வியாழன், 29 ஆகஸ்ட், 2013

Commending another poet

யாது வரைந்துள்ளார் யாதவக் கண்ணனைத்
தீதகலப் போற்றும்சின் னக்கண்ணன், பாதகமோ
யாதுமில்லை! பார்ப்போம்! யமுனா நதிதன்னின்
,தீரமில்லை ஆகையால் தூரமில்லை என்றுவர
செந்தா மரைபோலும் அந்தாதி கண்மலர்ந்து
வந்தேனை வாவென்று கூவி வரவேற்க
உள்ள மகிழ்வினை உள்ள படியுரைத்தேன்
தெள்ளு தமிழ்ப்பாட்டி னால்




இது இன்னொரு கவிஞரைப் பாராட்டி எழுதியது,  அவர் அந்தாதிப் பாடல் புனைந்திருந்தார்.

கருத்துகள் இல்லை: