வியாழன், 5 டிசம்பர், 2013

அதிகாரக் கோதை மயக்கு

கோடி பொதுமக்கள் கொன்றவன்--  அதிகாரக்
கோதை மயக்குநீர் உண்டவன்!
தேடிப் பதைப்பவை செய்தவன் -- ‍‍‍ இனக்கொலை
தேர்ந்தவன் பாவத்தில் உய்தவன்.

அரியணை நீங்கிடா ஆணவன்-- புவி
அனைத்தும்  சொலக்கே ளாதவன்!
புரிந்துள போர்க்குற்றம் நீதிமுன்-- வைத்துப்
புகலவும் நெஞ்சொப்பி டாதவன்..

குற்ற மனைத்துக்கும் கொள்கலம்--  ‍‍‍‍இது
குழைவின்றிக் கண்டதுஇந்  நன்னிலம்!
இற்றைக் கியான்மட்டும் கண்டதோ!-- ஆக‌
இவன்யார் என்பது விண்டிலேன்.

கருத்துகள் இல்லை: