புதன், 20 ஜூன், 2018

கடல் தீங்கும் மாலுமியும்.


உமி என்பது யாது:

மாலுமி என்ற சொல்லை அறிவதற்குமுன் உமி என்றால் என்ன என்பதை  யறிந்துகொள்வோம்.

குத்துமி என்ற சொல்லில் உமி என்பது செங்கல் வேலை குறிக்கும்,
அதுவே  சலிக்கப்பெறாத உமியையும் குறிக்கும்.

குற்றுமி என்று வந்துஒரு வரியையும் ஒரு நெல்லின் நீங்கிய உமியையும் மற்றும் குற்றுயிரையும் குறிக்கும்.

குற்றுயிர் என்றால் இனிக் குறுகிய காலமே இருக்குமென்று அறியப்பட்ட உயிர்.
"குற்றுயிரும் கொலையுயிரும் என்பது வழக்கு.

கூருமி என்பது சிறுநீரினினின்று வெளிப்படும் உப்பு.

உமிதல் -  துமிதல். (ஆக்கத்தொடர்புடைய சொற்கள்.) 
உமிதல் =  உமிழ்தல் என்பதுமாம்.  உமிழ்நீர் என்பது உமிநீர் என்றும் குறிக்கப்பெறுவதுண்டு.  உமிழ் என்பதை உமி என்பது பேச்சு வழக்கு.

மெல்லிய நகம் உமிநகம் எனப்படும்.

உமி நீக்கிய அரிசிக்குத் தொலியல் என்றும் பெயர்.

உமியல் என்பது வசம்பு.

உமாவின் கணவன் சிவனாதலின் அவற்கு உமி என்றும் பெயர்.  உமாவை உடையோன்.   உமா+ இ =  உமிஆ என்ற எழுத்து மறைந்ததுஉம்+ஆ என்பதில் இறுதியில் நிற்பது ஆஅதாவது: உமாஉம்+ஆ > உமா+இ > உமி.   இது சொல்லமைப்புப் புணர்ச்சிஇதில் முழுச்சொற்கள் புணர்ச்சி இல்லை.

உமாவிலிருந்து வெளிப்படுவோன் சிவன்; உமாவே ஆதிப்பரம்  ஆகும். (ஆதிபராசக்தி)

இவற்றை மனத்தில் இருத்திக்கொள்க.  உமி என்பது பெரிதும் வெளிப்பாடு குறிக்கும்  சொல்.  கலஞ்செல்வோனும் நிலத்தினின்று வெளிப்படுவோனே ஆவான்,

மையக்கருத்து:   வெளிப்பாடு அல்லது வெளிப்படுதல்.

உமி என்பது ஒரு சுட்டடிச் சொல்.  உ = முன்னிருப்பதுஇ-  இங்கிருப்பதுஆக உமி என்பதன் பொருள் இங்கிருந்து அங்கு வெளிப்படுவது  என்பதுதான்.  இங்கு என்பது நெல்லைக் குறித்தது.    உ என்பது  முன் வெளிப்படுவதாகிய தோல்.

இடச்சுட்டுக்களைக் கொண்டே பல்லாயிரம் சொற்களை அமைத்துத் திகழ்வது
தமிழ்மொழி.

இது முன்பின்னாக அமைந்து தோலைக் குறித்துள்ளது.  இதையறிந்த பிற்காலத்தில்  பிதா என்ற சொல்லையும் இதே முறையில் தோற்றுவித்தனர்.

பி = பின்தாய் = தாய்க்கு.  ஆக பிதா.
ஒப்பு:  உ= முன் வெளியாகுவது; இ= இங்குள்ள நெல்லினின்று.  ம் என்பது இரு சொற்களுக்கும் இணைக்கும் ஒலியாக வந்தது.   உ+ம்+இ.

மகர ஒற்று ஓர் இணைப்பொலியாக வருவதை கருமி என்ற சொல்லில் கண்டுகொள்ளுங்கள்.  கரு+ம்+இ = கருமி.  வெறுக்கத்தக்கதாகிய கஞ்சத்தன்மை. கருநிறம் என்ற வெறுத்தகு எண்ண நிலையில் எழுந்த சொல்.

நெல்லிலிருந்து வெளிப்பட்ட உமி, பயனற்றுப் போகிறது.  எரித்துக் கரியாக்கலாம்.  பல் துலக்கினால் பல் வெள்ளையாகும் என்பர்.

உமி என்பது பயனற்றதாகையினால் உமிதல் என்ற வினைச்சொல் அழிதல் கருத்தை எட்டிப்பிடித்தல் கண்டுணர்க.

உமிதல் (தன்வினை)  -  உமித்தல் (பிறவினை).

கடலுக்குப் போவதைப் பண்டை நாட்களில் சிலர் வெறுத்தனர்.

கடலிலிருந்து ஆலகால விடம் வருமென்றனர்.  ஆனால் கடலுக்குப் போனாலும்  நீண்டநேரம் இருக்கலாகாது என்று நினைத்தனர்.  கடைதல் என்பது நெடிதுநிற்றல் பற்றிய அச்சம் குறிக்கிறது.

கடலுக்குச் செல்வோரை மால் அழித்துவிடுவார்!.

இதிலிருந்து மாலுமி என்ற சொல் உருவெடுத்தது,

மால் -  இருள்கடல். கடலோனாகிய விண்ணவன், (விஷ்ணு).
உமி = அழிதல்.

மாலென்பது:  காற்று, முகில், எல்லை, செல்வம், குழப்பம் என்றும் இன்னும் பலபொருளுமுடைய சொல்.

இவற்றுள் ஒன்றோ பிறவோ பொருந்தும் காரணத்தால் அழிவை எட்டுவோன் மாலுமி எனினுமாம்.

எல்லை கடந்து காற்றிலும் மழையிலும் துன்புற்று மனங்குழம்பி  செல்வமிழந்து அழிவோன் எனினும்  அமையும்.


எனவே கடலில்செல்லும் கலஞ்செலிமாலுமியாகினான்.

சிற்பன் எழுத்    தோவியத்தில்  செவ்வரசு  நாவாயின்
அற்புதம் சூழ்  மாலுமிஎன் றாடு.

--  திரு வி.க

பிற்காலக் கருத்தில் மாலுமி உயர்ந்தவனே.





செவ்வாய், 19 ஜூன், 2018

நம் செந்தமிழ் வேலன் ஒரு வஜ்ஜிரவேலன்.

நம் வேலன் போர்முடித்து வாகை சூடியவன். அந்நிலையில் அவன் மிகுந்த வலிமையை வெளிப்படுத்தியவன். முள் என்றாலும் வேல் என்றாலும் உடற்பகுதியில் பதிந்த நிலையில் தம் வீரமிக்க அடியார்களை ஏற்று மகிழ்பவன்.  வீரத்தை விளையாட்டாகக் கொண்ட வேலன் வேறு எதைத்தான் விரும்புவான்?

குமரன் ஏந்திய வேல் வலிமையில் சிறந்த வேல்.  குமரனின் வலிமை அவன் ஏந்தி நிற்கும் வேலில் ஏற்றிக் கூறப்படும். அவன்முன் சூரபத்துமனும் இரு கூறுபட்டு ஒழிந்தான்,  முருகப்பிரானின் வேல்வலிமையால்.

அவன் வேலை வஜ்ஜிரவேலென்`கின்றோம்.

வஜ்ஜிரவேல் எப்படி அமைந்த சொல்?

வல் =  வலிமை.

சிற =  சிறந்த.

வல்சிற  வேல் >  வற்சிறவேல் >  வஜ்ஜிர வேல்.

ஒரு தமிழ்ப்புலவர் வஜ்ஜிரவேலென்பதை  வச்சிரவேலென்றெழுதினார்.

வடவெழுத்து எனப்படும் வட ஒலிக்குரிய எழுத்துக்களை நீக்கியது தொல்காப்பியம் வகுத்த வழிதான்.

ஆனால் அதை வல் சிற வேல் என்றறிவது நுண்மாண் நுழைபுலமன்றோ?

ஞாயிறு, 17 ஜூன், 2018

பயிற்சியமா அல்லது பரிச்சயமா?


பயிற்சி என்பதனோடு அம் என்ற விகுதியைச் சேர்த்தால் அது பயிற்சியம் என்றாகிவிடுமென்பது உங்களுக்கு எந்தப்  பேராசிரியனும் சொல்லிக்கொடுக்காமலே நன்றாகத் தெரியும்.  அம் விகுதிபெற்ற சொல் அப்படி உருக்கொள்ளுமென்பது சொல்லித் தெரிவதில்லை.  உங்கள் செவிகளே உங்கள் எசமானன் ஆகிவிடும். பேராசிரியனோ என்றால் அவன் அரிதின் முயன்று அறிந்தவற்றை எல்லாம்  அள்ளித்  தந்துவிடமாட்டான்.  வியக்கச் சிறிது சொல்வான்.

ஒரு குரு எல்லாவற்றையும் சீடனுக்கு அள்ளித்தருவதில்லை.

எசமான் என்பதையும் சீடன் என்பதையும் யாம் விளக்கியதுண்டு.  இப்போது அவை ஈண்டில்லை என்பதால் விரைவில் அவற்றையும் இடுகை செய்வோம்.

இனிச் சொல்லாய்வுக்கு வருவோம்.

சொல்லமைப்புகளில் எழுத்து நிரல்மாற்று அமைப்பும் ஒன்று உண்டு.  இதை எழுத்து முறைமாற்று என்றும் கூறுவதுண்டு.  இது எப்படி வருமென்றால் காட்டுதும்.  ு.

விசிறி  >  சிவிறி என்று வரும்.

இச்சொல்லில் விசி என்பது சிவி என்று வந்தது.

சில குழுவினர் நாத்தடுமாற்றத்தில் இப்படிப் பேசி நாளடைவில் நிரல்மாற்றுச் சொற்களும் மொழியி லிடம்பெற்றன என்பதே சரியானதாகும்.

மதுரை என்ற சொல்லும் இப்படி அமைந்ததே என்பதை இப்போது பலர் உணர்ந்துள்ளனர்.

பல மருத நிலத்தூர்கள் சூழ அமைந்த பெருநகரமே மதுரை.

அது மருதை ( மருத நிலம் சூழ் நகர்) என்று அமைந்து பின் மதுரை என்று திரிந்தது என்பதே சரி.  ~ ருதை என்பது ~துரை என்று எழுத்து முறைமாறி அமைந்தது.

விகடகவி என்ற சொல் மட்டும் இருபக்கமும் இருந்து படிக்க நன்றாகவே வரும். இதுபோலும் வேறு சொற்களைக் கண்டுபிடித்துப் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள்.

இனிப் பயிற்சி என்பதோ பயில் என்பதினின்று சி விகுதி பெற்று அமைந்தது.

பயில்+சி =  பயிற்சி.
அம் சேர்க்க:  பயிற்சியம்.
நிரல் மாற்றில்:

பயிற்சி  >  பறிய்ச்சி  ஆகும்.   ற்  என்பது றி ஆனது.  யி என்பது ஒற்று  (ய்)  ஆனது.
சற்று வெளிப்படையாய் அமையாத நிரல்மாற்று.

பறிய்ச்சி என்பதில்  ய் - ச்  என்ற இரண்டு ஒற்றுக்களும் தேவைக்கு அதிகம்.  அவற்றை வெட்டுக.

இப்போது பறிய்ச்சி என்பது பறிச்சி ஆகிறது.

இப்போது பறிச்சி என்பது எதையோ பறிகொடுத்ததுபோல் அமைந்து தொல்லை தருவதால்பறி என்பதை பரி ஆக்கிக்கொள்க.

பரிச்சி என்பதனோடு அம் சேர்க்கப் பரிச்சயம் ஆகிறது.  சி என்பதை ச என்று மாற்றின் இனிதாகும்.  (  இனிதாக்கம் )

இதன் அடிச்சுவடுகளை மறைக்க:

பரி என்பதை முன்னொட்டாக ஆக்கி, சயம் என்பதை நிலைச்சொல் ஆக்கிடுக.

சொற்களை அமைப்பது என்றால் எவனும் உணராவண்ணம் பயன்படுத்தமட்டும் செய்தளிக்கவேண்டும்.

ஒரு சொல்லைப் பயன்படுத்தும் சின்னவனுக்கு அது எப்படி அமைந்தது என்று ஏன் தெரியவேண்டும்!வேண்டாமே.

ஆனால் இவ்வளவு மறைமாற்றுக்கும்  பொருள் மாறவில்லை.  ஒருவன் எதில் பயிற்சி பெறுகிறானோ அதில் அவனுக்குப் பயிற்சியம் > பரிச்சயம் ஏற்படும்.