செவ்வாய், 2 செப்டம்பர், 2014

தூண்டாத விளக்கென்றால்.........

வேண்டாத எலிபற்றி எழுதி வைத்து
விடுமுறைக்குச் சென்றுவிட்டு இங்கு வந்தேன்!
தூண்டாத விளக்கென்றால் அதுநான் என்றால்
தோன்றுவது தற்புகழ்ச்சி ஈன்றாள் வைவாள்!
ஈண்டுவரும் இணையத்துத் தோழர்  என்றும் 
இதற்காகக் கோபிக்க மாட்டார்  என்னை!
தாண்டியொரு நாள்சென்றால் தக்க தான‌
தமிழ்விளக்கம் தந்திடுவேன் வந்து காண்பீர்.

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

Naughty mouse, I caught you!

குறும்பு எலி

கூரையின் கீழடைப்பில்
குடுகுடு என்றே  ஓடினாய்.
யாருமுனை வெறுத்தொதுக்க‌
கீச்சுக் கீச்சென்று கத்தினாய்!
குளிரூட்டியின் வெளிக்குழாயைக்
குறுகுறு என்று கத்திக்கொண்டு
நள்ளிரவும் பார்க்காமல்‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍----
சுள்ளியென்று நினைத்தாயோ
கடித்துக் குதறிவிட்டாய்.

பொறிவைத்தேன் மாட்டிக்கொண்டாய்.
பரிவுபெறும் பார்வை ஏனோ?
அதிகாலை உனைக்கொண்டுபோய்
ஆற்றங்கரையில் எறிந்திடுவேன்.
கொல்லமாட்டேன், அஞ்சாதே.
வினாயக ச‌துர்த்தி இன்று.
வினை ஆயவை விலக்கிடுவேன்.
வினை ஆயகத் தலைவன் அவன்.
எனையும் அவன் ஆயவிடேன் 
வினா எழ இடங்கொடாமல்
உனைத் தொலைவில் சேர்த்திடுவேன். 

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

காணாத ஞாலமே Poet F Thompson

காணவும் இயலாத ஞாலமே ‍‍‍‍--- நீ எம்
கண்களில் படுகின்றாய்;
தொடவும் அமையாவிப் பாரிடமே ---அண்டித்
தொடுதலும் அடைகின்றோம்!

அறியவும் இயலா உலகுனையே ---- யாம்
அறிந்தே நடக்கின்றோம்;  ‍‍
அறியா நிலையில் யாமுனையே ‍---- இறுக‌
அணைத்துக் கிடக்கின்றோம்,

******

மாகடல் மாந்திட மீனெழுமோ‍‍----காற்று
மாறறி கருடன் தாழுறுமோ?
மேகத்து மிசைமினும் மீன்களையே‍---கேட்போம்
மேலிருப்பானோ  நீலவானில்?
ணா 



குறிப்புகள்:

ஞாலம் -பூமி       அமையாவிப் பாரிடம் --  இயலாத இந்தப் பூமி,
அண்டி - (உன்னை) அணுகி .
மாந்திட  - to experience; to enjoy or indulge.  
எழுமோ -  to soar  above,  பறத்தல் போல் மேலே உயர்தல்.
காற்று  மாறு  அறி கருடன் -  காற்றின் வீசும் திசை அறியும்  கருடன்.
கீழுறுமோ -  கீழே இறங்கி  அதை அறியுமோ?  (எ-று ). 
மிசை  -  மேலே .  மினும் =  மின்னும்   மீன்களையே -  நடசத்திரங்க்களையே.
மேலிருப்பானோ  நீலவானில்?   -  இந்த நிகழ்வுகளுக்கெல்லாம்  மேலே  நீல வானுக்குள்  அவன் (கடவுள்)  இருக்கின்றானோ?

பூமியில்  நமக்குப் புரியாத பல நடக்கின்றன.  அதில் நாமும்  அறிந்தோ அறியாமலோ  இணைந்து கிடக்கின்றோமே! இவையெல்லாம்  நடத்திக்கொண்டு  இறைவன் மேலிருக்கின்றனோ?  யாரைக் கேட்பது?   விண்மீன்களைக்  கேட்போமா ?  === என்று கவி கேட்கின்றான்.






O World Invisible We view thee!  Poem by Francis Thomson,  (1859 - 1907)    first two stanzas translated       The poet's  tomb bears the last line from a poem he wrote for his godson - Look for me in the nurseries of Heaven[.

ref dbv415