வெள்ளி, 6 டிசம்பர், 2013

நீ வேறு நான் வேறு...

நமக்குள் உள்ள‌
ஒற்றுமைகள் என்ன வென்று
உரைகல்லில் உரசிப் பார்ப்பதைவிட‌
வேற்றுமைகள் யாவை என்று
விரித்துப் பார்ப்பதே
உலக மக்களிடையே ஒரு
கலையாகி விட்டதென்பேன்!

இதனால்
உன்னுடன் நானில்லை,
என்னுடன் நீயில்லை,
நீ வேறு நான் வேறு...

ஒரே மாநிலத்து மக்களேகூட‌
வேறுபாடுகளை விரித்தறிந்து
விலகிவிட வேண்டுகின்றனர்.

நல்லதோ கெட்டதோ  இது!
நானும் நீங்களும் சொல்லமுடியுமோ?

காலமே முடிவினைக் கழறும்.

எது எப்படி ஆனாலும்
எல்லோர்க்கும் எல்லாம் இனிதாய் முடிந்து
இன்பமே பெருக வேண்டும்
இவ்வெண்ணமே
என்னில் தோன்றி
விண்ணைத் தாண்டும்.

கருத்துகள் இல்லை: