வெள்ளி, 23 செப்டம்பர், 2016

ஜெயலலிதா நம் அன்னை. வாழ்க

தனக்கென வாழ்தல் இன்றிப்
பிறர்க்கென அரசில் வீற்றுக்
குணக்கடல் ஏற்றம் பெற்ற‌
ஜெயலலி தாநம்  அன்னை.
மணப்பெரு பொலிவே உற்ற‌
மாண்புறத் தேறித் தன் தோள்
முணக்குறு சுமைகள் வென்று
முதல்வருள் முதலாய் வாழ்க.

எந்திரன் என்ற சொல்லை,,,,,,,,,,,,,,,,,,,,பாராட்டவே வேண்டும்

https://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_20.html



மேற்கண்ட இடுகையைத் தொடர்ந்து ===


சாமிநாத ஐயர் தோன்றாமலும் சங்க இலக்கியங்களைத் தேடிப் பதிப்பிக்காமலும் இருந்திருந்தால், சங்க இலக்கியங்கள் இரா. அப்படியானால் இது தமிழ் இது அன்று என்று எவ்வாறு கண்டுபிடிப்பீர்,

எந்த இலக்கியமும் கிடைக்காத உலகத்துப் பல மொழிகளில் எப்படி ஒரு
சொல் அம்மொழிக்குரியது என்று கண்டு பிடிக்கிறார்கள்?

சங்கப் புலவன் பயன்படுத்திய ஒரு சொல் பிற மொழியிலிருந்து அவன்  அறிந்தது என்பதை எப்படி மறுப்பீர் அல்லது ஒப்புவீர் ?

இதற்கெல்லாம்  உங்களிடம் விடை  இருக்கவேண்டும்.  இது அறியாத போ து
இது தமிழ் இது அன்று என்பது கடினமே.

யாம் கவனிக்க விரும்பியது  எந்திரன் என்ற சொல்லை.  இந்தப் பெயரை ஒரு படத்துக்கு இட்டவர்களைப்  பாராட்டவே வேண்டும்

இயந்திரம் என்பது பொருள்    எந்திரன் மனிதனைச் சுட்டுகிறது .   அதாவது எந்திரத்தினாலான மனிதனுக்குப் பெயராகிறது.

அன்  விகுதி வந்தால் மனிதனைக் குறிக்கும்.  சில வேளைகளில் குறிக்காது:  எடுத்துக்காட்டு  :  சூரியன்.

எந்திரன் என்பது நல்ல தமிழ்.  இயந்திரம் > இயந்திரன் >  எந்திரன்,  இது திரிபுச் சொல் .

இயலாது என்பது ஏலாது என்று திரியுமே .

ஏலா இடர் ஒருவர் உற்றக்கால்  (நாலடியார் )

இயைய  > ஏய

 ஏய  உணர்விக்கும்  என்னம்மை  (  புலவன்  அம்பிகாபதி )

இவை நினைவில் முந்துபவை  ஆகும் .

இ + அம்   + திறம்  =  இயந்திரம் !!  \\

இ  :  இங்கே.

அம் :  அங்கு.      அ + கு =  அம் +  கு =  அங்கு.  மகரம் ஒரு சாரியை,

திறம் >  திரம்   போலிக் திரிபு.



 இங்கே இருப்பது தானேயோ நகர்ந்தோ சுற்றியோ எப்படியோ போனால் அதுவே  இயந்திரம் .அதாவது  மனிதனும் விலங்கும் இயக்கற்ற பிறவும் அல்லாதது.


The thoughts of ancient Tamils were extremely simple and direct. .

வியாழன், 22 செப்டம்பர், 2016

ஐயம் என்ற சொல்லையும்

https://sivamaalaa.blogspot.sg/2016/09/blog-post_69.html


http://sivamaalaa.blogspot.com/2016/09/blog-post_14.html



இவற்றைத் தொடர்ந்து :


முன்னிரண்டு இடுகைகளையும் ஊன்றிப் படித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் , ஐயம் என்ற சொல்லையும், சேர்த்து ஆய்வு செய்தல் நலம்.

ஒரு பொருளை அங்கு வைத்தோமோ இங்கு வைத்தோமோ என்பது போலும்
இருமுனை எண்ணங்கள் வரின், அதனை ஐயம் என்கிறோம்.

இச்சொல் அங்கு, இங்கு  என்ற இரண்டையும் உள்ளடக்கியது.

அ +  இ  + அம் =  ஐயம்.

அம் என்பது விகுதி.

அ + இ ‍=  அயி ஆகும்.   இது  அம் விகுதி சேர,  அயி என்பதிலுள்ள இகரம் கெடும். கெடவே  அய்  என்றே நிற்கும் ,   அய்  எனினும்  ஐ  எனினும்  வேறுபாடு இல்லை.

அய் + அம் ‍என்பது ஐ + அம் என்றாகும் பின் ஐயம் என்று முடியும்.

அங்கும் இங்கும் அலைந்து பிச்சை எடுத்தலும் ஐயம் எனவே குறிக்கப்பெறும்.  அங்கும் இங்கும் சுட்டு இவண் அலைதலைக் குறிக்க வரும்,

அங்கும் இங்கும் என்ற சுட்டுக்கள் இருமுனையையே விதந்து குறிப்பினும் பன்முனைகளில் எழும் ஐயமும்  இதிலடங்குவது ஆகும். தேவையில்லாமல் அதற்கு இன்னொரு சொல் அமைக்கவேண்டாமையின்,

அய் என்று நின்ற அமைப்பு இர் என்னும் வினையாக்க விகுதி பெற்று
அயிர் ஆகும்.  அயிர்த்தல் எனினும் ஐயம் கொள்ளுதலேயாம், உய்  >  உயிர் > உயிர்த்தல்  என்பது  இன்னோர்   எடுத்துக்காட்டு.

இதன் மூலம்  ஐயம் என்ற சொல் தெளிவுபடுத்தப்பட்டது.