வியாழன், 23 ஏப்ரல், 2015

ban on track events over virginity fears


ஓடல் உடற்பயிற்சி   பெண்களுக்  கில்லையெனும்]

காடர் கறைக்கோளிக் காலத்துக் --- கூடுவதோ
மேடேறி நிற்கும்நம் ,மெல்லியலார்  வீழ்ச்சியைத்
தேடி நிலைப்படுத்தும் தீது.

Australia Islamic school 'bans running' over virginity fears


https://sg.news.yahoo.com/australia-islamic-school-bans-running-over-virginity-fears-033224708.html


ஓடல் =  ஓடுதல்,  ஓடும் பந்தயம் அல்லது பயிற்சி.

காடர் =  காட்டு மனிதர் (போன்றோர்)'    சிந்தனையில் முன்னேற்றம்  இல்லாதவர்கள்.
கறை -  கரும்புள்ளி;  தெளிவற்ற.
கோள் = கொள்கை.
கூடுவதோ -  ஒத்துவருமோ.
மேடுஏறி -- முயன்று முன்னேறி.
வீழ்ச்சியை -  முன்னேற்றத் தடையை;
நிலைப்படுத்தும் =(வீழ்ச்சியை) அதிலிருந்து எழ விடாமல் தடுத்துவைக்கும்.
உறுதிப்படுத்தும்

காடு+ அர்   = காடர்     இடைக்காடர்  என்ற புலவர் பெயரும்  திருவெண்காடர் என்ற பெயரும் நோக்குக. 

காடு + ஆன் =  காட்டான்.  இங்கு டகரம்  இரட்டித்தது.

திங்கள், 20 ஏப்ரல், 2015

கிஞ்சித்தும் meaning.

கிஞ்சித்தும் -  பொருள்.

இது கிஞ்சித் என்ற வடசொல்லில், உம் சேர்ந்தது ஆகும்.  உம் என்பதொரு தமிழ் இடைச்சொல்.

இங்கு "கிம்" என்ற ( வட )சொல்லுடன்  "சித்" என்ற வடமொழி விகுதி சேர்ந்துள்ளது.  சுட்டுக்கள் அல்லாத பதிற்பெயர்களில்  (pronouns) இதுவும் ஒன்று.

கிஞ்சித் =  ஏதோ ஒரு பொருள் என்பது.

யாதும் ஐயமில்லை என்பதை,    கிஞ்சித்தும் சந்தேகமில்லை என்று எழுதுவர்.

எனவே இதை விலக்கி  "யாதும்"   "எதுவும்"  என்று எழுதுக.

கிம் என்பது உண்மையில் கொம் என்ற பழந்தமிழ்ச் சொல்லின் திரிபு.

கொம் > கொம்+சு+அம் = கொஞ்சம். சு-வும் அம்-மும் விகுதிகள்.

கிம்+சித் = கிஞ்சித்.   சித் விகுதி.   சு(தமிழ் )> சித். (வடமொழி )  விகுதியும் திரிந்தது.

Compare English:   "whatsoever".

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

பூவுலகு Earth or paradise?

நம் நில உலகுக்குத் தமிழில் சொற்கள் பல உள்ளன. இவற்றுள், பூமி, பூவுலகு (பூலோகம்) என்பனவும் அடங்கும்.

இஸ்லாமிய எழுத்தாளர்கள்  சில அரபிய விவரங்களைச் சுட்டிக்காட்டி  தமிழ் நாடே இறைவன் அளித்த  நலம்பல உடைய
அழகுலகு என்றும் இங்குத்தான்  ஆதாம் ஏவாள் முதலியவர்கள்
உலவினர் என்றும் கூறுவதுண்டு.

பூவுலகு என்பது அழகுலகு என்றும்  பொருள்படும். இதுவே  ஆங்கிலத்தில் பாரடைஸ்   (Paradise) எனப்பட்டது என்று கருத இடமுண்டு.

இதன் தொடர்பில் பூவுலகு  என்பதை ஆய்ந்தால்,  பொருள் மேலும் விளக்கமுறலாம்.