ஞாயிறு, 8 மார்ச், 2015

இளநீரால் மரணம்.

தகுந்த முறையில் ஊட்டப்பெற்றால்,  இள நீரும் உயிர்கொல்லப் பயன்படும்  என்று தெரிகிறது. இதைப் படித்து அறியுங்கள்.  வீட்டில் வேண்டாத முதியோரைக் கொல்ல ஒரு வழியாகக்  கடைப்பிடிக்கப் படுகிறதென்கிறார்கள்.



http://archive.tehelka.com/story_main47.asp?filename=Ne201110Maariyamma.asp


"Mother, shall I put you to sleep?"


நன்றிக்கே  ஒரு சான்று எதுவம்மாடி ?
நற்றமிழின்  மூதாட்டி ஔவை சொல்வார்:
என்றும்தன் அடிகளாலே   உண்ட நீரை 
தன் தலையால் தருதென்னை என்பதாக.

நன்றியினோர்  சின்னமிதன் நீரைத் தந்து
நானிலத்தின் வாழ்வுதனை நீங்கிச்செல்க‌
என்றுமக்கள் அம்மாவை அனுப்பிவைத்தல்

எண்ணுகையில் மனமுருக்கும் தலையேசுற்றும்


ஆனென்ற மாடுதரும்

ஆனென்ற மாடுதரும் அம்மென்னும் அழகதனை
ஆங்கறிதல் ஆனந்தமே
தானென்ற சொல்லதனில் தம்மென்று வருவதனைத்
தக்கபடி ஈற்றிலிட்டே
கூன்குன்று நன்மைகொள் எம்முன்னோர் உருதருசொல்
கோதிலதே ஆனந்தமே!
மீன்குன்றும்  முந்நீரில் மென்பாலோ   
குறைதலிலா
மேலிடைநன்  மக்கள்சொல்லே.

ஆன் = பசு;  அம்=அழகு; 

தான்> தாம் >தம்:  இதை ஈற்றில் இட்டால் = விகுதியாக்கினால்;

கூன் குன்று  நன்மை:  குறைவு என்பது சிறிதளவே உள்ள நன்மை.
முழுதும் குறைவானதும்  முழுதும் நிறைவானதும் ஆகிய பொருள்கள் உலகில் இல்லை. தீமை இருப்பினும் பெரிதும் நன்மையாய் இருக்கவேண்டும். விடம் (விஷம்) கூட மருந்தாகி நன்மை செய்வதுண்டு. 

உரு‍தரு சொல் ‍  உருத்தரு சொல். மெய், சந்தத்துக்காகக்  குறுக்கப் பெற்றது. மேல் அடிகளில் நான்காம்  சீர் நோக்கியது.

கடலில் மீன் வளம் குன்றிவிட்டாலும், ( நிலத்து)  மாட்டின் பால்வளம் குன்றாது   
நாட்டின் பொருளியலில் மகிழ்ச்சிப்பெருக்கம்.


சனி, 7 மார்ச், 2015

சாலை நெரிசலைச்

சாலை நெரிசலைச்  சற்றேதான் நோக்கிடினும்
நாளைப் புறப்படென் றொத்திவைத்து === வேளையிதில்
தூங்கென்னும் கண்கள் துவளுமே  என்னுடம்பே
நீங்கற்கு நேரமேநீ வா.