சனி, 8 ஏப்ரல், 2017

கம்பர் உவச்சர் அல்லது ஓச்சர் குலத்தில் தோன்றியவர்



இனி, உவச்சன் என்ற சொல் எவ்வாறு அமைந்தது என்பது காண்போம்.
இச்சொல் ஓச்சன் என்றும் வழங்குகிறது.

இந்த இரு வடிவங்களுள் எது முன் அமைந்தது என்று காணவேண்டும்.ஆனால் இதைத் தீர்மானிப்பது கடினமே.

 இதற்குள் புகுந்து இடர்ப்படாமல், இரண்டையும் முதலாகக் கொண்டு
ஆராயலாம்.

உவச்சன் என்பதை  உவ + அச்சன் என்று பகுத்துக் காணின், உவ =
முன் நிற்கும்;  அச்சன் = ஐயன்; தந்தை போன்றவன் என்று பொருள் வரும். உவ+அச்சன் = உவச்சன்; இங்கு ஓர் அகரம் கெட்டது. உவ என்ற (சுட்டடிச் ) சொல்லின் இறுதி அகரம் கெட்டதா? அன்றி, அச்சன் என்பதன் தலை அகரம் கெட்டதா என்று ஆராய்தல் தேவையில்லை.
அதைப் பண்டிதன்மாருக்கு விட்டுவிடுவோம்.

இனி ஓச்சன் என்பதை முந்து வடிவாகக் கொண்டு, ஆய்வு நிகழ்த்தலாம். ஓச்சுதல் என்றால் : எறிதல், ஒட்டுதல், செலுத்துதல், உயர்த்துதல், ஓங்குதல், பாய்ச்சுதல்,  மற்றும் வீசுதல் ஆகும்.  எனவே இறைவனை, இறைவியை உயர்த்திப் பாடுதல், ஓசைப்படுத்தல் என்பதாம்.  ஓசு என்ற‌
என்ற வடிவம் ஓச்சு என்பதன் இடைக்குறை . இது பெயர்ச்சொல்லாக,
கீர்த்தி (சீர்த்தி ), புகழ் என்றும் பொருள்.  ஓ > ஓசு > ஓசை என்பதும்
கருதத்தக்கது.

ஓச்சர் என்பார் பிடாரி கோயிற் பூசாரிகள். அவர்கள் ஒரு குலமாகச்
செயல்பட்டுத் தொழிலீடுபாடு கொண்டிருந்தனர்.  பிடார் என்ற சொல்லுக்குப் பீடு பெருமை என்பது பொருள்.  இது பீடு + ஆர் + அன் என்று உருவாகி, பீடாரன்> பிடாரன் என்று குறுகி அமையும் சொல்.

பெருமையுடையோன்  . இது பாம்பு பிடிப்போன், குறவன், வைத்தியன்
என்று குறிக்கும். பாம்பு பிடிப்பது, ஓர் அசத்தும் தொழில். வைத்தியமும்
இன்றியமையாத தொழிலே.

எனவே பிடாரி ( பீடுடைய பெருமாட்டி ) என்பது ஒரு சிற்றூர்த் தெய்வம்.  இங்குப்  பூசாரிகளாக வேலை செய்தோர் ‍‍உவச்சர்கள் அல்லது
ஓச்சர்கள்.

கம்பர் பெருமான் உவச்சர் அல்லது ஓச்சர் குலத்திற் தோன்றியவர். பிடா ரி
வழிபாட்டினர் இராம பத்தர்களாயும் இருந்தனரா என்று தெரியவில்லை. கம்பர் இராம பத்தப் பாடுநரானது மேலும் ஒரு காவியத்தைத் தமிழுக்களித்தது

----------------------------------------------------------------

பீடு என்பதன் அடியாகத் தோன்றிய ஒரு  தொன்மச்  சொல் பீஷ்மன் என்பது என்று முன்னரே இடுகை தந்துள்ளோம்.

பீடு+ மன் ‍= பீடுமன்; இயல்புப் புணர்ச்சி. பீடு‍= பெருமை; மன் = மன்னன். ஆகவே பெருமைக்குரிய மன்னன். காரணப் பெயராகிறது. இது டுகரத்தைக் களைந்த நிலையில் ஷ் என்ற எழுத்து நுழைக்கப்பட்டு, பீஷ்மன் ஆகும். ஓரெழுத்து மாற்றத்திலே சொல்லை அமைத்தது திறனே ஆகும்.

புதிய சொற்களை எப்படி அமைப்பது என்பதைப்  பெரும்புலவன் வால்மிகி
யிடத்து ம்  மற்றும் வேத வியாசனிடத்தும்   கற்றுக்கொள்ளவேண்டும்.



.You may refer to other works on the history of uvachchars. We are only concerned here  with word
derivation.

Edited.















ரக்க > ரக்ஷ. ஜெகன்மாதா


இரக்கம் >  ரக்க >  ரக்ஷ.    பொருள்: இரக்கம்.
இகம்  (இ(வ் வுல) கம்)  > ஜெகம்.
அம்மா, தாய் >  ~மா + தா~  = மாதா.
ஜெகம்+ மாதா = ஜெகன்மாதா.

அம்மா என்பதில் "மா" மட்டும் எடுக்கப்பட்டது;  தாய்  என்பதில்  "தா " மட்டும் வந்து சேர்ந்து கொண்டது. ஆகமொத்தம்:  மாதா ஆனது. அருமையான புனைவு ஆகுமிது.

ஒப்பு நோக்குக: ஆய் + தாய் = ஆ +தா  =  ஆத்தா.

ரக்ஷ ரக்ஷ ஜெகன்மாதா = இரக்கமுடைய  உலகத் தலைவியே.

பழந்தமிழ்ச் சொற்கள் அழகாகச் செதுக்கப்பட்டு, புதிய சொற்கள்
படைக்கப்பட்டன.

ரக்ஷகர் : மனமிரங்கிக் காப்பாற்றுகிறவர். (ஏசுநாதருக்கு வழங்கும்
பெயர்.)

ஒரு மொழியை வளப்படுத்த  எம்முயற்சியும் நன்முயற்சியே.

வியாழன், 6 ஏப்ரல், 2017

பூமி நேரானதன்று ..கோணி.......

நாம் வாழும் பூமி நேரானதன்று. பல கோணல் நெறிகளைக் கொண்டிருக்கிறது. நாம் கவனத்துடன் செல்லாவிடின், கோணுதலும்
குறிக்கோள் தவறுதலும் நிற்சையம்.( 1 )

கோணிச் செல்வதற்குப் பலவழிகளையும் வலைபோல் விரித்து வைத்திருக்கும் இந்தப் பூமி, ஒரு கோணியே  அன்றோ?  நடப்பதில் கூட‌
இடையில் மேடு, பள்ளம், ஆறு, குளம், கடல், மலை, கட்டை, விட்டை என்று எண்ணிலடங்காதன, குறுக்கிட்டு, நம்மைக் கோணிச்செல்ல, விபத்தைத்2 தவிர்க்கப் பணிக்கின்றன .

இத்தகைய பல கோணல்களையும் உள்ளடக்கிய பூமிக்குக் கோணி என்றுதான் பெயர்வைக்கவேண்டியுள்ளது.

நாம் இனி வைக்கவேண்டாம். முன்னரே வைத்துத் தமிழில் அது
இன்னொளி வீசிக்கொண்டிருக்கிறது.  கோணி என்றால் அதன்
பொருள்களில் பூமியும் ஒன்றுதான்.

இயற்கையால், இறைவனால் வைக்கப்பட்டதனால், வையம், வையகம்;
தோன்றியதனால்:  பூமி. (பூத்தல் = தோன்றுதல் ). நிலைகொண்டிருத்தலால்: நிலம்.  உருண்டையானதால் : உலகு, உலகம்.  (உல் = உருண்டை, கு: விகுதி. ).  உணவு தருவதனாலும் நீர் தருவதனாலும் தரை. (தரு+ஐ = தரை). இங்ஙனம் சொற்கள் பல. அவற்றுள் கோணிக் கோணிப் போகவேண்டியிருப்பதால் அது
கோணியும் ஆகும்.


அடிக்குறிப்புகள்.

1.  நில் > நிற்சை (நில் + சை + அம் ):  நிற்சையம்   நிற்பது , நிலைபெற்றது, மாறாமை உடையது.  சை, அம் என்பன விகுதிகள்.
புளி  > புளிச்சை  (கீரை ).  சை  விகுதி.   அன் >  அனிச்சை .  அல் > அன் . (மோப்பம் .பிடிக்க அல்லாதது ).  இ > இச்சை :  இங்கு மோப்பம் பிடித்து வருவது : இகரச்  சுட்டு, இங்கு என்பது பெண்மை இடக்கர்  அடக்கல் .
இத்தகு சொற்கள் இப்போது பொதுப் பொருளிலே  வருகின்றன.

2.  விபத்து . இதன் முன் வடிவு: விழு பற்று.  ழுகரத்தை
எடுத்துவிட்டுப் பற்று என்பதை சிற்றூர்ப் பேச்சின்படி
பத்து என்றாக்கினால்,  விபத்து கிடைக்கிறது. இது
அப்படி அமைந்த சொல். பற்றுதல் : ஒரு தொல்லை
உங்களைப் பிடித்துக்கொள்ளுதல்; தொடர்தல், நடத்தல்.
விழுதலே பண்டை நாட்களில் விபத்து. இப்போது
விபத்துகளும் காரணங்களும் முன்னேறிவிட்டாலும்
நாம் இவற்றுக்குப் புதிய சொற்களைத் தேடவேண்டாமே.