ஞாயிறு, 30 மார்ச், 2025

அசோகப் பேரரசன் காலத்துத் தமிழ்த் திரிபுகள்



அசோகப் பேரரசனின் கல்வெட்டுக்களில் அதியமான் என்னும் தமிழரசனின் பெயர் திரிந்து காணப்பெறுகிறது. அயல் நிலங்களைச் சென்று சேர்ந்த சொற்கள் பல திரிந்துவழங்குதல் என்பது மொழிகளின் இயல்பு ஆகும். திரிதல் ஒன்றும் வியப்பை ஏற்படுத்தவில்ல்லை. போலிச்சொற்கள் விதிப்படியே திரிந்துள்ளன என்பதே இன்று இங்கு நம் கவனத்துக்குரிய தாகியுள்ளது.
அதியமான் என்னும் சொல் சதியபுத என்று அறியப்பட்டுள்ளது. அதிய என்பதே சதிய என்பது திரிபு.இது அகர சகரத் திரிபு, இது இலக்கணத்துடன் ஏற்புடைய திரிபே ஆகும். மான் என்பது எப்படி புத ஆனது? மான் என்பது உண்மையில் மகன் என்ற தமிழ்ச்சொல்லின் திரிபே. மகன் மான் இரண்டும் தமிழே. மகன் என்றால் புதல்வன் ஆதலால் அசோகப் பேரரசின் கல்விமான்கள் புத என்ற சொல்லின்மூலம் அவனைக் குறித்துள்ளனர்.
புத என்பது புதல்வன் என்பதிற் பாதிதான். வடதேசத்து மொழிகளில் அன் விகுதி இல்லை. ஆகவேதான் புது அல் வு அன் என்ற சொற்பகவுகளில் புது அல்> புத என்று சொல் நின்றுவிட்டது. புதல்வு, புதல் என்பன அசோகன் ஆட்சியின் மொழிவடிவங்கட்கு ஏலாதவை.
இந்தோ ஆரிய மொழிகள் என்று கூறப்பட்டாலும் அன் தவிர்த்த புதல்வு என்பது "சோல்வ்" என்ற ஆங்கிலச்சொல் போல் ஒலி ஏற்கப்படவில்லை என்பது தெளிவு,
புத என்பது அக் காலத்திய மொழியின் சொல்வடிவங்கட்கு ஏற்புடையதாய் இருந்துள்ளது எனற்பாலதையே இது திறம்படக் காட்டும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்



உங்கள் அன்பான கவனத்திற்கு

FOR YOUR KIND ATTENTION PLEASE

If you enter compose mode please do not make changes.

You may share this post with others through any social media. Copyright is waived for this post..

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம்.
இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.







சனி, 29 மார்ச், 2025

TAMIL FOR SCANNING: உறுவித்தல்.

 எல்லா விவரங்களையும்  உள்ளடக்கி  எடுத்து வைத்துக்கொள்ளுதல் என்று இதற்குப் பொருள் சொல்லலாம்.  ஸ்கேன்னிங்  என்பதற்குப் பதினாங்காம் நூற்றாண்டிலிருந்து பல்வேறு பொருட்சாயல்கள் ஏற்பட்டுப் பயன்பாடு கண்டுள்ளன என்பது ஐரோப்பிய அறிஞர்கள் கூறுமுகத்தான்  தெரியவருகின்றது.

ஓர் இயந்திரத்தில்  நாம் கொண்டுபோய் ஏற்றும் தாளிலிருந்து எடுத்துக்கொள்ளுதல் என்பது  நாம் செயல் முறையில் கண்டுகொள்ளும் பொருளாகும்.

இதற்குத் தமிழில்  உறுவித்தல் என்ற சொல்வது மிக்கப் பொருத்தமாகும்.  உறுதல் என்ற சொல் நெடுங்காலமாக வழக்கில் இருந்த சொல். ஒன்றில் மற்றொன்று  படுதல்,  அல்லது தொட்டுத்தொடர்பு கொள்ளுதல் என்பது இதன் பொருள்.

இது என்னவென்றால் தொடர்பு படுத்தி மேலேற்றுதல். ஒரு இயந்திரம் தாளைத் தொட்டவுடன் தாளிலுள்ளது இயந்திரத்துக்குள் ஏறிக்கொள்கிறது.  இயந்திரம் அதைப் பதிந்து இங்கோ வேறிடத்திலோ வேண்டியபடி கொண்டுதருகிறது.

உறுதல்  தன்வினை  உறுவித்தல் பிறவினை. உறுவித்தல்  என்பதன் மூலம் இதே கருத்து நமக்குக் கிட்டுகின்றது.

வி என்ற விகுதியை இணைப்பதன் மூலம் நாம் தமிழில் இதை எளிதாகச் செய்துவிடலாம்

FURTHER READING:

If you have the time, you may wish to read this as well:

https://sivamaalaa.blogspot.com/2016/11/blog-post_19.html

மேற்கண்ட இடுகை மகத்தான என்ற சொல்லை விளக்குகிறது. கோடிட்ட பகுதியைச் சொடுக்கி வாசிக்கவும்.  Click the underlined entry above and it will take you to the post. 


அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

YOUR ATTENTION PLEASE

If you enter compose mode please do not make changes.

You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.


வியாழன், 27 மார்ச், 2025

சிக்குதல் வினைச்சொல் வந்தது எப்படி?

நாம் தையல்வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, சிலவேளைகளில் நூல் சிக்கிக்கொள்கிறது.  சிலர் சிக்கு எடுப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்.  சிக்கை அவிழ்த்து நூலை முன்போலாக்கி தைத்துக்கொண்டிருப்பார்கள். அவர்களைப் புகழாமல் இருக்கமுடியாது  சிக்கு அவிழ்படாமல் போய்விட்டால் அது இறுகிச் சிறு உருண்டை போலிருக்க, மிச்ச நூல் பகுதிகள் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக  தொங்கிக்கொண்டிருக்கும், இப்போது சிக்குண்ட நூலின் மொத்த நீட்டமும் குறுகி இருக்கும்.  சிக்கிய இடத்தில் நூல் ஒரு சிற்றுருண்டை ஆகிவிடும்,   நூல் சிறிதாகிறது; சிக்கும் இறுகிச் சிறிதாகிறது,
சிறுகு >  சி கு >  சிக்கு என்று  சொல் அமைகின்றது.  
முதலில் றுகரம் கெடுகின்றது  (அதாவது  எடுபட்டு விடுகிறது. ). பிறகு சி கு என்ற இரண்டும் சேர்ந்து  சிக்கு என்ற வினைச்சொல் உண்டாகிறது. 
இந்தச் சொல் மொழி ஓரசைச் சொற்களைக் கொண்டு அமைந்த மிகப் பழங்காலத்தில்,  சி என்று மட்டும் இருந்திருக்கலாம்.  அதில் கு என்ற வினையாக்க விகுதி சென்று சேர்ந்து,  சி + கு > சிக்கு என்று அமைந்திருக்கலாம்..  இப்படிஸ் சொன்னல் அது சரிதான்,  ஆனால் சி என்ற  அடிப்படை  மூலச்சொல் இப்போது  அதன் பொருளைத்  தெளிவாகக் காட்டவில்லை,  ஆய்வின் மூலமே அறியமுடிகிறது.  
அப்படியானால் இதை அறியவிரும்புவோருக்கு எப்படி விளக்குவது?  சிறு என்ற சொல்லினின்று அதை விளக்கலாம். அதைத்தான் இங்கு செய்திருக்கிறோம்.
சீர் என்பதற்கு பலவேறு பொருட்சாயல்கள் உள்ளன.  சீர்வரிசை முதலியதும் சீர் என்று குறிக்கலாகும்,  பாக்களின் அசைகள் கொண்டு ஏற்படும்  பகுதிகளும் சீர் என்றே சொல்லப்படுகிறது.  இது பல்பொருளொரு  சொல்.
று என்பதும் ஒரு வினையாக்க  விகுதியே.  இதை பழைய இடுகைகளின் மூலம் அறியலாம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.

YOUR ATTENTION PLEASE

If you enter compose mode please do not make changes.

You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.

வியாழன், 20 மார்ச், 2025

அதிசயத்தில் சாய்வதும் சரிவதும்

 இன்று  அதிசயம்  ஆச்சரியம் ஆகிய சொற்களின் தமிழ் மூலங்களைக் காண்போம்.

தமிழ் வீட்டினதும் அரசனினதும் மொழியாய் இருந்தபோது  சமஸ்கிருதம் என்பது தொழுமொழியாய் விளங்கியது. அரசன் கட்டிய கோயில்களிலும் வீட்டுக்கும் வெளியில் நிகழ்வுறும் சாமி கும்பிடும் நிகழ்ச்சிகளிலும் சமஸ்கிருதம் வழங்கியது. முதலில் ஒலியைக் கொண்டு இறைவனை வணங்கும் முறை மக்களிடை இருந்தது. இந்த ஒலிகள்  முதலில் ஏடுகளில் இல்லை. வெகுகாலம் ஏட்டுப்பதிவில் இல்லாதிருந்து ஒலிகளையும் இணைந்திருந்த  தொழுமணிகளையும் (verses of vEdas ) மறக்கத் தொடங்கி, பலவற்றை இழந்தபின்பே இவற்றைப் பாதுகாக்கும் எண்ணம் ஏற்பட்டுப் பதிவிடல் தொடங்கிற்று.  பதிவிடலால் ஒலிகளைச் சரிவரச் சொல்வதற்கு எந்த உதவியும் வரவில்லை. தெரியாதவர்கள் படித்து நன்கு  சொல்லமுடியாமல் கெடுத்ததனால், பலர் இந்த எழுத்துமுயற்சிகளை ஆதரிக்கவில்லை.  அதனால் சமஸ்கிருதத்திலும் பல பாடல்கள் அழிந்துவிட்டன. எஞ்சியதையே வேதவியாசன் பணியினால் நாம் பெற்றுள்ளோம்.

அதற்கென்று போற்றி வைத்திருப்போரை  நேமிக்க வேண்டி இருந்தது. ( காப்பியக் குடிபோன்ற பிரிவினர் தோன்றி மொழிகாத்து வேண்டிய நூல்களை இயற்றினர்.)

ஒரே களத்தில் இயங்கிய காரணத்தால் சமஸ்கிருதம் தமிழ் முதலிய பல பொதுச் சொற்களைக் கொண்டிருந்தன.  கடன்வாங்கிய சொற்கள் என்று குறிப்பதெல்லாம் இதை அறியாமையே ஆகும்.

அதிசயம் ஆச்சரியம் முதலிய சொற்கள் சமஸ்கிருதம் எனப்படுவன,  அவற்றின் மூலச் சொற்களைக் காண்போம்.

மிக்க வியப்பான ஒன்றைக் கேள்விப் பட்டவுடன்,  ஒருவிதச் சாய்வு உண்டாகிறது.  மனம் அந்தச் செய்தியின் பால் சாய்ந்து,  சிலர் நம்புவதும் சிலர் நம்பாமையும் ஏற்படுகிறது,  இது நேரன்மை ஆகும்,  அதாவது சாய்வு,  மனச்சாய்வு.

அதி சயம் என்பதில் சாய் + அம் >  சயம் என்று முதனிலை குறுகிச் சொல் அமைகிறது.  மனிதன் வியப்பின் பக்கம் சாய்வு கொள்கிறான்.

ஆச்சரியம் என்ற சொல்லிலும் சாய்வுக் கருத்தே உள்ளது,  சரிதல் என்பதும் சாய்வுதான்.  சரி + அம் > சரியம் ஆகிறது.

ஆதலின் சரிதல்  ஆச்சரியம் ஆகும்.  அதாவது வியப்பு,  சாய்தல் என்பதும் அது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

தொடர்புடைய பதிவுகள்:

https://sivamaalaa.blogspot.com/2015/10/chayanam.html

அனந்த சயனம்

https://sivamaalaa.blogspot.com/2017/09/blog-post_18.html

சயனம்  சயனி  ஆந்தசயனம்

https://sivamaalaa.blogspot.com/2017/09/blog-post_18.html

சங்கதத்தில் தமிழ்\\


https://sivamaalaa.blogspot.sg/2015/10/chayanam.html

அனந்த சயனம்

YOUR ATTENTION PLEASE

If you enter compose mode please do not make changes.


You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 


நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 


இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.


செவ்வாய், 18 மார்ச், 2025

புதிய காட்சியுரை: நாகரிகம் என்ற சொல்.

 இன்று       நாகரிகம் என்ற சொல்லை ஆய்வு செவோம்.  அதனுடன்  "நாகரீகம்" என்ற சொல்லையும்  சேர்த்துக்கொள்வோம்.  இதில் ஓர் எழுத்து  ( ரீ ) நெடிலாக வருகிறது.  இரண்டு வடிவங்களும் அகரவரிசைகளில் காணப்படுதலால் ஒன்று சரி மற்றது பிழை என்னாமல் இரண்டையும் ஆய்வுக்கு உட்படுத்திப் பொருளுரைக்க முடியுமா என்று பார்ப்போம்.\

முன்னர் ஒரு காலத்தில் நாகரிகம் என்பது என்ன சொல் ( தமிழா அல்லது சமஸ்கிருதமா )  என்று தெரியதநிலை இருந்தது.  மேலும் தமிழ் நூல்களில் நாகரிகம் என்று சிலவற்றிலும்  நாகரீகம் என்று சிலவற்றிலும் இந்தச் சொல் பயின்று வழங்கியது. இரண்டுக்கும் ஏறத்தாழ ஒரே பொருள் கூறப்பட்டமையின், இரண்டில் ஒன்ரு வழு என்றும் தமிழாசிரியர்கள் எண்ணினர்/  அதனால் நாகரீகம் என்பது "வழூஉச்சொல்" என்ற  கருத்தும் நிலவியது. இதுதான் முன்னைய நிலைமை .

தமிழ்ப்  பேரகராதி வெளியிட்ட  சென்னைப் பலகலைக்கழக புலவர்கள் இரு வடிவங்களிலும் இந்த நாகரிகச் சொல்லைக் கண்டு பதிவிட்டிருந்தனர். பேரகராதிக்கு முன்வந்த அகரவரிசைகளில் இரு வடிவங்களும் காணப்பட்டன.
இது நகர் என்ற சொல்லினின்று வந்ததாகவே தேவநேயப் பாவாணர் சொல்கிறார்.  என்றாலும் இது  நாகர் என்ற சொல்லினின்றும் வந்ததாகவுமே சொல்லப்படுவதுண்டு.  நாகர் மிக்க நாகரிகம் அடைந்திருந்தனர் ( அதாவது நகரவாசிகளாக  இருந்தனர்) என்றும் விளக்கினர்.

இதை இங்கு வேறு கண்டுபிடிப்புகளுடன் நாம் கூறுகிறோம்.

நாகரிகம் என்ற சொல்லின் பகவுகளைக் காண்போம.

இதை நகுதல் என்ற சொல்லினின்று  தொடர்கிறோம்.  நகுதல் என்றால் ஒளிசெய்தல்.  நகு என்பது நாகு என்று மாறுகிறது.  இதில் முதனிலை நீண்ட தொழிற்பெயர்.  நக்கத்திரம் > நட்சத்திரம் என்ற சொல்லும் நகுதல் என்ற சொல்லினின்றே வந்ததாக புறநானூற்றுச் சொற்பொழிவுகள் செய்த பேராசிரியர்கச் ஒப்புக்கொண்டனர்.
 
1952;  புறநானூற்றுச் சொற்பொழிவுகள். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, காண்க.

அடுத்தசொல் அரு ( அருமை) என்ற சொல்லாகும்..  \இரண்டும் சேர்த்து நாகரு என்று ஆகும்.

இகம் என்பது ஒரு விகுதி.  இதற்குச் சொல் என்ற அளவில்  இகுத்தல் என்பதிலிருந்து வந்தது என்பதே சரி.  இகுத்தல் என்ற கொடுத்தல் அல்லது ஈதல்.  ஆகவே கொடுப்பது என்பது பொருளாகிறது.  இதற்குப் பல பொருண்மைகள் கூறப்படுவதால் வேறு சொற்களில் விகுதிக்கு வேறு பொருள் வரக்கூடும்.  விகுதிகள் பொருள் இல்லாமல் வேறு சொல்லமைப்புக்கு உதவுதாகவும் இருத்தல் உள்ளது.

நாகரு+ இகம் >  நாகரிகம் ஆகிறது\\

நாகரீகமென்பது பாடல்களில் இசைமுறிவு ஏற்பாடாமல் இருக்க  நீட்டுதல் என்று முடிக்கவேண்டும்.  அதற்கு வேறு பொருளில்லை. பொருள் இதுவேதான் என்று உணர்க.

விண்ணானம் என்பது நாகரிகத்துக்கு இன்னொரு சொல். இதில் விண் ( ஆகாயம்) என்னும் பொருள் உள்ளசொல் நாகரிகத்துக்கு ஈடான சொல்லாகக் கொள்ளப்பட்டிருப்பதால் ஒளி குறிக்கும் ஒரு சொல் நாகரிகத்துக்கு ஆளப்பட்டிருப்பதும்  ஏற்புடையதே என்று உணர்க.

நாகரிகமென்ற சொல்,  திருக்குறளில் உள்ளது:  குறள் வருமாறு:

பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம்  வேண்டு   பவர் 

என்பது குறள். இது  இலக்கிய வழக்கு உள்ள சொல் என்பதும் அறிக.  இது ஒரு பல்பிறப்பி என்றும் உணர்க

அறிக மகிழ்க

மெய்ப்பு: பின்னர்.
"அதிசயத்தில் சாய்வதும் சரிவதும்" நாளை வெளிவரும். படிக்கத் தவறாதீர்.



வெள்ளி, 14 மார்ச், 2025

நிமிடம் என்ற சொல்.

 நிமிடம் என்ற சொல்லைச் சற்று விளக்கமாக்குவோம்.

இமை என்பது நிமை என்று திரியும் என்பது தமிழாசிரியரிடம் கருத்தாக இருந்துள்ளது.  இது பிறழ்பிரிப்பாலும்  அல்லது திரிபாலும் நிகழலாம்.  பிறழ்பிரிப்பானால் இதை இவ்வாறு காட்டுக:

கண்+ இமை > கண்ணிமை >  நிமை .    கண் என்ற ஈரெழுத்து மறைவு. இதை முதற்குறை என்னாமல் ஒருவகைத் தொகுப்பு என்னலாம். "ணி" முதலெழுத்தாகாதபடியால்  "நி"  வந்தது.

இமை இடுதல் என்பது நிமை இடுதல் என்றாகும்.

நிமை +  இடு +  அம் >  நிமிடம். 

நிமை என்ற சொல் தன் ஐகார இறுதியை இழந்து, நிம் என்று நின்று "இடு + அம்" என்றவை புனைவுற்றது.

ஏனைக் கருத்துகளுக்கு வாசிக்க:

https://sivamaalaa.blogspot.com/2020/04/blog-post_9.html.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்.

If you enter compose mode please do not make changes.

You may share this post with others through any social media. Copyright is waived for this post.



திங்கள், 10 மார்ச், 2025

குறைபட்ட இந்தப் புவி வாழ்வு

 இரவொன்று வாராமல் பகலே வந்த

இன்பநாளைத் தருகின்ற வலிமை ஒன்றைத்,

தரவேண்டும் என்றெண்ணும்  பகலோன் தானும்.

தகவளந்து   தருதற்கோ இயல்வ தில்லை!

பரவோங்கும் வான்போற்றும் புவியின் மீதும்

பரந்துவாழும்  மக்களிடை  நிலவும் சூழல்,

குறைவாழ்ந்த திலையென்று  நினைத்திட்  டாலும்

குறைவிகுந்து தலைசாய்ந்தார் பலரே ஆமே.   

\

உலகில் சில நடப்புகள் நாம் நினைத்தபடி நடப்பதில்லை.  அதற்காக உடனே உயிரை மாய்த்துக்கொள்வது பரிதாபத்துக்குரியது ஆகும்.  இன்று காலையில் வந்த மணிலாச் செய்தியில் 24 வயதுடைய ஒரு தென் கொரிய சிறந்த நடிகை இறந்துவிட்டாள் என்று தெரிகிறது. ஏதோ ஒன்று நிறைவேறாமல் போனதாக இருக்கலாம்.  பாவம் இவள்.  இதுபோன்று உயிரை மாய்த்துக்கொண்டோர் பலர். இரங்கத் தக்க இதுபோல்வோருக்கு இப்பாடல் எழுதப்பட்டது. 


பொருள்:

தகவளந்து -  தகுதியை அளந்து அறிந்து 

பரவு ஓங்கும்  -  மிகுந்த பரப்புடைய

குறைவு இகுந்து - ஒரு குறைவினால் நிலை அழிந்து 

குறைவு ஆழ்ந்த -  குறைகள் பலவுடைய

இலை என்று - இல்லை என்று

தலைசாய்ந்தார் -  தற்கொலைக்கு ஆட்பட்டார்  ( இடக்கரடக்கல்)

You may share this post with your friends. though any social media.
Copyright is waived. 



மகமும் மிருகமும்


மக என்பது அம், அ, கு, அ என்ற எழுத்துக்களால் அறியப்படுவது ஆகும். இவை, அம் - அமைவும் , அ - அதில் தோன்றுதல், கு - சேர்க்கை, அ - சேய்மை விரிவு, இவற்றைக் குறுக்க, மக என்பது கிட்டுகிறது. கு அ என்ற கடை இரண்டும் க ஆயின.

மக என்ற  மகவு, மகன்,  மகள், மக்கள்  எனற் றொடக்கத்து  பல சொற்களிலும் மகரமே முன்னிற்க,  ஏன் அம் என்பது முதலில் நிற்கிறது என்று சொல்லுகிறோம் என்றால்,  அம் + அ  என்பது  ம + அ  எனில் மக என்ற சொல்லாகும்.  அம் அ கு என்பது ம அ  கு என்றாகி  மக என்று சொல்கிறோம்!  அமைப்பில் அங்கு சேர்ந்தது என்பது பொருள். இதுவே பிறப்பு ஆகும். இது ஒரு Reverse Formation through which certain words were formed. இதைப் பல ஆண்டுகட்கு முன்னே எழுதியிருக்கிறோம்.  ஆனால் இடைக்குறை முதலியவற்றுக்கு விரிவு கொடுத்ததுபோல் இந்தச் சொல்லமைப்பு முறைக்கு அவ்வளவு விரிவு கொடுக்கவில்லை. காரணம் ஒன்றுமில்லை, இடைக்குறைகள் அதிகம் இருந்தன என்பது தவிர.    தொகுப்பும் இங்கு இடைக்குறையில் அடக்கியே
சொல்லப்படுகிறது. அமக என்று அமைத்து அது சொல்லுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவது கண்டு,  அமக என்பதை மக என்று நாளடைவில் வழங்கினர் என்க.  இவ்வாறு செய்வது முதற்குறை என்பதால், இதில் இலக்கணத்தில்கூட இடமிருக்கிறது. நீங்கள் ஒரு கணக்கு எடுங்கள். மூன்று  குறில்கள், உயிராயினும் மெயயாயினும் தொடர்ந்து வரும்படியாக எத்தனை சொற்கள் உள்ளன என்று பாருங்களேன். இரண்டு உயிர், உயிர்மெய் வர அடுத்து ஒற்று வந்த சொற்கள் மிகுதியாக இருக்கவேண்டும்.  யாம் கணக்கெடுக்கவில்லை. ஓர் உய்த்துணர்வாகச் சொல்கிறேன்.

மகன் என்ற சொல்லைப் படைக்கும் முனைப்பு,   அமைவு  குறிக்கும் அம் என்ற தொடக்கத்திலிருந்து தமிழன் அமைத்தான் என்றாலும்,  வீண் நீட்டத்தை விரும்பாமல் ஒரு முறையைக் கையாண்டு சொல்லைக் குறுக்கினான்.  அதனால்  அதனால் சொல்  அமகன் என்று அமையாமல் மகன் என்றே சுருங்கி அமைந்தது.  அமைகன் என்றும் அவன் அமைக்கவில்லை.
 ஒவ்வொரு சொல்லையும் ஆய்ந்து ஒலிமுறை அமைப்பைப் புரிந்துகொள்ளூங்கள்.

சமஸ்கிருதத்தில் இன்னும் முன்னேற்றமாக,  ம, இர், உ, கு  அம் என்று அமைத்து மகம் என்பதை ம்ரு கம்  >  ம்ருகம் என்று அமைத்துக்கொண்டனர்.

நனகு சிந்த்தித்து  எனக்கு எழுதுங்கள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

You may share this post with your friends. though any social media.
Copyright is waived. 

 
















சனி, 8 மார்ச், 2025

வந்தனமும் வணக்கமும்.

 வந்தனம்,  வணக்கம் என்ற இரண்டு சொல்லையும்  இன்று ஆய்வு செய்வோம்.

வந்தனம் என்ற சொல்லின் முதலிரண்டு எழுத்துக்கள் வந்  என்பது.  வணக்கம் என்ற சொல்லின் வண  என்பது  உண்மையில் வண் என்ற அடியைக் கொண்டுள்ளது.   இதை  ஒலிமுறைப் படி அவிழ்ப்பதானால்  வண் + அ+ கு + அம் என்று பிரிக்கவேண்டும்.   ஏன் வண் என்பது அடியாகிறது என்று கேளுங்கள். வண் என்பது வள் என்பதன் திரிபு.  வள் என்பது உண்மையில் வளை என்ற சொல்லைப் பிறப்பித்த அடி.  வளை என்றால் கோணிக்கொண்டு என்று பொருள். வணக்கம் என்பது என்னவென்றால் தன்னினும் பெரியவனாய்  அல்லது தலைதாழ்த்தக்கூடிய மேன்மையுடைய ஒருவனின் முன் நாணிக்கோணி நின்று  தன்பணிவைத் தெரிவிப்பதுதான். பழங்கால மனிதன் தன்னைப் பிறனுக்கு சிறியோனாய்க் கருதித்தான் வணங்கினான்.    யாவரும் சமம் என்ற கருத்து அப்போது எந்த மன்பதையிலும் ( சமுதாயத்திலும்) இன்னும் தோன்றவில்லை. மன்+ பது + ஐ > மன்பதை.  அதாவது மனிதர் ஒருவருடன் பிறர் குறித்த எண்ணிக்கையினருடனாகப்  பதிவுகொண்டு  அல்லது உறவுகொண்டு ஒன்றுபட்டிருப்பது. பது, பதி, பதுங்கு, பொதி எல்லாம் உறவுற்ற சொற்கள்.

வந்தனம் என்ற சொல் எப்போது வணக்கம் என்ற சொல்லுடன் உறவு காட்டுகிறது என்றால்  :

வந்  >  வந்தனம்,

வண் >  வணக்கம் என்னும் போதுதான்.

வந்,  வண்  உண்மையில் ஒன்று அல்லது தம்முள் உறவு உடையவை.

எப்படி முடியும். :இணக்கம்

அன்பு என்ற சொல்லில் உள்ள அன் என்பதும்   அணுக்கம்  என்ற சொல்லில் உள்ள அண்  என்ற  அடியும் எப்படி ஒன்றாம் ஈர்ப்பினைக் காட்டுகின்றனவோ அங்கனம்  வண் என்பதும் வந்  என்பதும்  வளைவு காட்டுபவை.  இரண்டும் ஓரின எழுத்துக்கள்.  ந, ண இரண்டும் இனம் ஒன்றியவை.  இவை பெரிய வேறுபாடு  உடையவை அல்ல.

இன்னும் நீட்டிக்கொண்டு போகாமல்,  வந்தனம் என்பது வளைந்தனம் என்பது தான்  அன்றி வேறில்லை.  வண் என்பதும் அது.  இன்னும் விளக்கமாய்ப் பின் எழுதுவோம். வளைந்தனம் > (இதில் ளை குறுக்கினால்)  வந்தனம் ஆகிவிடுகிறது.  எவரும் சொல்லாத ஒன்றைக் கண்டு சொல்லும் போது அது ஆய்வு என்பதை விடக் கண்டுபிடிப்பு என்றுதான் சொல்லவேண்டும்..

இவ்வாறு  இவை உறவுச்சொற்கள்.  சமஸ்கிருதம் என்பது  தமிழின் அக்காள் தங்கை உறவுள்ள மொழி என்பதுதான் உண்மை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்,

Copyright for this post is waived.

You may share this through any social media.

[ This post had been attacked and errors had been found.  Now it has been re-edited ]


திங்கள், 3 மார்ச், 2025

சித்து சித்தர்

 இப்போது சித்து என்பதையும் தொடர்புடைய  சொற்களையும் கவனித்து  ஆய்வோம்.

முனிவர்கள் பலர் பரத கண்டத்தில் வாழ்ந்துள்ளனர்.  விசுவாமித்திரர் போலும் முனிவர்கள் பேராற்றல் காட்டிப் பெரும்புகழ் படைத்தவர்கள். இவர்களை நாம் பெரிய முனிவர்கள் என்று சொல்வோமானால்  பல்வேறு முனிவர்கள் அத்துணை ஆற்றல் போற்றல்களுக்கு இலக்காக இல்லாமல்  சிறுசிறு நிகழ்வுகள் மூலமே தங்கள் இறைத்தொடர்பினை வெளிப்படுத்தியவர்களும் இருந்துள்ளனர். இவர்களைச் சித்தர்கள் என்று மக்கள் போற்றியுள்ளனர்.

இது பேரரசர், சிற்றரசர் என்று அரசர்களை  வகைப்படுத்தியது போலவே யாகும். பெருமை சிறுமை என்று வகைப்படுத்தப்பட்ட இறையறிவர்கள் மட்டுமல்லர், மரங்களில் கூட இத்தகைய பாகுபாடுகள் நுழைந்துள்ளன.  மா மரம் என்பது ஒரு மரத்தின் பெயரென்றால்,  அரச மரம் என்பது அரசுமுறையோடு ஒப்பிட்டு வைக்கப்பட்ட பெயராகும் என்பது அறிக.  சித்தரத்தை அல்லது  சிற்றரத்தை என்ற பெயரையும் காண்க. பெருங்காயம் என்று ஒரு காயப்பொருளுக்குப் பெயர் உள்ளமை நீங்கள் அறிந்தது. இப்படிப் பெயர் புனைவது பெருவழக்கு ஆகும்.

சிறு > சிற்றர் என்பது சித்தர் என்று திரிந்துவிட்டது காணலாம். சித்தர் அறிந்து சொன்ன வைத்தியம் சித்தவைத்தியம் ஆயிற்று.  வைத்தியம் என்றால் வைத்து - கொஞ்சம் நீண்ட காலமாகத் தகுந்த சிகிச்சை யளித்துக் குணப்படுத்துவது என்று பொருளாயிற்று.

பார்த்து வியக்கத் தக்க சிறுசிறு  வித்தைகளை இந்தச் சித்தர்கள் செய்தார்கள். கொடுத்த உணவினை வீட்டுக் கூரைமேல் எறிந்து  "யானுமிட்ட தீ மூள்க மூள்கவே:" என்று சொல்ல,  கூரை தீப்பற்றி எறிந்த வியப்புச்செயல்  ஒரு வித்தை எனப்பட்டது.

வியத்தல்:  விய > வியத்தை>  ( இடைக்குறைந்து)  வித்தை ஆனது.  இது வியப்புக்குரியதைக் குறிக்கும்.  படிப்பு  பற்றிய வித்தை, மற்றொன்று.  அது வித்து என்னும் சொல்லினின்று பிறந்தது ஆகும்.

சித்தர் செய் விந்தைகள்,  சித்து எனப்பட்டது.  இது சிறு > சிற்று> சித்து என்று அமைந்த சொல்.

சின்> சிந்து என்பது  சிறிய அளவில் கொட்டும் நீர்குறிக்கும் சொல்.  மனத்துச் சிறிய எண்ணங்கள் சிந்தனை எனப்பட்டது.  தொடர்சிந்தனையாக இல்லாம ல் நீண்டு செல்லாத மனவினையாகும்.

சித்தர், சித்து என்பதை இவ்வாறு அறிக.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

ம்

ஞாயிறு, 2 மார்ச், 2025

Being Yourself and Sivarathri photo

 Yes just be yourselves at all times. This means also that you avoid external undue influences. That will lead to complete discovery of your own self.

[ On how to live life ]

Published in Facebook.

Also enjoy  Mr Kumaran being upayatharar at Sivarathri temple festival.




சிவராத்திரியில் திரு குமரன் அவர்கள்.

CEO  The Independent,  web paper (Singapore).

சனி, 1 மார்ச், 2025

சிவராத்திரி பிரசாதம் வழங்குதல்


 


ஏறத்தாழ  சுமார் ஐந்நூறு பேருக்குமேல்  பிரசாதம் உண்டு மகிழ்ந்தனர். அவர்களில் ஒரு பகுதியினரைப் படங்களில் காணலாம்.