வெள்ளி, 14 ஜூலை, 2017

உருபுகளாக்கிப் பாதுகாத்து.......


மனிதன் நகரவாழ்நன் ஆதலின்முன்னர் அவர் சிற்றூர்களில் வாழ்ந்தான்; ஊர்களில் ஒன்றாக வாழுமுன்னர் அவன் வனவாழ்வில்
தினந்துன்புற்றான். வனத்தில் வாழ்ந்தாலும் கருத்தறிவிப்புக் கலையாகிய மொழியை பயன்படுத்திக்கொள்ளும் திறமுடையனாய் இருந்தான். இப்படி வனவாணராய் இருந்த காலத்திலே தான் பெரும்புலமை வான்மிகி முதலானோர் இராமகாவியம் இயற்றினர். அப்படியானால்
வனத்தில் வாழ்ந்தாலும் மொழிப் பயன்பாட்டில் சிறந்துவிளங்கினர்.

ஆனால் அதற்கும் வெகுகாலத்துக்கு முன்பு மனிதன் குகைமாந்தனாய்
இருந்தான்; அதற்குமுன் ஒரு நிலைத்த இடமின்றி அலைந்தான்.

மனிதன் குகைமாந்தனாய் இருக்கையில் அல்லது அதற்குமுன்பே தமிழ்இருந்தது. தமிழ் என்ற பெயரில்லாவிட்டாலும் மொழி இருந்தது.

அக்காலங்களில் இருந்த சில சொற்கள் இன்னும் நம்மிடை உள்ளன.
அ என்ற சுட்டுச்சொல் ஓரெழுத்துடையது. அது அப்போதிருந்தது.
அ என்பது அங்கு. கு என்பதோ இன்னொரு சொல். அது சேரிடத்தைக் குறிப்பது. அதுவும் ஓரெழுத்து ஒருசொல். ஆகவே
" அங்கே போய்விட்டான்" என்று சொல்பவன், "அ கு" என்றுமட்டும் சொன்னான். மொழியே அவ்வளவிலே இருந்தது.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍வீடு கட்டிக்கொள்ள அறிந்த காலத்தில், வீட்டை "அ கு அம்" என்றான். " அங்கு போய் இருக்கலாம்" அல்லது அது இருக்குமிடம்
என்பது தோன்ற : "அ கு அம்" என்றான். இன்று அதை விரித்துச்
சொல்வதானால் " அவண் சென்று அமைக!" என்று சொல்லவேண்டும். நம் தொல்பழங்காலத்து மொழி மறைந்து விட்டதோ எனின், மறைந்தவை போக மிச்சமுள்ளவற்றை இன்னும்
அடையாளம் கண்டுகொள்ளும்படி உள்ளது என்றே சொல்லவேண்டும்.
அதற்காக நாம் ஆனந்த நடனம் ஆடவேண்டுமே!

கு என்பது திரிந்து "கி" என்று வழங்குகிறது, இராமனுக்கு என்பது
"ராமனிகீ" என்று திரிகிறது. கு போன்ற சொற்கள் அழியா வரம்
பெற்றவை ஆகும். தமிழில் உருபாக நிலைத்துள்ளது.

தேய்ந்துவிட்ட சொற்களை வீசிவிடாமல் உருபுகளாக்கிப் பாதுகாத்துள்ளனர் உருபுகள் வந்தவழி இதுவே.

அகம் மிகப் பழங்காலச் சொல். ஒப்பு நோக்க வீடு என்பது அதன்பின்
உருவானது ஆகும். வினைகளிலிருந்து தொழிற்பெயர்கள் திரிந்து
தோன்றியது ஒரு வளர்ச்சி. அது அகம் தோன்றிய காலத்தின்பின்

தோன்றியிருத்தல் வேண்டும்.  

அகமும் வீடும்

/வீடும் அகமும் ஒருபொருட் சொற்கள். எனினும 
அகம் என்பது மனத்தையும் குறிக்கிறது. இன்னும்
 பலபொருள்களும் உள்ளனஅவற்றுள் "உள்"
  என்பதும் ஒன்று. மனம் என்பது எங்கிருக்கிறது
என்று அறிய இயலவில்லை; ஆனால் உடம்பின் 
உள்ளிருப்பதாகஏறத்தாழ நம் இருதயம் இருக்குமிடத்தில்
 இருப்பதாக நம்பப்படுகிறதுநுரையீரலுடன் கல்லீரல்
 முதலியவையும் அங்கு உள்ளன. நினைப்பு.
இரக்கம் என்று இன்னுமுள்ள உணர்வுகளுக்கும் 
சேர்த்து, மூளையே காரணம் என்கிறது அறிவியல்.

சில சொற்கள் அறிவியலுக்கு ஒத்துவருகின்றன;
சில அங்ஙனம் ஒத்துவருவதில்லை.


இப்போது வீடு என்பதைக் காண்போம், இது 
விடு என்ற வினனச்சொல்லிலிருந்து வருகிறது.
  விடு> வீடு. முதனீலை நீண்டு விகுதி ஏதும் 
பெறாமல் அமைந்த சொல். எங்கே வெளியில்
சென்றாலும் நாம் வீட்டுக்கு வந்துவிடுகிறோம்
எல்லாவற்றையும்  முடித்தாலும் முடிக்காவிட்டாலும்
விட்டு வந்துவிடுகிறோம். அதனால் அது வீடு 
ஆகிறது. வீடு என்பதற்கு மேலுலகு அல்லது 
சொர்க்கம் என்று ஒரு பொருளும் உண்டு
அதுவும் விட்டுச் செல்லுதலையே குறிக்கிறது
வீடுபேறு ‍ = துறக்கம்இனி அகம் என்ற 
சொல்லை ஆய்வோம்.

= அவ்விடம்; அங்கு. இது சுட்டடிச் சொல்.
கு = சேர்விடம்; போய்ச்சேர்தல்.

மதுரைக்குப் போனான் என்ற வாக்கியத்தில்
"கு" எதைக் குறிக்கிறது?
போய்ச்சேர்ந்த இடம் குறிக்கிறது.

எங்கு வெளியில்) திரிந்தாலும் போய்ச் சேருமிடமே
வீடு ஆகும்அதுவே (+கு) என்பதுமாகும். அதாவது 
அங்கிருந்து போய்ச்சேரவேண்டிய இடம். +கு 
என்பதில் அம் சேர்த்து, அகம் ஆகிறது. இங்கு 
அம் என்பது ஒரு சொல்லிறுதி அல்லது விகுதி ஆகும்.

விடு> வீடு என்ற முதனிலை திரிந்த ( நீண்ட
தொழிற்பெயரும் அகம் (+கு+அம்) என்ற
சுட்டடிச் சொல்லும்  ஒரு கருத்தையே
வெளிப்படுத்துகின்றன.

மனிதன் உள்ளிருப்பதே வீடு ஆதலின் உள் என்ற 
கருத்து, அகத்தைத் தழுவி நிற்கின்றது. இது பொருத்தமே
மனம் உள்ளிருப்பது என்ற கருத்தில் அகம் மனத்தைக் 
குறித்ததும் பொருத்தமே. மனத்தில் நிகழும் ஒழுக்கம் 
என்ற கருத்தில் அகம் ‍> (அகவொழுக்கம்) குறித்து நின்றதும்
 அதிலிருந்து பெறப்பட்ட பொருத்தமான கருத்தே.

இவ்வொப்பாய்வின் மூலம் வீடு என்பதும் அகம்
என்பதும் ஒத்த கருத்தமைதியில் எழுந்த மிக்கப் 
பொருத்தமுடைய தமிழ்ச்சொற்கள்
என்பது பெற்று அகமகிழலாம்.

will edit later.  edit not available.



புதன், 12 ஜூலை, 2017

யாத்திரை

இப்போது   யாத்திரை என்ற பதம் காண்போம்.

இந்தச்  சொல்  யாத்தல் என்ற தொழிற்பெயருடன் தொடர்பு உடையது.

யாத்தல்  : பொருள்:  கட்டுதல் என்பது.

யா + திரை =  யாத்திரை.

திரை என்பதொரு விகுதி.       இன்னொரு எடுத்துக்காட்டு:   "மாத்திரை".மா= அளவு.  மாத்திரை:  அளவு, ஒலி அளவு.

ஒரு  பயணம் மேற்கொள்கையில் எந்த இடத்தில்   போய்ச்சேர்வது,  எதை எதைக் காண்பது, என்ன என்ன செயல்களில் ஈடுபடுவது,
என்ன ஊர்திகளைக் கொண்டு செல்வது, என்பனவும் பிறவும்  ஒரு கட்டுக்குள் கொண்டுபரப்பட்ட  நிலையைக் காட்டுவது.  பயணத்தின் உள்ளீடுகள்  அனைத்தும் திட்டம் செய்யப்பட்டுள்ளன  என்று பொருள்.

யா>யாத்தல்  (மேலே).
யாத்திரை:  : யாக்கப்பட்ட பயணம்.
யாப்பு : பாடல் கட்டப்படுவது.
யாகம்  :  ஆன்மாவை சடங்குகள் மூலம் கட்டி இறுதியில் இறைவனுடன்  கட்டுவது.
யாக்கை  :   கட்டப்பட்டதாகிய  உடம்பு.    தசை,  எலும்பு  உறுப்புகளால்
கட்டப்பட்டது.