சனி, 28 ஜூலை, 2018

ஆட்டை வன்புணர்வு செய்த அறிவிலிகள்

1.  Eight men have been accused of raping a pregnant goat after which the animal died. The incident took place in Haryana's Mewat district.

https://www.indiatoday.in/india/story/pregnant-goat-dies-after-8-men-gang-raped-it-in-haryana-1299168-2018-07-28

ஆட்டை  வன்புணர்வு செய்த அறிவிலிகள்

அட பாவிகளே,  பாவம் அந்த ஆட்டைக்கூட நீங்கள் விட்டுவைக்காத மிருகங்கள் ஆகிவிட்டீர்களே .

2 A n 80-year-old retired lieutenant in Indian Navy was brutally beaten by a man for feeding stray dogs and other animals in the......... on Tuesday evening in Thiruvizha Apartment of Sector-10, Dwarka.

https://www.indiatoday.in/mail-today/story/ex-soldier-beaten-up-for-feeding-stray-dogs-1296457-2018-07-26?ref=taboola

விலங்குகள் மேல் இரக்கப்பட்டாலும் உதைதான் பரிசா ,


மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான்  இது உண்மை.
குரங்கு மனிதர்களுக்காக நாம் கவலைதான் கொள்ளலாம்.

3     The British Royal family is not allowed to eat these foods!

https://recipes.timesofindia.com/articles/features/the-british-royal-family-is-not-allowed-to-eat-these-foods/garlic/photostory/65120885.cms 

வெங்காயம் பூண்டு முதலியவை வாய் நாற்றம் உண்டாக்கும் பொருள்கள். ஒரு விழாவிற்குப் போய் வாய் திறக்கும்  3 நாட்களுக்கு முன்பே இவற்றை உண்ணாமல் நிறுத்திவிடுங்கள்.



இந்தச் செலவை மிச்சப்படுத்த வெளியூர்களுக்குப் போய்ப் பேசாமல் இருந்தால் சீனாவும் பாகிஸ்தானும் உதைக்கும்போது உதையை வாங்கிக்கொண்டுதான் இருக்கவேண்டும்.\
போய் அவர்களிடமும் பேச வேண்டும்;  வெளி நாடுகளுக்கும் ஓட வேண்டும்.

வீட்டுக்குள் இருந்துகொண்டு மயிலே மயிலே என்றால் காட்டு மயில் இறகு  போடாது,  காட்டுக்குப் போய்த் தான் மயிலைப் பார்க்கவேண்டும்.

5 முன்னைய அரசின் ஊழல் அதிகாரிகளுடன் தான் நான் அரசை நடத்தவேண்டி உள்ளது 
----  டாக்டர் மகாதீர்  மலேசியப் பிரதமர் .Youtube

வேறு வழியில்லையே/ உத்தரவுகளுக்கு எளிதில் கீழ்ப் படிந்துவிட்ட மாட்டார்கள்.  ஐயா சாமி என்று கெஞ்சியாவது காரியம் சாதிக்க வேண்டும்.  அறவே முடியாத நிலையில் அதிகாரம் சற்று பயன்படலாம்.  சிறந்த  பற்று நிலையை உருவாக்கிக்கொள்ள வேண்டியுள்ளது.

ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டிருக்கிறார். அவர்களும் சரி சொல்லி இருக்கிறார்கள்.


 

சில பெயர்ச்சொற்களின் அமைப்பு ஓர் எடுத்துக்காட்டு

ஓரிரண்டு சொற்களை மட்டும் விளக்கி முதனிலைத் திரிபினை ஒருவாறு விளக்கலாமெனினும்  கேட்போருக்கு இத்தகு சொல்லமைப்புகள் முழுமையாய்ப் புரிந்துவிட்டது என்று முடிவுகட்டிவிட முடியாது.  ஆகவே இனிப்  பல உதாரணங்களைக் கையாண்டு எப்படி வினைகளிலிருந்து பெயர்கள் அமைகின்றன என்பதை ஆர்வமுடையார் யார்க்கும் இதன்பின் அறிவிப்போம்.

மிக்க எளிமையான தொழிற்பெயர் ஆக்கமென்றால் அது ஒரு வினைப்பகுதியும்  ஒரு விகுதியும் தோன்றும் அமைப்புத்தான்.  எடுத்துக்காட்டு:

தேடு > தேடுதல்.

இந்த அமைப்பில் தல் என்ற பெயர்ச்சொல்லாக்க விகுதி புணர்ந்துள்ளது.  திரிபுகள் எவையும் இல்லை.  தேடு என்ற வினைப்பகுதி அப்படியே மாற்றம் ஏதுமின்றி  உள்ளது. பெயர்ச்சொல் அமைப்புக்கு இப்படி  ஓர் எடுத்துக்காட்டினையே கொடுத்துவிட்டு இப்படித்தான் அமையும், இதுதான் தொழிற்பெயர் என்று வாத்தியார் போய்விட்டால், மாணவனுக்கோ மற்றவருக்கோ அதுமட்டுமே தெரியும்.  பலர் சொந்தமாக எதையும் விரித்தறிந்து கொள்வதில்லை.  பேரன்பேத்தி எடுக்கும்வரை அந்த ஓர் உதாரணமே தெரிந்துவைத்திருப்பான்.  வேறு உதாரணங்களைச் சொன்னாலும் அவனுக்கு ஐயப்பாடு தோன்றிவிடும்.  எதற்கும் மசியாமல் இருக்க எண்ணம் கொண்டு,  தல் சேர்ப்பது மட்டுமே தொழிற்பெயராக்கம் என்று முடித்துவிடுவான்.

தேடு> தேடல் ( இங்கு  ~அல்  விகுதி சேர்ந்தது).

இங்கு மாற்றம் ஒன்று ஏற்பட்டது.   தேடு என்ற சொல்லில் உள்ள உகரம் வீழ்ந்தது அல்லது இலக்கண நூல் கூறும் மொழியில் சொல்வதானால்  உகரம் கெட்டது.   தேட்+அல் என்று ஆகி  ட்+அ இரண்டும் இணைந்து "டல்" என்று முடிந்தது.   சொல்  தேடல் என்று அமைந்தது.  தே என்ற முதலெழுத்து மட்டுமே மாற வில்லை என்பதறிக.

இனித் தேடு என்பதனுடன் அம் விகுதி இணைய,

தேடு+அம் =  தேட்டம் என்றாகும்.   இங்கு டகர இரட்டிப்பு நிகழ்ந்தது,  தேடு+ அம் =  தே + ட் + ட்+ அம் என்று  உகரம் கெட்டு, இரண்டு டகர ஒற்றுக்கள் வந்து, இரண்டாவது டகர ஒற்று வரு விகுதி  முதலெழுத்து  அ-வுடன் ஒன்றி,  தே ட் ட ம் என்று திரிந்து " தேட்டம்" ஆயிற்று.

இது அம் விகுதியே இல்லாமல்,  தேடு > தேட்டு என்று நின்றுவிடும். அப்போதும் அது தொழிற்பெயரே.

தேடு > தேட்டு.

ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் என்பது ஒளவையின் பொன்மொழி.

ஒரு வினைப்பகுதி அவ்வாறே நின்று பெயராதலும் உண்டு. வந்துழிக் காண்க. இங்கு ஓர் உதாரணம் மட்டும் சொல்லப்படும்.  கண்டுகொள்க.
" அந்தத் திருடனை ஒரு தேடு தேடிவிட்டுத்தான் வந்தேன்"  என்பதில் தேடு என்பது "ஒரு" என்ற எண்ணிக்கை அடைவும் ஏற்றுப் பெயராய நின்றது காணலாம்.

நாம் அடுத்துக் காண்பது:வினையிலிருந்து பெயர்ச்சொல்: தலை  விரிதலும் சுருங்குதலும்.

மீண்டும் சந்திப்போம்.

பிழைகள் தோன்றின் அடுத்துத் திருத்தம் பெறும்.

வெள்ளி, 27 ஜூலை, 2018

மறைந்துவிட்ட சொல் வடிவங்கள் - நம்புதல் சொல் வடிவம்.

இறையுண்மை ஒப்பி ஒழுகுவோர் கெடுவதில்லை என்பது மறைகளின் தீர்ப்பு என்பர். உண்மைதான். அதற்குப் பலன் இருப்பதால்.

ஒருவர் இறைவன் உள்ளான் என்னும்போது நம்புவதென்பது நாமும் அக்கருத்தினுக்கு உடன்படுவதாகும்.  உடன்படவே,  அவர் கருத்து நம் கருத்தாகி விடுகிறது.  நம்பவில்லை என்றால் அவர் கருத்து அவருடன்; நம் கருத்து நம்முடன் இருந்துவிடும்.

அவர் கருத்து நம் கருத்தாகவே அது  நம்புவதாகிறது.  அதாவது நம் கருத்தாகிறது. நாம் என்பது பன்மை.  இது தன்மைப் பன்மையாகும்.

அவர் கருத்து - நம் கருத்து.  இதில் நம் என்ற சொல் எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

நம் >  நம்பு > நம்புதல்.

நம்புதலாவது நம் கருத்தாதல்.

நம் என்பது பன்மை வேற்றுமை வடிவாயினும் அது பு என்னும் வினையாக்க விகுதிபெற்று  நம்பு என்றானபின் அது பன்மையாய் நீடிக்கவில்லை. வெறுமனே ஒரு வினைச்சொல்லாக்கம் பெறுகின்றதென்பதை அறிக.

நாம் என்னும் எழுவாய் வடிவம் நம் என்று வேற்றுமை வடிவம் கொள்ளுதல்போல்  நான் என்னும் சொல் இன்றைய மொழிநிலையில் என் என்று வேற்றுமை வடிவு கொள்கின்றது.

நான் என் தொலைந்த பணப்பையைக் கண்டுபிடித்துவிட்டேன்.

நான் -  என்.   இது  நாம் - நம் என்பதிலிருந்து வடிவவேறுபாடு உடையதாய் இருப்பதை அறியவும்.

நாம் > நம் என்பதுபோல் நான் > நன் என்றன்றோ வருதல் வேண்டும்?  அப்படி வரவில்லையாதலின் முறைமாறியுள்ளது.

என் என்று வருவதாயின் அதன் எழுவாய் வடிவம் ஏன் என்றிருத்தல் வேண்டும்.  ஆனால் இந்த ஏன் என்பது இன்னும் வாழ்வுடையதாய் உள்ளது.
வந்தேன் என்பதில் ஏன் பின்னொட்டாய் உள்ளது காண்க.

எனவே: 

நான் > நன்;   ஏன் > என்.  நிரல்பொருத்தம் உள்ள வடிவங்கள்.

நன் என்ற வேற்றுமை வடிவமும் ஏன் என்ற வினாவல்லாத எழுவாய் வடிவமும் மொழிவரலாற்றின் வெள்ள ஓட்டத்தில் ஒழிந்துபோயின,

நான் ஒரு வண்டி வைத்துள்ளேன்;
அது நன் வண்டி என்பதே  பழங்காலத் தமிழ் என்பதை ஆய்வின்மூலம் மீட்டுருவாக்கம் செய்யலாம் என்பதை அறிக.

நான்  - நன் ;  ஏன் - என் என்பன முறையே எழுவாய் மற்றும் வேற்றுமை வடிவங்கள்.

நம்+பு > நம்பு என்பதில் பு இணைத்து வினைப்படுத்தியதுபோலவே   நன்+பு = நன்பு என்று வினைப்படுத்தி.  அது பின் நம்பு என்று திரிந்தது  எனினும் அதுவும் ஏற்புடைத்தே என்று கருதுக.

இவை மறைந்துபோன சொற்களாதலின் மீட்டுருவாக்கலாமே அன்றி நூல்களில் காணவியலா எனல்  அறிந்துகொள்வோம். இவற்றிற் சில ஆய்வு முடிவுகள் ஏனைத் தமிழறிஞர் ஆய்வுகளுடன் இயைபு உடையவாகும்,