வியாழன், 25 ஜூலை, 2024

வேதம் - ஐதரேய உபநிடதம். தமிழ்த் தொடர்பு

 இப்போது ஐதரேய உபநிடதம் என்ற சொல்லை விளக்குவோம்.

ஐ + தரு + ஏய உபநிடதம் என்பதைக் கவனிப்போம்.

ஐ என்பது தலைமை என்ற பொருளில் பலகாலமாக வழங்கிவரும் சொல்லாகும். இதை ஐயர் என்ற சொல்லிலிருந்து தெரிந்துகொள்வோம்.

ஐயர் என்ற சொல், தொல்காப்பியனார் காலத்தில் " குமுகாயத் தலைவர்"  ( சமுக முன்னணி மாந்தர் ) என்ற பொருளில் வழங்கிவந்தது. இத்தொடரை அல்லது சொல்லை, Leaders of the society என்று மொழிபெயர்த்தால் சரியாகவிருக்கும்.  இது இன்று உள்ள பொருளன்று.  தொல்காப்பியனார் காலத்தின் பொருள்.

பொய்யும்  வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப

என்று தொல்காப்பியம் சொல்கின்றது.

இதன் காரணமாக, ஐ என்ற முதற் பகவுக்கு முதன்மையான, மூத்த, முன்வரும் ஒளி உடைய என்று பொருள்கூற வேண்டும்.

தரு என்பது தருதல், பயத்தல், உண்டாக்குதல்.

ஏய்தல் என்பது இயைத்தல், கொண்டுபோய் இணைத்தல்.

உங்களுக்குப் பொருந்தும் பொருளை இவற்றிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். எம்முடன் பொருந்தினவரை யாம் இதை:  முதன்மையாய் உண்டாகிப் பொருந்திய ( ஏய்ந்த அல்லது இயைந்த) உபநிடதம் என்று எடுத்துக்கொள்வோம். இதுவே சரியானதாகும்.

ஏய என்பது இயைந்தது என்பதன் பொருண்மை உடையது.

இதற்குத் தலைப்பு கொடுத்தவர் ஆதிசங்கரப் பெருமானாக இருக்கலாம். அவர் தமிழர். தமிழ்ப்பெயரையே சூட்டியுள்ளார்.

வேதங்களை மக்களுடன் இயைத்தவன் தமிழன்.

மேலும் இதைப் பாடிய முனிவனும்  ( ஐதரேய முனிவன்) இற்றை நிலையில் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்ப. இதை ஆதிசங்கரப் பெருமானே பொருளெழுதிப் பெருமைப் படுத்தியுள்ளார்.

இதனால் சாதி என்பது இந்து மதத்தின் பிரச்சினை அன்று ( அல்ல) என்பது தெளிவாகிறது.  இதைப் பூதமாக்கியவன் பிரிட்டீஷ் வெள்ளைக்காரனே.

 சாதிகட்குச் சட்ட முலாம் பூசியது வெள்ளைக்காரன் ஆட்சியில்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்



கருத்துகள் இல்லை: