வெள்ளி, 29 செப்டம்பர், 2017

மும்பை தொடர்வண்டி நிலைய மரணங்கள்,




கூட்டத்தி னுள்ளேபோய் மாட்டிக்கொண்டால்
குழித்தள்ளப் பட்டாலும் தெரியா தையா!
ஓட்டமொன்றை உள்ளவர்கள் எடுக்கும் போதோ
உன்னைநின்று பார்ப்பதற்கு நேர மேது?
வாட்டமுற வேண்டாமே வாரா நன்மை
வந்திடுமோ உனைத்தேடி கூட்டத் துள்ளே!?
ஆட்டநகர் மும்பாயில் ஆவி நீங்கி
ஐயோமரித் தாரிருபத் தின்மே லோரே.

கல்விழுந்த பாலமதில் காலே நோக
கடுகியந்தக் கூட்டமக்கள் ஓடுங் காலை
உள்விழுந்தார்  தப்பிடவோர் உய்வு கிட்டார்
உயிர்விட்ட பரிதாபம் உருக்கும் நெஞ்சை.
பல்விழுந்தே உயிரிருந்து தப்பி னோரைப்
பக்கல்மருத் துவமனைக்குத் தூக்கிச் சென்றார்
நெல்விழுந்து தரைகாணா நீக்க மற்ற
நீள்கும்பல் என்னிலதை நீங்கிச் செல்லே. 
-----------------------------------------

 பொருள் விளக்கம்:




குழித்தள்ள -  குழிக்குள் தள்ள.
ஆட்டநகர் -  களியாட்ட (மிக்க) நகர்; பல 
மகிழ் நிகழ்வுகளும் கிட்டும் நகர்.
கல்விழுந்த:   மேலிருந்து கல் பெயர்ந்து விழுந்ததனால்
பாலம் இடிந்துவிடும்  என்று அஞ்சி ஓடினார்கள் என்பது 
செய்தி.
மரித்தார் – இறந்தனர்.  மரி > மரணம் அடைதல்.
கடுகி – வேகமாக.
உள்விழுந்து – ஓடும் கூட்ட நெரிகலிலே விழுந்து.
பல்விழுந்தே உயிரிருந்து -  பிழைத்துக்கொண்டவர்கள்
அல்லது காயமடைந்தவர்களைக் குறிக்கிறது.  ஒரு 
வகைப் பிழைத்தோரைக் காட்டி அவர்கள் போலும் பிறவகைக் காயமடைந்தோரையும் உளப்படுத்துவது.
நெல்விழுந்து …….நீள்கும்பல்:  மிக்க இறுக்கமான நெரிசல் குறிக்கும்.
என்னில் அதை -  என்றால் அந்த

 


-------------------------------------------------------------

edited. will review.
Editing will take time as there are also data charges and software blockades by virus and third parties. 
error message:   Posting as B.I Sivamala
An error occurred while trying to save or publish your post. Please try again. Dismiss

காக்கையைத் தேடி



காக்கையைத் தேடி…….
(புதுக்கவிதை)

காக்கையே காக்கையே
காலை மணி ஐந்தேதான்;
காலையிலே என்ன இரைச்சல்
உனக்கே உற்றதென்ன கரைச்சல்?

பார்க்கிறேன் எங்குள்ளாயோ
படு இருட்டில் தெரியவில்லை!
சேர்க்கலாம் உன்வசமாய்
சீராக உண்ணக் கொஞ்சம்
ஏக்கமின்றி உண்கவென்றால்
இருக்குமிடம் மறைவிடமோ!
ஆக்கமின்றிக் கரைந்திடாமல்
அருகினில்வா இதையுண்பாய்……..

புதன், 27 செப்டம்பர், 2017

ஏளனம் என்ற சொல்லின் அமைப்பு.



இன்று ஏளனம் என்ற சொல்லின் அமைப்பைத் தெரிந்து இன்புறுவோம்,
இதற்குரிய வினைச்சொல் எள்ளுதல் என்பதாகும்.

சில தொழிற்பெயர்கள் முதனிலை நீண்டு அமைபவை. அதாவது வினைச்சொல் சுடு என்றிருந்தால் சூடு என்று நீண்டு பெயர்ச்சொல் ஆகும், அப்புறம் ஒரு விகுதி பெற்றுத் தொடர்புடைய பொருளையோ அதே பொருளையோ குறிக்கும்.   தொடர்புடைய பொருளைக் குறிப்பதற்கு எடுத்துக்காட்டு:  சூடு > சூடம் அல்லது அல்லது சூடன் என்பது. சூடன் என்பது நாம் பூசையின்போது கொளுத்தும் சூடன்,  சூடுதல் என்ற வினைச்சொல் வேறு.   சுடு என்பதிலிருந்து அமைந்த சூடு (வெம்மை) என்பது வேறு.

இதுபோலவே எள்ளுதல் என்ற வினைச்சொல்லும்.

எள் என்பது வினைப்பகுதி அல்லது ஏவல்வினை.

எள் என்பது எள்ளு என்று உகரச் சாரியை பெற்றும் வழங்கும்.  எள்> எள்ளுதல்.  கொள் > கொள்ளுதல் எனல்போல.

எள்> ஏள்+அன்+அம் = ஏளனம் என்றானது.

அன் : விகுதி அல்லது சொல்லிடைநிலை.

அம் :  விகுதி.

விகுதி என்பது மிகுதி என்பதன் திரிபு. சொல் இறுதி மிகுந்து நிற்றல்.  ம- வ திரிபு.

அன் அம் என்பவை மிகுதிகள்.  மிகுதி என்பதே விகுதி என்று திரிந்தது.

திரிபுக்கு முந்திய வடிவம் காணாமற் போய்விடுவதும் உண்டு.  அது வழக்கற்றுப் போவதும் அது பயன் கண்ட நூல்கள் அழிந்துவிட்டமையும் காரணங்கள். எடுத்துக்காட்டு:  

மனிதன்

   இதன் பெண்பால் வடிவம் மனிதை. இது  வனிதை என்று திரிந்தபின் 
(    ம  - வ திரிபு )அதையே மக்கள் விரும்பிப் பயன்படுத்த, மனிதை என்ற வடிவம் ஒழிந்தது. மனுசி (மனுஷி) என்ற வடிவமும் உள்ளது.. இதைப் பின் வேறோர் இடுகையில்  காண்போம்.

எள் என்பது ஒரு சிறிய தானியவகை.  எள் என்பதன் கருத்து சிறுமை என்பது.  எள்ளுதல் -   சிறுமைப்படுத்தல்.

"உருவுகண்டு எள்ளாமை வேண்டும்" என்பது நாயனார் வாக்கு.  எள்ளுதல் என்பதன் எதிர் எள்ளாமை. 

Some errors keep recurring. Will review.