திங்கள், 16 நவம்பர், 2015

சக்கிலியன் II

http://sivamaalaa.blogspot.sg/2015/11/blog-post_15.html

மேற்கண்ட  (முன்) இடுகையிலிருந்து தொடர்கிறோம். ]

நாளடைவில்  சக்கு என்பது சக்கு  நீராட்டுதலைக் குறித்தது  ஆகுபெயர்.

சக்கிலியர் அரசாண்டதாகவும் கதை இருக்கிறது.  அவர்களில் ஒருவர்  3 மணி நேரமே  கொலு வீற்றிருந்தார் என்றும் பின் பதவி  துறந்தார் என்றும் கூறுவர்.

  இவர்கள் சாக்கிய முனியைப் பின்பற்றினர் என்றும்  ஆகையினால் இப்பெயர் பெற்றனர்  என்றும் கூறுகின்றனர்.
சாக்கியர்  >  சாக்கிலியர் >   சக்கிலியர்  என்று வந்தது  என்பர் போலும்.
இங்ஙனம் முடிவு  செய்வதாயின் சக்கிலி   என்பது முழுச்சொல்லின் திரிபு  என்றும்  இலி  என்பது  பின்னொட்டு அன்று என்றும்  கொள்ளவேண்டும்,

அவர்கள் தொழில் எப்போது  மேற்கொண்டனர் என்ற கேள்வியும் உள்ளது.

Errors occurred and we could not continue.  Shall develop later. 

ஞாயிறு, 15 நவம்பர், 2015

சக்கிலியன்

சக்கிலியன் என்ற சொல்லை இப்பொழுது  சற்று பார்ப்போம்..

இது ஆய்வு செய்து உடன் அறியக்கூடிய சொல் அன்று.

வண்ணான் என்பது  ஒரு சாதிப் பெயராகவும்  ஒரு தொழில்செய்வோனின் பெயராகவும் ஒருங்கு காணப்பெறுவது போன்று  சக்கிலியன் என்பது அத்துணை தெளிவாக இல்லை.    வண்ணான் எனில் துணிகட்கு வண்ணமூட்டுபவன்  என்று எளிதில் அறியலாம்.   சக்கிலியன்  என்பதை  அங்ஙனம் உடன்கூற இயலவில்லை.

சக்கிலியன்  என்பதை  சக்கு  இலியன்  எனப் பிரிக்குங்கால் சக்கு என்பது இப்போது  வழக்கில் இல்லை. ஆனால்  அது யாழ்ப்பாணத்து அகரவரிசைகளில் சக்குஸ்நானம்  என்ற சொல்லில் பொதிந்து காணப்படுகிறது:  அதன் பொருள்:

 n. < சக்கு¹ + ஸ்நானம்  Ceremonial washing of the eyes of a deity in a temple; விக்கிரகத்தின் கண்களை நீராற் சுத்தி செய்யும் பூசைவகை

 இலியன்  என்றால் இல்லாதவன் என்பது பொருள்.  இலியன்  அல்லது இலி  என்பது வரும் பல சொற்கள் உள.   அவற்றைக் காண்போம்:

ஒப்பிலியன் >  உப்பிலியன்   (உப்பிலியக் குடி )
இறையிலி 
பிறப்பிலி 
இறப்பிலி 
கட்கிலி   invisible,  God. (கண் + கு​ + இலி ​)
என்பிலி  எலும்பிலி  ( புழு )
தப்பிலி 
போக்கிலி > போக்கிரி    திரிபு:  ல > ர 
நெய்ப்பிலி ( a flaw in precious stone,  esp  ruby)
பொருவிலி   (= ஒப்பிலி )
அறுகிலி  ( ஒரு பூண்டு ) 

எனப் பலவாம்.

சக்கிலியன் என்று  அன்  விகுதி  பெற்றால்  ஆண்பால்;  சக்கிலிச்சி என்று பெண்பாலில் வரும். 

எனவே மேற்சொன்ன பூசை  சக்கிலி என்னும் தோல்வினைஞர்கட்கு 
விலக்கப்பட்டது  என்று  பொருள்படும்.  பின்பு  முற்றிலும் விலக்கப்பட்டனர்  போலும்.  இது மேலும்  ஆய்தற் குரியது. 

தொடரும் 



சனி, 14 நவம்பர், 2015

paris attacks

பாரீஸ்  படுகொலைகள்  பாவமென்றும் பார்க்காத 
யாரவர்கள் நோக்கம் எதுவெனினும்----வீரமற்ற
கோழைச்  செயலே கொடுமை உகப்பவனோ 
ஆழிசூழ் ஞாலமாள் வோன்.