புதன், 21 செப்டம்பர், 2016

ஐ நா பொதுசெய லாளராய்...

தளபதி யாகவே இருந்துவிட்டால்
தலைவர் ஆவதும்  எப்பொழுது?
தலைவர் ஆகவே இலங்கிவிட்டால்
அமைச்சராய் அமர்வார்  எந்நாளிலே?
அமைச்சர் என்றே அமுங்கி இருப்பினே
அதிபராய் உதிப்பதும்  என்றுசொல்வீர்?
ஐ நா பொதுசெய லாளராய்  ஆகிட
ஆசையும் இல்லை  என்பருண்டோ?

இதைக் கவிதையாக  எழுதவில்லை.  ஆனால் ஒரு கவிதைபோல் வந்துவிட்டது. சிறு மாற்றங்கள் செய்தேன்.  அரசியலில் இருப்போருக்கு 
ஆசை இருக்கும்/  முன்னேற்றம்  காண .

திங்கள், 19 செப்டம்பர், 2016

வன்னிலை வாய்ந்த கொசு

கொசுவுக்குக் கூடுதல் கொல்புகை வீசி
இரவுக்குள் இன்பம் இயல ----- நிறுவினும்
எண்ணிய சின்னேரம் எங்கிருந்தோ வந்ததே
வன்னிலை வாய்ந்த கொசு



கூடுதல் = மிகுதியான

கொல்புகை -  கொசுக்களைக் கொல்லும் அல்லது விரட்டும்
ஒரு தணிப்புப் புகை. known as fogging.  spray of  smoky pesticide.

வீசி -  அடித்து.

இரவுக்குள் - இரவு நேரங்களில்.

 இரவு வருமுன்  எனினும் ஆம்.

இன்பம்-  கொசுக்கடி இல்லாத நிலை.

இயல -  வெற்றிகரமாக நடைபெறுமாறு .

நிறுவினும் - நிலைநாட்டினும்   .

எண்ணிய - கொcசுவைக் காணவில்லையே என நினைத்த.

சின்னேரம் - கொஞ்ச நேரத்தில்.

வன்னிலை -  வலிமையான நிலை.  வல்+ நிலை

சனி, 17 செப்டம்பர், 2016

அருந்ததியர் என்பது.........

அருந்ததியர் என்போர்  அதியமானுடன் தொடர்பு கொண்டோர்
என்று சிலர் கூறுவர்.

சில மன்னர்கள் ஒழுக்கத்து மேன்மை கொண்டோராய் விளங்கியிருந்தனர் என்று தெரிகிறது   மன்னருள் பலர்
பல மனைவியரையும்  மாற்றுத் தொடர்பு மகளிரையும் கொண்டிருந்தனர் என்று வரலாறு கூறுகிறது.  500 - 600 என்று
விரிந்த குழாம் உடைய மன்னர்களும்  வரலாற்றில் பலராவர்.

அத்துடன் கோயில்கள் பலவும் அவர்களால் நிறுவாகம் செய்யப் பட்டன. அவர்களுக்குத் தடைகள் யாதும் இல்லை.

அருந்ததியர் என்பது அருந்து+ அதியர் என்றும் பிரியும்.

சாப்பாடு அதிகம் உண்டோர் என்று இது பொருள்தரும்.

என்னவென்று தெரியவில்லை. மன்னர் அளித்த உணவு அதிகம்
பெற்று  உண்டவர் என்று கொள்ள, இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டியுள்ளது.

க என்பது ய என்றும் திரியும்.  மகன் என்பதை மயன் என்று
சிலர் சொல்வது கேட்டிருக்கலாம்.