ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

கடைச் சாப்பாடு முடிந்தால் தவிர்

 கடைகளில்  சாப்பிடும்  போது-----  தம்பி,

கையுடன் கண்களும் நன்றாய்,

இடையிடை வைத்திடும்  உணவில் ---- நெடுங்

கவனமும்  கொண்டிட   வேண்டும்.


பூச்சிகள் வண்டுகள்  இருக்கும் ----  நோய்கள்

புசித்தபின்  போர்தரும்  உடலில்;

காய்ச்சல் தலைவலி  வாந்தி  --- எனக்

கண்டவை வந்துனைத் தாக்கும்.


வருமுன் காப்பதே  மேன்மை --- இன்றேல்

வந்தபின் பயன்சிறு பான்மை!

இருவளர்  காலம் காறும்  ---- உனக்கு

இல்லத்து உணவெனில் வான்மை.



வான்மை -  உயர்வு.

இருவளர்....... -  நீண்டகாலம், (வாழ்நாள்)

இன்றேல் -   இல்லாவிட்டால்

காறும்  -  வரை. (  வாழும் காலம் வரை என்பதுபோல் பொருள்)



இதை வாசித்து உணரவும்:

Woman claims she found cockroach in curry rice at Yishun eatery (msn.com)


கருத்துகள் இல்லை: