சனி, 24 செப்டம்பர், 2016

இறைச்சி how derived?

இறைச்சி  என்பது பாலரும் அறிந்த சொல் ஆகிவிட்டது, ஞாயிற்றுக் கிழமைகளில் பலர் இறைச்சிக் குழம்பு  உண்ணும் பழக்கம் உடையோராய்
விளங்குகிறார்கள்.

இறைச்சி என்ற சொல் எங்கிருந்து வந்த தென்பதை அறிந்தால் அதுவும் இன்பமே.  உண்பதே இன்பம், சொல் உண்டானது அறிதல் வேண்டா என்பாரும் இருப்பர்.

ஒரு விலங்கு இறந்தபின் கிடைப்பதே அதன் இறைச்சி. உயிர்க்கொலை செய்தாலே ஊன் கிடைக்கிறது.\

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி 
எல்லா உயிரும்  தொழும்     (குறள் )

இறு > இற > இறப்பு.  இறுதல் என்பது முடிதல். கொல்லுதலும் இதில் அடங்கும் .
இறு   >  இறை.   முடிவு.

இறு > இறை >  இறைச்சி.

சி  என்பது விகுதி .    எழு > எழுசசி  என்பது காண்க ,

இறைச்சி  :  இறந்த அல்லது கொல்லப்பட்ட உடலில் கிடைக்கும் அதன் சதை.

இறு என்ற சொல்லுக்குப் பல பொருளுண்டு.  அவற்றுள் ஒன்றையே
இங்கு கூறினோம்.  அறிந்து மகிழ்க.

இறைச்சி என்பது உயிர் இல்லாமை குறிக்கும் தொழிற்பெயர்.  ஆகுபெயராய்
ஊனைக் குறித்தது.



உபாதை என்ற சொல்லை

உபாதை என்ற சொல்லையும் பொருளையும் கவனிப்போம்,

இதில் உ =  முன்னிருப்பது என்று பொருள்படும்.

பாதை என்பது பதைத்தல்.  

பதை >  பாதை.  இது முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

சுடு என்ற சொல், முதனிலை நீண்டு, சூடு என்றாகி,  பெயர்ச்சொல் ஆகும்.
இதற்குத் தொழிற்பெயர் என்று பெயர். இதைப்போலவே, பதை என்பது
பாதை என்று நீண்டு  பெயரானது.

உ+ பாதை = உபாதை.  முன்னிருந்து தொந்தரவு செய்யும் வலி. அல்லது
மற்ற தொல்லை.

வழி என்று பொருள்படும் பாதை வேறு சொல்.

கடக இராசி. சொல்லமைப்பு.

கடகம் என்பது  நண்டு என்று பொருள் படும்.

நண்டு கடிய ஓட்டினுள் வாழ்கிறது.  ஆகவே அதற்கு ஒரு கணிக்கலைச்
சொல் அமைத்தல்  எளிதுதான்.

கடுமையான ஓடு:  " கடு ".

உள்ளிருப்பது:      "அகம்."

கடு+ அகம் ‍  =  "கடகம்."

இங்கு டகரம் இரட்டிக்கவில்லை.

சோதிடம் ஒரு தனிக்கலை ஆதலின், அக்கலைக்குரிய சொற்களைப்
படைப்பதே சரி.  அங்ஙனமே இச்சொல் படைத்துள்ளனர்.


https://sivamaalaa.blogspot.sg/2015/07/crab-and-its-qualities.html