திங்கள், 26 ஆகஸ்ட், 2013

சொல்ல விழைந்தது


புதிதாகக் கவிபுனைந்த ஒருவருக்கு நான் சொல்ல விழைந்தது. ஒரு கவிதை வடிவில். 

ஒரு கவியாகத் தான்வரவேண்டும் --- சில
வரிபாடிப்  புகழ்பெறவெண்டும்  ---- என்று
குறியாகக்  களம்கண்டநல்லார்  -----நேரம்
சரியாகப் பயன்கொள்ளவேண்டும்.

தொடராகப் பலபாடல் பாடி ----- கவிக்
கடலாக உருவாதல் கூடும்--- எழுதல்
இடராகும் எனுமெண்ணம் கொண்டு --- விட்டு
விலகாத முனைப்பாற்றலுண்டேல்  


அருங்கவிகள்   பல்லோரின் வாழ்க்கை---தம்மில்
பெரும்பகுதி   தெளிவாகக் காட்டும்---- உண்மை
அருங்கனியும் இதுவன்றி  யாது? -- உணர்ந்தே
அடைவீரே வருங்கால ஏற்றம்.

கருத்துகள் இல்லை: