின்றன. உண்மையானால் இப்படிக் கூடுவதற்கு மோடி மட்டுமே காரணம் ஆகிவிட முடியாது. ஒவ்வோராண்டும் பல்லாயிரக் கணக்கில் புதியவர்கள் வேலைச் சந்தைக்குள் வந்து சேர்கின்றனர். பள்ளி முடித்தவர்கள், முன்னர் உள்ள வேலைகளிலிருந்து நீங்கியவர்கள், ஓய்வு பெற்றவர்கள் என்று பலர் வருவர். எல்லோர்க்கும் உடனே கொடுத்துவிட மோடியாலும் முடியாது. அப்படி மோடி கொடுத்தாலும் அவர்கள் பெறும் சம்பளத்தை நாட்டிலுள்ள வரிச்செலுத்துவோரே கொடுக்கவேண்டி யிருக்கும்.

எதிர்க்கட்சிகள் வெளியிடும் மாற்று நிதி அறிக்கைகள் பொய் அடிப்படையில் புனையப்பட்டவையாகவும் இருக்கலாம். நாட்டில் எத்தனை பேருக்கு வேலை யில்லை என்று யாரும் ஊர் ஊராகப் போய்க் கணக்கெடுக்காத நிலையில் இவை எல்லாம் வெறும் மதிப்பீடுகள் தாம். உழவர்கள் மழையின்மையால் அல்லது நீர்வறட்சியால் பயிர்த்தொழிலில் ஈடுபடாத நிலையில் அவர்களும் வேலையில்லாதவர்கள் தாம். எந்த அரசினாலும் இது போலும் எல்லாவற்றையும் தீர்த்துவைக்கும் மந்திரக் கோல் எதுவும் இல்லை. இவன் வேண்டாம் என்று இன்னொரு கட்சிக்காரனை ஏற்றுக்கொண்டாலும் அவனாலும் அது முடியாத நிலைதான்.

புதிய வேலைகளை உருவாக்கினாலும் வேலை தேடுகிறவர்களுக்கும் அந்த வேலைகள் பொருந்தாதவையாக இருக்கலாம். கட்டுமானத் தொழிலில் வேலை கிடைத்து அதனால் பள்ளியை முடித்து வேலை தேடும் ஒருவனுக்கு என்ன பயன்? அவன் தேடுவது வட்டாட்சியர் வேலையாக இருக்கலாம்; கிடைப்பது மண்சுமக்கும் வேலை என்றால் எப்படி? இத்தகைய நிலைமைகள் சரியாவதற்கு வெகுநாட்கள் வேண்டுமே.

இந்தியாவில் வேலை இல்லாதவர்கள் வெளிநாடுகளுக்குப் போய் வேலை செய்வதுபோல வங்காளதேசம், நேப்பாளம், இன்னும் சுற்றுவட்டத்து நாடுகளிலிருந்து இலக்கக் கணக்கில் இந்தியாவுக்குள் வந்துள்ளனர். அவர்கள் எப்படிப் பிழைக்கின்றனர் என்று தெரியவில்லை. இதையும் கணக்கிட்டால் வேலையில்லார் தொகை பன்மடங்காகும். நேருவின் காலத்திலிருந்தே பல இந்தியர்கள் வெளிநாடுகட்குச் சென்று பிழைக்கின்றனர். வேலையின்மையை முழுமையாக எந்தப் பிரதமரும் தீர்த்துவிடவில்லை. எதிர்கட்சிகள் எப்படி இதைத் தீர்க்கப்போகின்றன என்று இதுவரை எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

அன்னிய முதலீடு இந்தியாவிற்குள் வரவேண்டுமானால் நாட்டில் ஒழுங்கும் கட்டுப்பாடும் இருக்கவேண்டும். வேலைநிறுத்தம் போராட்டங்கள் பல உள்ள இந்தியாவுக்கு முதலீடுகள் வருவது கடினம். அத்துடன் காசுமீர் பிரச்சினை வேறு மோடியின் கவனத்தை முழுமையாகப் பற்றிக்கொண்டுள்ளது.. போர் தொடங்கும் நிலையானால் வெளியார் பணம் கொண்டுவந்து போட்டுத் தொழில் தொடங்குவது குதிரைக்கொம்புதான். நாலு வருடமே ஆட்சி செய்துள்ள மோடி இதையெல்லாம் தீர்க்கவில்லை என்று சொல்வது பொருத்தமில்லை. எழுபது ஆண்டுகள் ஆண்டவர்களாலும் இதைத் தீர்க்கமுடியவில்லை.

உடனே குணப்படுத்த இயலாத நோயை நாட்படப் போராடியே கொஞ்சம் குறைக்கலாம்.

இப்போது உள்ள நிலையில் மோடியே சிறந்த தலைவர்.

ஞாயிறு, 17 மார்ச், 2019

சூத்திரம் என்ற நூற்பா,



" வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே"

என்று தொல்காப்பியர்  சூத்திரம் செய்கிறார்.

சூத்திரம் என்பது நூற்பாவைக் குறிப்பது.  சூழ் + திறம் >  சூழ்திறம் > சூத்திரம் என்று சொல்லானது,

சூழ்தல் என்பது வினைச்சொல். இது தன்வினை உரு.  இதனைப் பிறவினையாக்கினால் அது சூழ்த்தல், சூழ்த்துதல் . சூழ்வித்தல் என்று  சில மாதிரிகளில் வரவேண்டும்.  சூழ்வித்தல் என்பது வழக்கில் உள்ளது.  மற்றவை அருகின அல்லது ஒழிந்தன.  சூழ்த்து + அல் = சூழ்த்தல்.  சூழ்த்து + தல் = சூழ்த்துதல்.

திரம் என்ற இறுதிநிலை அல்லது விகுதி திறம் என்ற சொல்லின் அமைப்பு நோக்கி அமைந்தது.  எனவே திறம் > திரம் என்பது சரிதான்.  எனினும் இதை இன்னும் ஆழ்ந்து ஆய்க.

திரு > திரும்பு.
திரு > திரி   ( திரு+ இ )   ( நூல் முதலியவை திரும்பிய அல்லது திருகியவாறு
அமைந்தது திரி ).
திரு > திறம்புதல்.   ( சொல் கேளாமல் வேறுவழியில் செல்லுதல்)
திரு > திராவுதல் (  இது பேச்சுவழக்கு:  அகராதியில் இல்லை ).
திரு > திருடு  :   நேர்வழியில் வராமல் மாற்றமாய் ஒரு பொருளைப்பெறுவது.

இனியும் உள. சேர்த்துக்கொள்க.

எடுத்துக்காட்டு

மா:  அளவு.
மாத்திரம் ஓர் அளவிற்கு மேல் செல்லாமல் திரும்பிவிடுதல்.

இவ்வாறு திரும்புதல் கருத்து உடைய திரம் என்ற சொல், விகுதி ஆனபின் பிற சொற்களில் பொருள் இழந்து வெற்றுப் பின்னொட்டு ஆனது. பல விகுதிகட்குப் பொருள் இருந்திருக்கலாம்.  அவை இப்போது அறிதற்கில்லை.

உத்திரம்:  குறுக்குப் பொருத்துமரம் அல்லது சட்டம். மேல்பளுவைக் கீழ்நோக்கிப் பகிர்ந்துகொள்ளுகிறது.  திரும்புதல் கருத்து.  உ = முன் அல்லது மேல்.  திரம் : முன் பாகியின்படி.  ( பாரகிராப்)

களத்திரம் என்ற சொல்லில் களத்து + இரு + அம் =  களத்திரம்  ஆகவே  வீட்டிலிருப்பவள், மனைவி என்பது பொருள்.  களம் = வீடு குறிக்க இடப்பட்ட சொல்.  சகக்களத்தி என்பதிலும் களம் இப்பொருளதே. இதிலிருப்பது திரம் என்னும் விகுதி அன்று.

எனவே திரம் என்பது பொருளுடையதாகவும் பொருளில்லாமலும் வரும் ஒரு
விகுதியாகும்.

சூழ்தல் எனில்  ஆலோசித்தல்.  சூத்திரம் என்பது  சூழ்த்திறம்,  ஆகவே திறம்படச் சூழ்ந்து இயற்றப்பட்ட ஒரு நூற்பா என்பது பொருளாகும்.

சூழ் என்பது முதனிலைத் தொழிற்பெயர்  எனின்  சூழ்த்திரம் > சூத்திரம் என்று ழகர ஒற்று இழந்து அமையும்.   சூழ்திறம் என்ற வினைத்தொகையினின்று அமைந்ததெனின்   சூழ்திரம் ( சூழ்திறம் )  என்ற தகர ஒற்றில்லாத சொல்லில் ழகர ஒற்று கெட்டபின் தகர ஒற்று இரட்டித்துச் சூத்திரம் என்று அமையும். சூத்திரம் என்பது தமிழ்ச்சொல் என்று முடிக்க.

பிழை புகின் பின் திருத்தம்.