திங்கள், 5 மே, 2014

வே > வி

முன் இடுகையில் வே > வி திரிபு பற்றி கண்டோம்.  வே> வி என்று திரியும் என்பது வி > வே என்று திரியும் என்றும் பொருள்படும். மக்கள் சொற்களை பலுககுவதற்கு எது எளிதானது என்பதைப் பொறுத்தே இத்திரிபுகள் அமைகின்றன.

இனி இன்னோரு திரிபு கண்போம்.

வேண்டல்  - விண்ணப்பம் என்பவை ஏறத்தாழ ஒரே பொருளுடையவை.
வேண்டல் என்பதில்  அல்  இறுதி நிலை அல்லது விகுதியாய் நிற்கின்றது.
விண்ணப்பம் என்பதோ,   விண் என்பதுடன் "அப்பு+ அம்  " என்பனவும் உள்ளன.அப்பு  என்பது அனுப்பு என்பதன் இடைக்குறை போல் தோன்றுகிறது. அன்றி, அப்பு -  ஒட்டு என்று பொருள் கொண்டாலும் இழுக்கில்லை.

 விகுதி ஆய்வை விட வேண் > விண் என்பதே நாம் ஆயப் புகுந்தது.

வேண் என்பதில் உள்ள  பொருண்மை விண் என்பதில் இல்லை  ஆதலினால்,அப்பு (அனுப்பு ) என்ற இடை நிலை
  தேவைப்பட்டது போலும்.

வே > வி  திரிபுக்கு இது  நல்ல உதாரணம் ஆம்.  

ஞாயிறு, 4 மே, 2014

வித்தியாசம்

வித்தியாசம் என்பது  வேறுபடுதல் என்னும் பொருளில் வழங்குகிறது .
சமஸ்கிருத அடிச்சொல் "வித் " ( " வித்யா" ) மற்றும் தொடர்புள்ளவை  வேறுபடுதலைக் குறிக்கும்   சொற்கள் அல்ல.  இவற்றில் சில பின் காண்போம்.

வேற்று நாடு. வேற்று ஆள் என்பவவை வேத்து நாடு , வேத்து  ஆள் எனப்படும் இயல்பான  பேச்சு வழக்கில் .

வேத்தியாசம் என்பதே வித்தியாசம் என்று மாறியுள்ளது.

ஆய(து) >  ஆய(ம்)  >  ஆசம்.  (ய > ச.)

வேத்து >  வேத்தி >  வித்தி.

உயிரெழுத்துக்கள் இங்னம்  திரிதலும் உண்டு.   வே> வி .  இதைத்  தனியே  விளக்குவோம்.  வித் என்பதிலிருந்து வேதம் எனும்  சொல் பிறந்தது என்று பல பண்டிதர்கள் கூறுதலின்   வி>வே  , வே> வி புதிது அன்று.



     

வெள்ளி, 2 மே, 2014

குருணை நொய்

கடைகாரர் குருணை  என்றே  எழுதுகிறார். இந்தக் குருணைக்கும் குருவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

நொய் என்பது சிறு சிறு துகள்களாய் உடைந்த அரிசி.   குருணை  என்பது உண்மையில் "குறு நொய் "  ஆகும்.

குறுநொய் :   நொய்யினும்  சிறியனவான துகள்களாய் உடைந்த அரிசி. " எப்படிக் கணக்கு எடுப்பது? எல்லாம் ஒன்றுதான் என்கிறார் கடைகாரர். 

குறுமை -  சிறுமை.குறிப்பது.

பேச்சு வழக்கில் வேறு  பதத்துடன் இணைந்த சொற்கள் -- நெய் என்பதும் நொய் என்பதும் "ணை "  என்றே திரிகிறது.

எண்ணெய் -   எண்ணை ;
குறு நொய்  -  குருணை.

இன்னொரு தனி இடுகையில் சில தொடர்புடைய விடயங்களை ஆய்வு செய்யலாம்.