வியாழன், 27 மார்ச், 2025

சிக்குதல் வினைச்சொல் வந்தது எப்படி?

நாம் தையல்வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, சிலவேளைகளில் நூல் சிக்கிக்கொள்கிறது.  சிலர் சிக்கு எடுப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்.  சிக்கை அவிழ்த்து நூலை முன்போலாக்கி தைத்துக்கொண்டிருப்பார்கள். அவர்களைப் புகழாமல் இருக்கமுடியாது  சிக்கு அவிழ்படாமல் போய்விட்டால் அது இறுகிச் சிறு உருண்டை போலிருக்க, மிச்ச நூல் பகுதிகள் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக  தொங்கிக்கொண்டிருக்கும், இப்போது சிக்குண்ட நூலின் மொத்த நீட்டமும் குறுகி இருக்கும்.  சிக்கிய இடத்தில் நூல் ஒரு சிற்றுருண்டை ஆகிவிடும்,   நூல் சிறிதாகிறது; சிக்கும் இறுகிச் சிறிதாகிறது,
சிறுகு >  சி கு >  சிக்கு என்று  சொல் அமைகின்றது.  
முதலில் றுகரம் கெடுகின்றது  (அதாவது  எடுபட்டு விடுகிறது. ). பிறகு சி கு என்ற இரண்டும் சேர்ந்து  சிக்கு என்ற வினைச்சொல் உண்டாகிறது. 
இந்தச் சொல் மொழி ஓரசைச் சொற்களைக் கொண்டு அமைந்த மிகப் பழங்காலத்தில்,  சி என்று மட்டும் இருந்திருக்கலாம்.  அதில் கு என்ற வினையாக்க விகுதி சென்று சேர்ந்து,  சி + கு > சிக்கு என்று அமைந்திருக்கலாம்..  இப்படிஸ் சொன்னல் அது சரிதான்,  ஆனால் சி என்ற  அடிப்படை  மூலச்சொல் இப்போது  அதன் பொருளைத்  தெளிவாகக் காட்டவில்லை,  ஆய்வின் மூலமே அறியமுடிகிறது.  
அப்படியானால் இதை அறியவிரும்புவோருக்கு எப்படி விளக்குவது?  சிறு என்ற சொல்லினின்று அதை விளக்கலாம். அதைத்தான் இங்கு செய்திருக்கிறோம்.
சீர் என்பதற்கு பலவேறு பொருட்சாயல்கள் உள்ளன.  சீர்வரிசை முதலியதும் சீர் என்று குறிக்கலாகும்,  பாக்களின் அசைகள் கொண்டு ஏற்படும்  பகுதிகளும் சீர் என்றே சொல்லப்படுகிறது.  இது பல்பொருளொரு  சொல்.
று என்பதும் ஒரு வினையாக்க  விகுதியே.  இதை பழைய இடுகைகளிம் மூலம் அறியலாம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.

YOUR ATTENTION PLEASE

If you enter compose mode please do not make changes.

You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: