வெள்ளி, 6 ஜூலை, 2012

மனங்கவர் ஷெல்லி


ம ன ங் க வ ர்  ஷெ ல் லி


ஷெல்லியின் கவிதைகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.
அவனுடைய கருத்தோட்டம் இப்படி யிருந்தது:

வெகுண்டெழுந்த மேற்குக் காற்றே
இலையுதிர் காலனின் மூச்சே
கண்ணுக்குப் புலப்படாமல் இருந்துகொண்டு
காய்ந்த இலைகளை விரட்டுகிறாய்.

இதைக் கவிதை வடிவில் எழுதலாமே என்ற எண்ணம் எழுந்தது  அது இப்படி வந்தது:


உதிர்காலன் எதிர்வீச்சாய் உரத்த மூச்சாய்
ஓங்கித் திசைமேற்கின்வழி வீங்கும் காற்றே,
புதிராகி, விழித்திரைக்குப் புலப்படாமல்
புரட்டிச்சரு கனைத்தும்பேய் விரட்டினாயோ!

ஆனால் தொடர்ந்து மொழிபெயர்க்கவோ, தழுவிப் பாடவோ முயற்சி செய்தேனில்லை.




மெதுவெள்ளை, கறுப்புடனே உறுத்தும் செம்மை
மேவுகின்ற நிறச்சருகுக் குவியல் தம்மை

என்ற வரிகளை, "காய்ந்த இலைகளை" என்பதற்குப் பதிலாக இணைத்திடலாமா என்றும்  யோசித்தேன்.....

வேறு  சோலிகள் வந்து குறுக்கிட்டுவிட்டன.....

nAthi


continue from post titled "anaathai" dated 5.7.12   (அனாதை ) 

நா என்பது அன்மை  அல்லது "அல்லாமை"  (அல்லாதது) குறிக்கும் ஒரு சொல்.ஆங்கிலத்தில் உள்ள "நோ" என்பது  அச் சொல்லுக்குத் "தூரத்துச் சொந்தம்". இந்தோ ஐரோப்பிய மொழிகளில் உள்ள இணையான சொற்களைப் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்.

அல்> அலா(தது) > அனா > நா.

ஒப்பீடு:

அம் > அம்மை > அம்மா > மா > மாத்ரு

இப்படித் தலைபோனவை பலவாம்.

தலைபோய் வால் நீண்டவை பல.


நா > நாதி.  (தி விகுதி)

நாதி இல்லாதவன்  என்பதில், உள்ள நா, ஆதரவு  என்று பொருள் தருவது.  வெறும் இன்மை அல்லது அன்மையைக் குறிப்பதன்று.

ஆகவே இந்தோ ஐரோப்பிய நா வேறு. நாதி என்பதில் உள்ள நா வேறு

வியாழன், 5 ஜூலை, 2012

maayOn


மாயோன் குழந்தைப் பருவத்திலே --அவன்
வாயைத் திறந்ததும் ஞாலம்கண்டு
தாயும் அறிந்து  மகிழ்ந்ததுண்டு -- அதைத்
தரணி உணர்ந்து நெகிழ்ந்ததுண்டு,