திங்கள், 26 செப்டம்பர், 2016

சட்டமும் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

அடுதல் என்பது சுடுதல் என்றும் பொருள்தரும். இந்த அடிப்படையில் எழுந்ததே சட்டி என்ற சொல்.  அடு> சடு > சட்டி இதை முன் எழுதியுள்ளோம்.


அகர அல்லது அதன் வருக்கங்கள் முதலாகிய எழுத்துக்கள் சகர அல்லது அதன் வருக்கங்கள் முதலாயினவாய்த் திரியுமென்பதைப்   பழைய இடுகைகளில் அறிந்து தெரியலாம். இதனை  வேறு ஆசிரியர்களும் விளக்கியுள்ளனர்.


சட்டம் என்ற சொல்லும் இதன்படி அமைந்தது.  அடு >  அட்டம் > சட்டம் என்று வரும். அடு >  சடு > சட்டம் எனினுமாம்.  இங்கு டகர இரட்டிப்பு நிகழ்கிறது.

சுடுவதுபோல் அல்லது தண்டிப்பதுபோல் சொல்லப்படுவதே சட்டம்.  இப்படி நடந்தால் உன்னை அதற்கேற்ப இப்படித் தண்டிப்பேன் என்று சொல்வது சட்டம்.  தண்டனை ஒன்றும்  சொல்லப்படாமல் இங்ஙனம் ஒழுகுதல் வேண்டுமென்று அதிகாரத் தோரணையில் தரப்படுவதும்  அதுபோன்ற பிறவும் சட்டமென்றே கொள்ளப்படும்.

In common parlance the tamil term includes legal as well as quasi-legal matters. It can also be
used figuratively as we shall see later/.

Will edit.

சட்டமும் சட்டலாட்டமும்

சட்டலாட்டம் என்பதையும் தொடர்புடையனவற்றையும்  தொடர்வோம்.    

ஆயத்தம் சொல்

ஆயத்தம் என்ற சொல்லைப் பற்றி உங்களுடன் சிந்திக்கலாம் என்று இரண்டு
மாதங்களுக்கு முன்னரே எண்ணியிருந்தாலும் அதற்கான வாய்ப்பு இப்போதுதான் கிட்டிற்று.

ஆயத்தம் என்பது தயார் நிலை, முன்னேற்பாடு என்று பொருள்படுவது. இச்சொல்லின் முன்னிருப்பது ஆய என்பது. ; மற்ற சொல் அற்றம் ஆகும்.

அற்றம் எனின் தருணம். தகுந்த நேரம்.

அற்றம் என்பது பேச்சு வழக்கில் அத்தம் என்று திரியும்.

இங்ஙனம்  திரிதல் தமிழில் பெருவழக்காகும். பேச்சில் இங்ஙனம் திரிவன‌
பல.  சிற்றம்பலம் >  சித்தம்பலம் >  சிதம்பரம் என்பது காண்க.

ஆய + அத்தம் =  ஆயத்தம்.

இங்ஙனம் சரியான தருணம் எனப் பொருள் தந்தாலும்,  வழக்கில் இது
ஏற்ற தருணங்களை உண்டாக்கிக்கொண்டு இருத்தல் என்று விரியும்.

இஃது இனிதாய் அமைந்த சொல் ஆகும்.

சனி, 24 செப்டம்பர், 2016

இரதிபதிப்பிரியா : " ஜெகத் ஜெனனி "

இரதிபதிப்பிரியா இராகத்தில் அமைந்த இந்த இனிய பாடல், சுத்தானந்த பாரதியாருடையது.  இதன் வரிகள் உங்களிடம் இல்லை யென்றால் இஙுகு
பாடல் உங்களுக்கு வந்து உதவுகிறது:  இதை இசையரசு  M.  M.  தண்டபாணி தேசிகர் பாடியுள்ளார்:.


ஜெகத் ஜெனனி சுகவாணி கல்யாணி  (ஜெகத் ஜெனனி)


சுக சொரூபிணி மதுர வாணி
சொக்க நாதர் மனம் மகிழும் மீனாட்சி

பாண்டிய குமாரி பவானி அம்பா சிவ‌
பஞ்சமி பரமேஸ்வரி

வேண்டும் வரம் தர‌
இன்னும் மனமில்லையோ
வேத வேதாந்த நாத சொரூபிணி    (ஜெகத் ஜெனனி )